Monday 16 December 2013

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்-ஹங்கேரிப் பெண்

ஆயிஷா - ஹங்கேரி
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின்..
இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக புதிதாய் ஏற்றுக்கொள்ளும் சகோதர/சகோதரிகள் சந்திக்கக் கூடிய சவால்கள் சொல்லி மாளாதது.
சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக…
“என் பெயர் ஆயிஷா. ஹங்கேரியின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவள். நான் இஸ்லாத்தைப் பற்றி என் மேல்நிலை வகுப்பில் படித்திருக்கிறேன், ஏனென்றால் ஹங்கேரி சுமார் 150 ஆண்டுகள் துருக்கியின் ஆக்கிரமைப்பில் இருந்த நாடு.
பிறகு, பல்கலை கழகத்தில் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) வகுப்பில் சேர்ந்த போது நிறைய வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களை சந்தித்தேன்.
ஏன் முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதில் இவ்வளவு பெருமை கொள்கின்றனர் என்பதை அறிய எப்போதுமே மிகுந்த ஆவல்.
நான் கத்தோலிக்க பின்னணியை கொண்டவள், நல்ல மதம்தான், ஆனால் எப்போதுமே என் மதத்தை பற்றி மனதில் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தேன், அதுமட்டுமல்லாமல் ஒரு சில விசயங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதாரணத்துக்கு, எப்படி கடவுளுக்கு மகன் இருக்க முடியும், அதுபோல திரித்துவ கொள்கையை (Trinity) என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒருமுறை, என் நண்பர்களுடன் இரவு உணவு உட்கொண்டிருந்தபோது, பாங்கு ஆரம்பித்தது. ஒரு நண்பர் அதனை நிறுத்துமாறு கூறினார், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அது என்னை மிகவும் கவர்ந்தது, நிச்சயமாக அதில் ஏதோ ஒன்று என் இதயத்தை தொடுவதாக உணர்ந்தேன்.
பிறகு, கோடைக்காலத்தில், நான் ஏன் இணையத்தளத்திலிருந்து குரான் சம்பந்தபட்ட ஒரு பதிவை பதிவிறக்கம் (Download) செய்தேனோ தெரியவில்லை. அதனை நான் அரபியில் கேட்டுக்கொண்டே ஆங்கிலத்தில் படித்தேன். பிறகு, நான் இஸ்லாமை பற்றி நிறைய சிந்திக்க துவங்கிவிட்டேன், அதுமட்டுமல்லாமல் இஸ்லாம் தொடர்பான நிறைய நூல்களை படித்தேன்.
இரண்டு மாத தீவிர யோசனைக்கு பிறகு இறுதியாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என் இரு நண்பர்கள் முன்பாக ஷஹாதா கூறினேன்…
“வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவன் தூதரென்றும் சாட்சியம் கூறுகிறேன்”
நான் என் கலாச்சாரத்துக்கு எதிராகவும் என் குடும்பத்திற்கு எதிராகவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன், குறிப்பாக என் தாயாருக்கு இதில் சுத்தமாக உடன்பாடு இல்லை.
நன்நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில நாட்களில் ரமலான் மாதம் வந்தது. இஸ்லாத்தில் என்னுடைய புது வாழ்வை ரமலான் மாதத்தில் இருந்து தொடங்குவதென முடிவெடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ்…ரமலான் மாதத்தை வெற்றிகரமாக கடந்தேன்.
ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதியிலிருந்து தொழ ஆரம்பித்தேன். துவக்கத்தில் எனக்கு மிக கடினமாக இருந்தது, ஏனென்றால் என்னை சுற்றி இருந்த முஸ்லிம்கள் யாரும் இஸ்லாத்தை சரிவர பின்பற்றவில்லை, அதனால் நான் யாரிடமும் கேட்கவில்லை.
எப்படி தானாக தொழுவது என்று இணையதளங்களில் இருந்து கற்றுக்கொண்டேன், ஏனென்றால், யாரும் எனக்கு எப்படி தொழ வேண்டும் என்றோ அல்லது உளு எப்படி செய்ய வேண்டும் என்றோ அல்லது இஸ்லாத்தின் சட்டத்திட்டங்களையோ சொல்லித் தரவில்லை.
ஒருமுறை என் நண்பர் ஒருவர் சொன்னது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. அவர் கூறினார், உன்னால் நிச்சயமாக இஸ்லாத்தை புரிந்து கொள்ள முடியாது, ஏனென்றால் நீ முஸ்லிமாக பிறக்கவில்லை என்று”.
இப்படி சொன்ன அந்த சகோதரர் மட்டும் என் கையில் சிக்கினார்…… இறைவன் அவருக்கு நல்லறிவை அளிப்பானாக…ஆமின்
“நான் ரமலானில் நோன்பு நோற்க விருப்பப்படுகிறேன் என்று நான் அவரிடம் கூறியபோது, அவர் கூறினார், ரமலான் என்பது பசியோடு இருப்பது மட்டும் அல்ல என்று. இது நடந்தபோது நான் இஸ்லாத்திற்கு மிக புதியவள், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. அப்போது நான் மிகவும் பயந்து விட்டேன்
* என்னால் அரபியில் தொழ முடியாமலேயே போய்விட்டால் என்ன செய்வது?
* என்னால் சரியாக தொழ முடியாவிட்டால் என்ன செய்வது?
அதுமட்டுமல்லாமல் என்னிடம் ஹிஜாபோ, தொழுகை விரிப்போ கூட இல்லை, உதவி செய்யவும் யாருவில்லை. மிகவும் பயந்து விட்டேன்… ஆனால், நான் தொழ ஆரம்பித்தபோது, இறைவன் நிச்சயமாக இப்போது என்னைப் பார்த்து புன்னகைத்து கொண்டிருப்பான் என்றே நினைத்தேன்.
ஏனென்றால்,சூராக்களையும் தொழும் முறைகளையும் ஒரு தாளில் எழுதிக் கொள்வேன், பின்னர் அந்த தாளை என் வலது கையில் வைத்துக் கொண்டு சத்தமாக படிப்பேன், பிறகு ருக்கூ செய்வேன், அப்படியே படிப்பேன்… இப்படியே தொடரும்… நிச்சயமாக நான் செய்வது வேடிக்கையாய் இருக்கிறதென்று எனக்கு தெரியும்.
பிறகு வெற்றிகரமாக சூராக்களை அரபியில் மனப்பாடம் செய்துக்கொண்டேன், அதன் பிறகு பிரச்சனை இல்லை. பிறகு facebook வந்தேன், நிறைய நண்பர்களும், சகோதரிகளும் கிடைத்தார்கள். அந்த சகோதரிகளிடமிருந்து நிறைய அன்பையும் துணிவையும் பெற்றேன். பிறகு முஸ்லிம் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவர்தான் எனக்கு ஹிஜாபும், தொழுகை விரிப்பும், ஒரு இஸ்லாமிய நூலையும் பெற்றுத் தந்தார். அதுமட்டுமல்லாமல், ஜோர்டானிலிருந்து என் முதல் அரபி குரானை தபால் மூலம் பெற்றேன், ஏனென்றால் இங்கு அதை வாங்கமுடியாது. இப்போது சுமார் ஒரு வருடமாக நான் ஹிஜாப் அணிகிறேன். என் தாயுடன் மிக கஷ்ட காலங்களை கடந்து வந்தேன். அவர் என்னிடம் கூறுவார், நீ தீவிரவாதி ஆகிவிடுவாய் என்று. எப்படி என் பழைய மதத்தை விட்டு விலகி வந்தேனோ, அதுபோல என் தாயாரையும், என் நாட்டையும் விட்டு விலகிவிட எண்ணினேன். அவர் எல்லா பன்றி இறைச்சிகளையும் குளிர் சாதன பெட்டியில் வைத்து விடுவார், நான் அவற்றை உண்ண மறுப்பேன், பிறகு அது அவருக்கும் எனக்குமிடையே பெரும் வாக்குவாதமாக மாறிவிடும். அவரால் நான் தொழுவதையோ, ஹிஜாப் அணிந்திருப்பதையோ பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால் நான் மாடியில் என் அறையில் தொழுதுக் கொள்வேன். நான் ஹிஜாப் அணிந்திருக்கும்போது என்னை திரும்பிக்கூட பார்க்கமாட்டார், அப்போது கூறுவார் “நான் ஒரு கிருத்துவ மகளைத் தான் பெற்றெடுத்தேன், ஹிஜாப் அணிந்த முஸ்லிமை அல்ல” என்று…
ஆக, எங்களுக்குள் கடுமையான பிரச்சனைகள். ஆனால் நான் எப்பொழுதும் என் தாயாரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில்லை. அல்ஹம்துலில்லாஹ்…. இப்பொழுது என் தாயார் அமைதியாகிவிட்டார், நான் இஸ்லாத்தை தழுவியதையும் ஏற்றுக்கொண்டு விட்டார். அதற்காக நான் அல்லாஹ்விற்கு நன்றி சொல்கிறேன். இப்போதெல்லாம் நான் ஹிஜாபுடனே வெளியே செல்கிறேன், என் தாயாரும் ஒன்றும் சொல்லுவது இல்லை.
என் தந்தையுடன் நான் என் வாழ்நாளில் பேசியதே இல்லை, அவரும் என்னைப் பார்க்க விரும்பியதில்லை. ஆனால் இப்போதோ, இஸ்லாமினால், நான் அவரிடம் நெருங்க ஆரம்பித்திருக்கிறேன், அதனால் இப்போதெல்லாம் அவர் எங்களை அடிக்கடி வந்து பார்க்கிறார்.
ஆம், என் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய சோதனை, ஆனால் அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லுகிறேன், அதுமட்டுமல்லாமல் எனக்கு பொறுமையும் நம்பிக்கையும் இருக்கிறது. கியாமத் நாளில் நான் அவர்களுக்கு நன்றி உடையவளாய் இருப்பேன்.
நான் மென்மேலும் என்னை தூய்மைப்படுத்திக்கொள்ளவும், என் மார்க்கத்தை பற்றி அறிந்து கொள்ளவும் முயற்சி செய்கிறேன். அல்லாஹ் என் மீது என்ன விதித்திருக்கிறானோ அதுதான் நடக்கும். அதனால் இறைவன் எனக்கு அளித்த இந்த வாழ்வை அழகான முறையில் வாழவே விரும்புகிறேன்.
நான் இப்போது டெப்ரசென்னில் (Debrecen, the second largest city in Hungary) மற்றவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் ஒரு பணி திட்டத்தை துவங்கியுள்ளேன், அது, மக்களிடமிருந்து, ஏற்கனவே பயன்படுத்திய உடைகளை சேகரித்து இங்குள்ள அகதிகள் முகாமில் இருக்கும் மக்களுக்கு கொடுப்பதாகும். யுத்தங்களினால் வீடில்லாத நிறைய முஸ்லீம்களும் இங்கு இருக்கின்றனர். அதனால், உடைகளை சேகரித்து அங்கு சென்று அவர்களுக்கு கொடுத்தோம். அங்கு உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாகிஸ்தானி ரொட்டிகள் தயாரித்து கொடுத்தேன், என்னுடைய இந்த செயல் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, அதனை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.
முன்பெல்லாம் எனக்கு தொந்தரவு தரும் வகையில் யாராவது பேசினால் மிகவும் கோபப்படுவேன், ஆனால் இப்போதோ, நான் போகுமிடமெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாய் இருக்க விரும்புகிறேன்.
அதுமட்டுமல்லாமல்,இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறவர்களுக்கும்,புதிதாய் ஏற்றவர்களுக்கும் வழிகாட்ட முயற்சிக்கிறேன். ஒருநாள் இங்கு, புதிதாய் இஸ்லாத்தை தழுவிய இரண்டு ஹங்கேரிய சகோதரிகளை சந்தித்தேன். அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்களையும், என்னுடைய தொழுகை விரிப்புகளையும், குரானையும் கொடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ், நாங்கள் மூவரும் சேர்ந்தே தொழுதோம், அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
முஸ்லிம்களாகிய நாங்கள் அருமையானவர்கள், நட்பானவர்கள், நல்ல இதயத்தை உடையவர்கள் என்ற பிம்பத்தை விட்டுச் செல்லவே முயற்சிக்கிறேன்.
நான் இஸ்லாத்தை தழுவி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. நான் இப்போது, குரானை ஓதுவதற்காக அரபி கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது குரானை ஹங்கேரி மொழியில் படிக்கிறேன், தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுகிறேன், குரானையும் சுன்னாவையும் சரியாக பின்பற்ற முயற்சிக்கிறேன், இஸ்லாத்தை மெம்மேலும் புரிந்து கொள்ள நிறைய நூல்களை படிக்கிறேன்……

Thursday 12 December 2013

இஸ்லாத்தின் கொள்கைகள் அரபு நாட்டுக்கு அறிமுகமாகிறது




இஸ்லாத்தின் கொள்கைகள் அரபு நாட்டுக்கு அறிமுகமாகிறது, இறைவனின் தூதராக அறியப்பட்ட முகமது நபி (ஸல்) அவர்கள் தான் அறிமுகபப்டுத்திய கொள்கைக்காக தன் சொந்த மக்களால்மிகவும் கொடூரமான முறையில் மக்கா நகரில் கொடுமைப்படுத்தப்படுகிறார். அந்த நகரின் அன்புக்கு உரியவாராய் 42 வருடங்கள் வாழ்ந்து வந்த நபிகள் நாயகம் அவர்கள் ,தான் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு விரட்டப்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று இஸ்லாம் அடிமைத்தனத்தை ஒழிக்கவேண்டும் என்கிறது. எல்லா மக்களும் சரி நிகர் சமமானவர்களே என்றது. இன வேறுபாடு கூடாது என்றது. அடிமை முறைகளை சமுதாயத்திலுருந்து வேர் அறுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக ,ஒவ்வொரு இறைக் காரியங்களுக்கும் பகரமாக அடிமைகளை விடுதலை செய்து அவர்களின் உரிமைகளை கொடுக்கவேண்டும் என்பதுதான். அந்த காலகட்டதில் அடிமை வைத்திருப்பது பெரும் செல்வம் வைத்திருப்பது போன்றதாகும், பெருமானார் முஹமது நபி (ஸல்) அவர்களின் அன்பு தோழர்கள் அடிமைகளை விடுதலை செய்து ,உரிமையை விடுவதற்கு போட்டி போட்டனர். இன்னும் நபி அவர்கள் சமுதாயத்தின் கொடிய நோயாக இருக்கும் இன வேறுபாடுகளை களைவதற்கு தானே ஒரு முன்மாதிரியாய் மற்ற குலத்தவர்களிடம் திருமண உறவு செய்து கொண்டார். மேலும் தனது தோழர்களையும் கலப்புத்திருமனங்கள் செய்து கொள்ள ஆர்வம் மூட்டினார். அதன் மூலம் இன வெறுப்புகளை இஸ்லாமியர்களிடமிருந்து முழுமையாக களைந்தார். குல பெருமை கொள்வதை இறைவன் வெறுப்பதாக இஸ்லாமியர்களிடம் அறிவுறுத்தி ,கடும் எச்சரிக்கை செய்தார்கள். அடிமைத்தனம் ,இன வேறுபாடுகள்இல்லாத இஸ்லாம் அராபிய கண்டம் முழுவதும் வேகமாகப்பரவியது . முகமது நபி அவர்களின் மறைவுக்குப் பிறகு ஆட்சிபுரிந்த அரபு நாடுகளின் முதல் கலிஃபா (மக்கள் பிரதிநிதி) அபுபக்கர் (ரலி) அவர்களின் காலத்திலேயும், இரண்டாம் கலிஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்திலும் அடிமைத்தனங்களை முன் எப்பொதும் இல்லாத அளவிற்க்கு அரபு மன்னை விட்டு விரட்டினர். அதில் உமர் (ரலி) அவர்கள் அடிமைதனத்தை அரபு மன்னை விட்டு வேறறுக்க மிகவும் சிரத்தை கொண்டார்கள். அடிமைகளை முழுவதுமாய் விடுதலை செய்யும் சட்டத்தினை கொண்டுவந்தார், இன்னும் அடிமைகளை விடுதலை செய்வோருக்கும், அடிமைகளாய் இருந்தவர்களுக்கும் அரசு நிதிகளும் ,சன்மானங்களும் கொடுத்து மக்களை ஊக்குவித்தனர். இதற்கு முன்னால் அடிமைகளாய் இருந்தவர்களுக்கெல்லாம் அவர்களின் தகுதிகள் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இன்னும் ஒரு படி மேலே இஸ்லாமியர்களின் தலைவர்கள் என்று சொல்லக்கூடிய மார்க்கஅறிஞர்களாக்கப்பட்டனர். தங்களுக்குள் திருமண உறவுகள் மேற்கொண்டனர். இன்னும் தங்களிடம் பணிக்கு இருக்கும் வேலைக்காரர்களுக்கு தன் எஜமானர்கள் மிகவும் மரியாதைக்கொடுக்கும் படியும் , அவர்களை தங்களுக்கு சமமாகாத்தான் நடத்தபட வேண்டும் என்றார் ஆட்சி தலைவர் உமர் (ரலி) அவர்கள். அதற்ககு தானே முன் மாதிரியாய் இருந்தார். எஜமானர்களும் ,பணியாளர்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும் என்பது போன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அடிமைகளிடம் உறவுகள் கொண்டு வாழ்ந்து வருவதை தடை செய்து அவர்களை திருமணம் செய்து கண்ணியம் அளித்து அவர்களின் உரிமைகளை நிறைவேற்றும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. உமர் அவர்களின் காலத்திலேயே பரந்து விரிந்த அரபு உலகம் முழுவதும் ஒரு அடிமை கூட இல்லை என்று பிரகடனபடுத்தும் அளவிற்கு அடிமை ஒழிப்பு வேலைகள் செய்து முடிக்கப்பட்டது. 1400 வருடஙகளுக்கு முன் தொடங்கிய அடிமை சாதிய ஒழிப்பு இன்று வரை இசுலாத்தில் தொடர்ந்து வருகின்றது. அதற்கு காரணம் இஸ்லாத்தின் பார்வை ஆன்மீகத்தினைத் தாண்டி சமூக சீர்திருத்ததின் மீது கொண்ட ஆளுமையாகும். அதன் வீரியம் கொஞ்சமும் குறையாமல் ஆன்மீகத்துடன் ஒன்றாக பினைக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் தாண்டி பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதனால் தான் உலகம் போற்றும் உத்தமர் காந்தியும் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அமையும் அரசு உமரின் ஆட்சியை போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார். சமூகதின் நோய் சாதியம் ,அச்சாதியின் பிறப்பிடமே மதங்கள் ,எனவே சமூக விடுதலை பெற ,சாதியம் ஒழிக்கப்படவேண்டும் ,அதனாலே எல்லா மதங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற பகுத்தறிவாளன் அறியாமை இருள் அகற்ற வந்த தந்தை பெரியார் கூட சாதியம் அழித்து ,சமூக விடுதலை காண இஸ்லாம் ஒன்றே அருமருந்து என்றார். அடிமைத்தனம் கலைந்து , ஏகாதிபத்திய ,சாதிய விலங்குகளை உடைத்தெரிந்து உண்மையான சமூக விடுதலை காணதுடிக்கும் ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்திருக்கும் மத,கலாச்சார கோட்பாடுகளை சுயஆராய்ச்சி செய்வது இன்றைய காலகட்டத்தின் தேவையாகும். 

இஸ்லாத்தின் கொள்கைகள் அரபு நாட்டுக்கு அறிமுகமாகிறது, இறைவனின் தூதராக அறியப்பட்ட முகமது நபி (ஸல்) அவர்கள் தான் அறிமுகபப்டுத்திய கொள்கைக்காக தன் சொந்த மக்களால்மிகவும் கொடூரமான முறையில் மக்கா நகரில் கொடுமைப்படுத்தப்படுகிறார். அந்த நகரின் அன்புக்கு உரியவாராய் 42 வருடங்கள் வாழ்ந்து வந்த நபிகள் நாயகம் அவர்கள் ,தான் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு விரட்டப்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று இஸ்லாம் அடிமைத்தனத்தை ஒழிக்கவேண்டும் என்கிறது. எல்லா மக்களும் சரி நிகர் சமமானவர்களே என்றது. இன வேறுபாடு கூடாது என்றது. அடிமை முறைகளை சமுதாயத்திலுருந்து வேர் அறுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக ,ஒவ்வொரு இறைக் காரியங்களுக்கும் பகரமாக அடிமைகளை விடுதலை செய்து அவர்களின் உரிமைகளை கொடுக்கவேண்டும் என்பதுதான். அந்த காலகட்டதில் அடிமை வைத்திருப்பது பெரும் செல்வம் வைத்திருப்பது போன்றதாகும், பெருமானார் முஹமது நபி (ஸல்) அவர்களின் அன்பு தோழர்கள் அடிமைகளை விடுதலை செய்து ,உரிமையை விடுவதற்கு போட்டி போட்டனர். இன்னும் நபி அவர்கள் சமுதாயத்தின் கொடிய நோயாக இருக்கும் இன வேறுபாடுகளை களைவதற்கு தானே ஒரு முன்மாதிரியாய் மற்ற குலத்தவர்களிடம் திருமண உறவு செய்து கொண்டார். மேலும் தனது தோழர்களையும் கலப்புத்திருமனங்கள் செய்து கொள்ள ஆர்வம் மூட்டினார். அதன் மூலம் இன வெறுப்புகளை இஸ்சலாமியர்களிடமிருந்து முழுமையாக களைந்தார். குல பெருமை கொள்வதை இறைவன் வெறுப்பதாக இஸ்லாமியர்களிடம் அறிவுறுத்தி ,கடும் எச்சரிக்கை செய்தார்கள். அடிமைத்தனம் ,இன வேறுபாடுகள்இல்லாத இஸ்லாம் அராபிய கண்டம் முழுவதும் வேகமாகப்பரவியது . முகமது நபி அவர்களின் மறைவுக்குப் பிறகு ஆட்சிபுரிந்த அரபு நாடுகளின் முதல் கலிஃபா (மக்கள் பிரதிநிதி) அபுபக்கர் (ரலி) அவர்களின் காலத்திலேயும், இரண்டாம் கலிஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்திலும் அடிமைத்தனங்களை முன் எப்பொதும் இல்லாத அளவிற்க்கு அரபு மன்னை விட்டு விரட்டினர். அதில் உமர் (ரலி) அவர்கள் அடிமைதனத்தை அரபு மன்னை விட்டு வேறறுக்க மிகவும் சிரத்தை கொண்டார்கள். அடிமைகளை முழுவதுமாய் விடுதலை செய்யும் சட்டத்தினை கொண்டுவந்தார், இன்னும் அடிமைகளை விடுதலை செய்வோருக்கும், அடிமைகளாய் இருந்தவர்களுக்கும் அரசு நிதிகளும் ,சன்மானங்களும் கொடுத்து மக்களை ஊக்குவித்தனர். இதற்கு முன்னால் அடிமைகளாய் இருந்தவர்களுக்கெல்லாம் அவர்களின் தகுதிகள் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இன்னும் ஒரு படி மேலே இஸ்லாமியர்களின் தலைவர்கள் என்று சொல்லக்கூடிய மார்க்கஅறிஞர்களாக்கப்பட்டனர். தங்களுக்குள் திருமண உறவுகள் மேற்கொண்டனர். இன்னும் தங்களிடம் பணிக்கு இருக்கும் வேலைக்காரர்களுக்கு தன் எஜமானர்கள் மிகவும் மரியாதைக்கொடுக்கும் படியும் , அவர்களை தங்களுக்கு சமமாகாத்தான் நடத்தபட வேண்டும் என்றார் ஆட்சி தலைவர் உமர் (ரலி) அவர்கள். அதற்ககு தானே முன் மாதிரியாய் இருந்தார். எஜமானர்களும் ,பணியாளர்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும் என்பது போன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அடிமைகளிடம் உறவுகள் கொண்டு வாழ்ந்து வருவதை தடை செய்து அவர்களை திருமணம் செய்து கண்ணியம் அளித்து அவர்களின் உரிமைகளை நிறைவேற்றும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. உமர் அவர்களின் காலத்திலேயே பரந்து விரிந்த அரபு உலகம் முழுவதும் ஒரு அடிமை கூட இல்லை என்று பிரகடனபடுத்தும் அளவிற்கு அடிமை ஒழிப்பு வேலைகள் செய்து முடிக்கப்பட்டது. 1400 வருடஙகளுக்கு முன் தொடங்கிய அடிமை சாதிய ஒழிப்பு இன்று வரை இசுலாத்தில் தொடர்ந்து வருகின்றது. அதற்கு காரணம் இஸ்லாத்தின் பார்வை ஆன்மீகத்தினைத் தாண்டி சமூக சீர்திருத்ததின் மீது கொண்ட ஆளுமையாகும். அதன் வீரியம் கொஞ்சமும் குறையாமல் ஆன்மீகத்துடன் ஒன்றாக பினைக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் தாண்டி பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதனால் தான் உலகம் போற்றும் உத்தமர் காந்தியும் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அமையும் அரசு உமரின் ஆட்சியை போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார். சமூகதின் நோய் சாதியம் ,அச்சாதியின் பிறப்பிடமே மதங்கள் ,எனவே சமூக விடுதலை பெற ,சாதியம் ஒழிக்கப்படவேண்டும் ,அதனாலே எல்லா மதங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற பகுத்தறிவாளன் அறியாமை இருள் அகற்ற வந்த தந்தை பெரியார் கூட சாதியம் அழித்து ,சமூக விடுதலை காண இஸ்லாம் ஒன்றே அருமருந்து என்றார். அடிமைத்தனம் களைந்து , ஏகாதிபத்திய ,சாதிய விலங்குகளை உடைத்தெரிந்து உண்மையான சமூக விடுதலை காணதுடிக்கும் ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்திருக்கும் மத,கலாச்சார கோட்பாடுகளை சுயஆராய்ச்சி செய்வது இன்றைய கால  கட்டத்தின் தேவையாகும்.

Thursday 5 December 2013

சகோதரர் சுரேஷ் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்!!





இஸ்லாத்தை எதிர்த்து ஓராயிரம் சதி திட்டங்கள் ஓவ்வொருநாளும் அரங்கேறினாலும்

ஆதரிக்கும் அலைகள் ஓய்வதில்லை 

இதன் வரிசையில் சகோதரர் சுரேஷ் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்!! 

தன் பெயரை "சபியுல்லாஹ்" என்றும் மாற்றி கொண்டார்...

☆☆ அல்லாஹு அக்பர்☆☆

அலைகள் தொடரும்...

இஸ்லாத்தின் எதிரிகள் மனதை திடப்படுத்தி கொள்ளட்டும் ...

Wednesday 27 November 2013

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!


1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.
4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள். இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.
8. குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.
9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது.
11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.
12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
13. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.


மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்; அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி!



14. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.


15. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

16. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

17. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

18. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

19. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

20. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

21. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

22. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

Saturday 23 November 2013

நபிகள் நாயகத்தை வசைபாடி படம் எடுத்தவர் நபியின் மஸ்ஜிதில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதார்




நபிகள் நாயகத்தை வசைபாடி படம் எடுத்தவர்  நபியின் மஸ்ஜிதில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதார்

இந்த ஆண்டு ஹஜ்ஜீ கடமையை நிறைவேற்றியவர்களில் குறிப்பிட தக்கவர் ஹோலன்ட் நாட்டை சார்ந்த அர்னோல்ட் என்பவர் இவர் சினிமா பட தயாரிப்பாளர் ஆவார் இவர் நபிகள் நாயகத்தை வசை பாடும் விதமாக திரைபடம் தயாரித்து வெளியிட்டு அதனால் முஸ்லிம்களின் எதிர்ப்பிர்கும் கோபத்திர்கும் உள்ளானவர்

முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்ட பிறகு அவர் சிந்திக்க தொடங்கினார் முஹம்மது நபியை பார்க்காத நிலையிலும் அவர் இறைவனடி சேர்ந்து 1400 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவரின் மீது அளவற்ற அன்போடு இன்னமும் முஸ்லிம் சமுதாயம் உள்ளதே அது ஏன்? என்ற கேள்விக்கு விடை தேடி நபிகள் நாயகத்தை பற்றி படிக்க தொடங்கினார் படித்து முடித்த பிறகு அவர் செய்த தவறை உணர்ந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்

அவர் மக்கமா நகரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பின் வருமாறு கூறினார்

இந்த மண்ணில் கால் பதித்த திலிருந்து நான் அழுது கொண்டே இருக்கிறேன் அழுது புலம்பி எனது இறைவனிடம் நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன் நபிகள் நாயகத்தை வசை பாடி திரைபடம் எடுத்த குற்றத்திர்கு மன்னிப்பு கோரியே நான் இங்கு வந்துள்ளேன்

இப்படி கூறிய அவர் எந்த நபியை வசை பாடி படம் எடுத்தாரோ அந்த நபியின் மஸ்ஜிதிலும் அமர்ந்து தனது தவறை நினைத்து வருந்தி தேம்பி தேம்பி அழுததாக அல் உகாள் பத்திரைகையின் செய்தி கூறுகிறது


இந்த மார்கத்தை எதிர்ப்பவர்கள் சிந்திக்க தொடங்கும் போது இந்த மார்க்கம் தான் அவர்களுக்கு புகலிடமாக மாறுகிறது என்பதர்கு மற்றோரு எடுத்து காட்டாக ஹோலன்ட் நாட்டை சார்ந்த அர்னோல்ட் திகழ்கிறார்!


Friday 15 November 2013

முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!






    அங்காரா:இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து 

    இயேசு(ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான 
    பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது.

    பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்த நூல் 12 ஆண்டுகளாக 
    துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் 

    பர்ணபாஸ் இயேசுவின் முக்கிய சீடராவார்.
    இந்த நூலை பார்ப்பதற்கு 16-வது போப் பெனடிக்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.
    இறுதி தூதர் முஹம்மது நபியின் வருகையை குறித்தும், இயேசுவின் 
    இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த நூலின் உள்ளடக்கம், 
    தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும் கருத்துக்களுடன்
    முரண்படுவதால், கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது
    என்று துருக்கியின் கலாச்சார-சுற்றுலா துறை அமைச்சர் உர்த்துக்ரூல் குனாய்
    செய்தியாளர்களிடம் கூறினார்.யேசு ஆரம்ப    காலக்கட்டத்தில் கூறிய கட்டளைகளும், முன்னறிவிப்புகளும்
    விலங்கின் தோலில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் அடங்கியுள்ளன. இதில்
    மிகவும்முக்கியத்துவம் வாய்ந்ததுதான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்பாகும். யேசு பேசிய மொழியான ஆராமிக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 12 ஆண்டுகளுக்கு முன்பு கள்ள கடத்தல்காரர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது துருக்கி போலீஸ்
    கண்டுபிடித்தது. இந்த புத்தகத்தின் மதிப்பு 22 மில்லியன் ஆகும். இந்த நூலின்

     ஒரு பக்கத்திற்கான நகலுக்கு 2.4 மில்லியன் டாலர் மதிப்பாகும்.

    யேசு(இறைத்தூதர் ஈஸா(அலை)) அவர்கள் இறுதி தூதர் முஹம்மது

     நபி(ஸல்) அவர்களை குறித்து தனது சீடர்களிடம் முன்னறிவிப்பு

     செய்துள்ளார். இறுதி தூதர் வரும் வேளையில் அவரை நம்பி ஏற்றுக்கொள்ள

     வேண்டும் என்று யேசு கூறியுள்ளார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.


    Wednesday 4 September 2013

    இதயத்திற்கு இதமான பொருட்களின்


    இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான் ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.
    பொதுவாக மாரடைப்பால் மரணம் ஏற்படுவதற்கு இதயக் குழாய்களில் ரத்தம் உறைதலே காரணம். ரத்தம் உறையாமல் இருக்க, ‘பிளாவனாய்டு’ என்ற வேதிப்பொருள் உதவுகிறது.
    ரத்தத் தட்டுகள் ஒன்று சேருவதை பிளாவனாய்டு தடுப்பதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனவேதான் பிளாவனாய்டு கலந்த ஆஸ்பிரின், இதயநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
    இத்தகைய உயிர்காக்கும் பிளாவனாய்டுகள் திராட்சையில் ஏராளமாக உள்ளதால், மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களைத் தடுப்பதில் திராட்சை பெரும் பங்காற்றுமென ஜான் போல்ட்ஸ் தெரிவிக்கிறார்.
    இதய நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ஆஸ்பிரின் அளவைக் குறைத்து திராட்சை ரசம் அருந்தக் கொடுக்கலாமென அவர் பரிந்துரைக்கிறார்.
    பொதுவாக திராட்சை ரசத்தில் தயாராகும் ஒயினில் இந்த பிளாவனாய்டு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், போதை தரும் ஒயினை ஒரு மருந்தாகப் பரிந்துரைக்க முடியாத நிலை இருந்தது.
    இப்போது திராட்சை ரசத்தில் அதே அளவு பிளாவனாய்டு இருப்பது தெரிய வந்துள்ளதால், தாராளமாக அது ஆஸ்பிரினின் இடத்தைப் பிடிக்கலாம். காதல் ரசத்தால் பலவீனப்பட்ட இதயத்தை, இனி திராட்சை ரசத்தால் பலப்படுத்தலாம்!

    Saturday 20 April 2013

    அமெரிக்கக் கண் மருத்துவரை கவர்ந்த இஸ்லாம்


    எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் ஈமான் என்னும் கயிற்றை பற்றி 
    பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்திருப்போம். நம்மையும் 
    இறைவன் அப்படி ஆக்கி அருள்புரிய வேண்டுமென்று துவா செய்திருப்போம். 
    அவர்களுக்கு மத்தியிலே வாழ்வதற்கு  விருப்பப்பட்டிருப்போம்.அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் பார்க்கவிருக்கிறோம்.
    இவர் கண் மருத்துவத்தில் தனித்துவம் பெற்றவர். பரிணாமவியல் குறித்த 
    என்பதிவுகளுக்காக சில தகவல்களை இவருடைய பேச்சுக்களில் இருந்து தொகுத்து உங்களுக்காக இங்கே பதிவிட விரும்பி  இங்கே பதிவிடுகிறேன்.இவரும் நாஸ்த்திகராக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர் தான். டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் (Dr.Lawrence Brown), தற்போது இவர்     கனேடியன் தாவாஹ் அசோசியேசனின் (Canadian Dawah Association) interfaith 
    துறையின் தலைவர். அமெரிக்க விமானப் படையில் மதிப்புமிக்க கண் மருத்துவராக 
    பணியாற்றியவர்.1990 ஆம் ஆண்டு இவருடைய வாழ்க்கை திசை திரும்பியது. அது தான் இவர் இறை  நம்பிக்கையின்பால் வந்த நேரம். "அது 1990 ஆம் ஆண்டு. நான் ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைகழக மருத்துவமனையில் பணியாற்றிய நேரம். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி என்னுடைய இரண்டாவது மகள் பிறந்தாள். மார்பிலிருந்து பாதங்கள் வரை அடர்த்தியான நீல நிறத்தில் இருந்த அவளை கண்டு மிகவும்  அதிர்ச்சி அடைந்தேன். அவளுடைய இதய குழாய்களில் இருந்த பிரச்சனையால் 
    அவளுடைய உடம்பால் தேவையான இரத்தத்தை பெற முடியவில்லை. ஒரு 
    மருத்துவராக, அவள் அதிக நாட்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை 
    உணர்ந்திருந்தேன். மிகவும் உடைந்து போனேன்.இப்போது அவளுக்கு தேவை அவசர அறுவை சிகிச்சை. குழந்தைகள் இதய சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவர் அழைக்கப்பட்டார். என் 
    குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அவருடைய கண்காணிப்பில் ஒப்படைத்து விட்டு வெளியேறினேன். இப்போது எனக்கு துணை யாருமில்லை, என்னுடைய 
    பயத்தை தவிர. அது என்னை அந்த மருத்துவமனையின் வழிபாட்டு அறைக்கு செல்ல வித்திட்டது. பாரம்பரியமிக்க கிருத்துவ குடும்ப பின்னணியை கொண்ட நான், இறைவனை குறைந்த அளவாவது அங்கீகரித்தது என்றால் அது இப்போது  தான். அது கூட சந்தேகத்தில் தான் பிரார்த்தித்தேன்,"இறைவா நீ இருந்தால்..." 
    அவன் இருந்தால், அவன் என் குழந்தையை காப்பாற்றினால், என்னை அவனுடைய 
    மார்க்கத்திற்கு வழி காட்டினால் நிச்சயம் அவனை நான் பின்பற்றுவேன்.
    இதுதான் அப்போது இறைவனுக்கு நான் அளித்த வாக்குறுதி. பிறகு அவசர சிகிச்சை 
    பிரிவிற்கு திரும்பினேன். என் மகள் நலமாகி விடுவாள் என்று மருத்துவர் கூறினார். 
    அவர் சொன்னது போன்றே இரண்டு நாட்களில் அவள் சரியாகி விட்டாள், 
    மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே.... இன்று அவளுக்கு பதினெட்டு வயது. நலமாக இருக்கிறாள். நான் முன்னமே கூறியது போன்று நான் ஒரு மருத்துவர். அவள் குணமானதற்கு மருத்துவ ரீதியாக patent ductus arteriosis, low oxygenation and 
    spontaneous resolution என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
    நிச்சயமாக இதில் இறைவனின் பங்குள்ளது என்றே என் மனம் சொல்லியது. பயத்தில் 
    இறைவனிடம் வாக்குறுதி கொடுக்கும் பலரும், அவர்களுடைய தேவை நிறை
    வேறிய பின்னர் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க புதுப் புதுக்
    காரணங்களை கண்டுபிடிப்பர். என் மகள் குணமடைந்ததற்கு மருத்துவக் காரணங்களை காட்டி என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம்.ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. காரணம், இறை நம்பிக்கை என்னுள் ஆழமாக நுழைந்து விட்டது. நாங்கள் எடுத்த cardiac ultrasounds, ஒருநாள் பிரச்சனை 
    இருப்பதாக காட்டியதையும் மறுநாள் அந்த பிரச்சனை இல்லை என்று காட்டியதையும் 
    என்னால் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. நான் 
    நினைத்ததெல்லாம் இதுதான், இறைவன் நான் கேட்டதை நிறைவேற்றி விட்டான்,
    இப்போது நான் அவனுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
    அடுத்த சில வருடங்கள் என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிகள் 
    மேற்கொண்டேன். ஆனால், அவை யாவும் தோல்வியை தழுவின. கிருத்துவம் மற்றும் 
    யூத மார்க்கத்தை பற்றி நிறைய படித்தேன். ஆனால் அவை எனக்கு முழு திருப்தியை 
    தரவில்லை. அதுமட்டுமல்லாமல் அவற்றுடன் என்னால் ஒன்றி நடக்கவும்
    முடியவில்லை. பிறகு ஒருநாள் குரானும், மார்டின் லின்க்ஸ் (Martin Lings) அவர்களின் "Muhammed: His life based on the Earliest Sources" என்னும் எனக்கு  அறிமுகமாயின. நான் மார்க்கங்கள் குறித்து ஆராய்ந்த போது, யூத நூல்கள், வரப்போகும் மூன்று நபிமார்களைக் குறிப்பிடுவதை 
    படித்திருக்கிறேன். யஹ்யா(அலை) மற்றும் ஈசா(அலை) போன்றவர்கள் அவர்களில் இருவர், யார் அந்த மூன்றாவது நபர்? பைபிளில் ஏசு(அலை) அவர்கள், தனக்கு பின் வரும் நபியைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.ஆக, குரானைப் 
    படிக்கும் போது அனைத்தும் ஒத்துவர ஆரம்பித்தன (Everything started to make 
    sense).நபிமார்கள்,ஒரே இறைவன், இறைவேதம் என்று அனைத்தும் அறிவுக்கு ஒத்துவர ஆரம்பித்து இஸ்லாத்தை ஏற்று கொண்டேன். நான் கற்றுக்கொண்ட பாடமென்றால், 
    என்னை விட அறிவில் சிறந்த பலர் இஸ்லாமெனும்  உண்மையை அறியாமல் 
    இருக்கின்றனர். நீங்கள் புத்திசாலியா என்பது மட்டும் இங்கு முக்கியமல்ல, அந்த 
    அறிவு உங்களுக்கு சரியான முறையில் புகட்டப்படுகிறதா என்பது தான் முக்கியம்.  
    "தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - 
    முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்" குர்ஆன் 42:13 
    தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப்படுத்துகிறான்" --- குர்ஆன் 24:46. அல்லாஹ் என்னை தேர்ந்தெடுத்து நேர்வழி காட்டியிருக்கிறான்.அதற்காக அவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்போது என்னிடத்தில் ஒரு எளிமையான பார்முலா உள்ளது. அது, முதலில் படைத்தவனை அங்கீகரிப்பது, அவனை மட்டுமே வழிபடுவது மற்றும் அவனிடத்தில் மட்டுமே வழிகாட்ட செய்ய முடியும்." அல்ஹம்துலில்லாஹ். இவர் கண் மருத்துவர் என்பதால், டார்வின்
    கண்ணைப் பற்றி ஆராயும் போது ஏற்பட்ட தடுமாற்றத்தை அழகாக விளக்குவார். 
    இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்பு தான் இவருக்கு இறைவனின் சோதனை 
    அதிகமிருந்தது. இஸ்லாத்தை ஏற்கும் பலரும் இது போன்ற ஒரு நிலையைத் தாண்டித் தான் வருகிறார்கள் என்றாலும், ஒரு சிலருக்கு இது போன்ற சோதனைகள்     மிக அதிகமாகவே இருக்கின்றன. "நான் முஸ்லிமானதை என் மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    என்னிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கேட்டார். நீதிபதி "உங்களுக்குள் என்ன பிரச்சனை" என்று கேட்ட போதும், "விவாகரத்து" வேண்டும்  என்று மட்டும் தான் சொன்னார். அவர் சென்றது மட்டுமல்லாமல் என் குழந்தைகளையும் என்னிடமிருந்து 
    அழைத்து சென்று விட்டார். என் குழந்தைகளை நான் பார்க்க வேண்டும் என்றால் பாதுகாப்பு அதிகாரியின் துணையுடன் தான் பார்க்க வேண்டும். என் 
    குழந்தைகளுடன் என் வீடு, செல்வம் என்று அனைத்தையும் தன்னிடத்தே கொண்டு சென்று விட்டார் என் மனைவி. வாரமொருமுறை வாடகை செலுத்தும் அறைகளில் பிறகு என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன். என்னுடைய  பெற்றோர்களோ  என்னை  முற்றிலுமாக   நிராகரித்து விட்டனர் ஒருமுறை 
     அவர்களிடமிருந்து வந்த கடிதம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதில், அவர்கள், என்னை பார்க்கவோ, என்னிடம் பேசவோ விரும்பவில்லை என்றும், நானும், இனிமேல் அவர்களை பார்க்க வரக்கூடாதென்றும், கடிதம் கூட அனுப்பக் கூடாதென்றும் எழுதப்பட்டிருந்தது
    என் மனைவி மீதோ அல்லது என்னுடைய  பெற்றோர்கள் மீதோ இந்த நிகழ்வுகளுக்காக 
    வருத்தம் இருந்ததில்லை. அவர்கள் நிலையிலிருந்து எண்ணிப்பார்க்கவேண்டும்.
    அவர்கள் நான் தவறான வழியில் சென்று விட்டதாகவே நினைத்தனர். அன்றைய 
    காலகட்டத்தில் ஊடகங்களும் அப்படி ஒரு நிலையைத் தான் ஏற்படுத்தி இருந்தன.
    என் நண்பர்களும் என்னை விட்டு பிரிந்து செல்ல ஆரம்பித்தனர். இனி அவர்கள் 
    எதிர்பார்க்கும் பழைய நபரில்லை நான். தற்போது நிலைமை பெரிதும் மாறி  
    விட்டது என் மனைவியை விட்டு பிரிந்த எனக்கு மற்றொரு அன்பான துணையை இறைவன் ஏற்படுத்தினான். மற்றொரு குழந்தையை கொடுத்தான். 
    அமெரிக்காவில் வசிக்க சிரமப்பட்ட எனக்கு இப்போதைய இருப்பிடம் புனித மதீனா 
    நகரம். குடும்பத்தினரை விட்டு பிரிந்த நான் இப்போது உலகளாவிய இஸ்லாமியக்  குடும்பத்தில் ஒருவன்.எங்கள் சகோதரத்துவம் போல எதுவும் வராது. நான் சொல்வது உண்டு, சகோதரத்துவம் என்றால் என்னவென்று ஒருவர் இஸ்லாத்தில் தான்  தெரிந்து  கொள்ள முடியும் என்று. தற்போது என் பெற்றோர் என்னிடம் நெருங்கி வர  ஆரம்பித்துள்ளனர்.என் சகோதரர் இஸ்லாத்தை தழுவி விட்டார். என் குழந்தைகளை சுலபமாக பார்க்க முடிகிறது. இறைவன் குர்ஆனில் சொல்லுவது போன்று, கஷ்டகாலங்களுக்கு பின்னர் 
    சூழ்நிலைகளை எளிதாக்கி வைத்துள்ளான் நான் இழந்ததை விட பெற்றவை அதிகம். என்னுடைய அனுபவங்கள் மூலம், இஸ்லாத்தை தழுவும் நிலையில் உள்ளவர்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புவதெல்லாம், நீங்கள் ஒரு நொடி கூட, இஸ்லாத்திற்கு வந்தால் இதை இழக்க நேரிடுமோ என்று எதை எண்ணியும் அஞ்சாதீர்கள். உங்களுக்கு அமைதியையும், 
    பலத்தையும் கொடுக்கச் சொல்லி இறைவனிடம் துவா செய்யுங்கள்
    அப்படியே அவன் உங்களுக்கு சோதனைகளை தந்தாலும் அது உங்களால் 
    தாங்கக்கூடிய அளவாக இருக்க வேண்டுமென்று அவனிடம் கேளுங்கள். என்
    அனுபவத்தின் மூலமும், நான் பார்த்த புதிய முஸ்லிம்களின் அனுபவத்திலிருந்தும் கூறுகிறேன், நீங்கள் இஸ்லாத்தை தழுவ நேர்ந்தால் அதனால் நீங்கள் பெரும் மன
    அமைதி என்பது, நீங்கள் இதுவரை பெற்ற எந்த ஒரு விசயத்தையும் விட 
    மேலானதாக இருக்கும்"சுப்ஹானல்லாஹ்! 

    ஈமானை இறுகப்பற்றி பிடித்திருக்கும்
    இவர்களைப் போன்றவர்களை காணும் போதெல்லாம் நம்முடைய ஈமானும் அதிகரிக்கிறது. டாக்டர் லாரன்ஸ் அவர்கள் ஒரு மிகச்சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட.
    இவருடைய கட்டுரையான "The Big Questions", ஒருவர் தன் வாழ்நாளில் கேட்க நினைக்க கூடிய கேள்விகளை அடிப்படையாக கொண்டது. பல நூல்களை 
    எழுதியிருக்கும் இவர், கனடா, அமெரிக்கா, அரேபிய நாடுகள் என்று தன் தாவாஹ் பணியை செய்து வருகிறார். இறைவன் இவர் போன்றவர்களின் மன பலத்தை நமக்கும் தந்தருள்வானாக...ஆமின்... இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச்செய்வானாக.. ஆமின். அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
    நன்றி- அறிவின் பக்கங்கள்
    --------------------------------------


    படித்ததில் பிடித்தது.
    இஸ்லாத்தை ஏற்றதால் மனைவி, மகள்கள், தாய், தந்தை, பெரிய பண்ணை வீடு, இரண்டு கார்கள், நண்பர்கள், 20 வருடங்களாகப் பார்த்து வந்த அமெரிக்க விமானப்படை கண் டாக்டர் வேலை, அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்றார் டாக்டர் லாரன்ஸ் B பிரவுன் (பிறப்பு: 1959) ஏக இறைவன் அல்லாஹ் அவரைக் கைவிட்டு விட்டானா? 
    பகுதி 03

    இஸ்லாத்தை ஏற்றேன்.
    எனக்கு ஏற்பட்ட சோதனைகள்.
    இஸ்லாத்தை ஏற்ற பிறகு என் சொந்த வாழ்க்கையில் புயல் வீசியது. நான் இஸ்லாத்தை ஏற்றதை என் மனைவியால் தாங்க இயலவில்லை. என்னிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாள். கோர்ட்டில் நான் அடித்து துன்புறுத்தினேன் என்று கூறி விவாகரத்து கேட்டாள். ஆனால், நான் உண்மையில் மனைவியை அடிப்பவன் அல்ல. நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. எனது இரண்டு குழந்தைகளையும் தன்னுடன் அவள் எடுத்துக் கொண்டு போனாள். மேலும் நீதிமன்றத்தில் 100 வருடங்களுக்கு ஜீவனாம்சம் வேண்டுமென்று வாதிட்டாள். நீதிமன்றமும் இசைந்தது. ஜீவனாம்சமாக எனது வீடு மற்றும் இரண்டு கார்களை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டாள். இதற்கெல்லாம் மேலாக இன்னொரு அநியாயமும் எனக்கு நடந்தது. அது வாரத்தில் ஒரு நாள் எனது மகள்களை பார்க்கும் சமயத்தில் அவர்களை நான் அடித்து துன்புறுத்தி விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி நீதிமன்றம் எனக்கு கூறியிருந்ததாகும். என்னமோ மனிதர்களை அடித்து துன்புறுத்தும் கொடுமைக்காரன் போன்று சித்தரிக்கப்பட்டேன். எந்த பிள்ளையைக் காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி உதவியைப் பெற்றதால், உண்மையான இறைவனை ஏற்றேனோ அந்தப் பிள்ளை இப்போது என்னுடன் இல்லை. எனது நெஞ்சம் கவலைகளால் கசங்கிப் போனது. அத்துடன் எனக்கு இன்னொரு சோதனையும் வந்தது. அது என்னை ஈன்றெடுத்த தாய் – தந்தையர் என்னை வெறுத்ததாகும். இஸ்லாத்தை ஏற்றதால் அவர்கள் என்னை விலக்கி வைத்தனர். ஒரு முறை அவர்களிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. இனி அவர்களை நான் பார்க்கக் கூடாது என்று. முழுமையாக குடும்ப உறவற்று அநாதையாகிப் போனேன்.
    இஸ்லாத்தை ஏற்ற சமயத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவராக 20 வருடங்களை பூர்த்தி செய்திருந்தேன். இஸ்லாத்தை ஏற்ற பிறகு அமெரிக்க ராணுவத்தில் ஒரு முஸ்லிமாக என்னால் பணியாற்ற இயலவில்லை. என் மனசாட்சி என்னைக் கொன்று போட்டது. பதவியை ராஜினாமா செய்தேன். மனைவி- பிள்ளைகளை இழந்தேன். வீடு வாசல்களை இழந்தேன். நண்பர்களை இழந்தேன்.கடைசியில் வேலையையும் இழந்து நின்றேன். பெரிய பண்ணை வீட்டில் வசித்த நான் குறுகலான ஏணிப்படி கொண்ட அறைகள் ஏதுமற்ற சின்ன வீட்டில் வசித்தேன். எல்லாவற்றையும் உண்மையான அந்த இறைவனுக்காகப் பொறுத்தேன். இஸ்லாத்தை ஏற்ற பிறகு அதுவரை என்னுடன் பழகி வந்த எனது நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தனர்.அதற்கு அவர்கள் சொன்ன காரணம், நான் நடன விடுதிகளுக்கு செல்வதில்லையாம். மது அருந்துவதில்லையாம் தோழிகளுடன் கைகுலுக்குவதில்லையாம். இதுதான் அவர்கள் என் மீது வைக்கும் குற்றச்சாட்டு.
    நான் கேட்கிறேன், இயேசு எங்காவது நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லாத அந்நியப் பெண்களுடன் கைகுலுக்கியுள்ளாரா? பைபிளில் எங்காவது அப்படி ஓன்று நடந்திருப்பதாக காட்ட முடியுமா? நான் சவாலாக கேட்கிறேன். இன்றும் ஆர்த்தொடெக்ஸ் யூதர்கள் அன்னியப் பெண்களுடன் கைகுலுக்குவதில்லை. இயேசுவும் ஆர்த்தொடெக்ஸ் மதகுருவைப் போன்றே வாழ்ந்துள்ளார். இதுவே உண்மை, கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு இவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்?
    இறைவனின் உதவி. 

    இஸ்லாத்தை ஏற்றதால் மனைவி பிள்ளைகளை இழந்தாலும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை. மிக நல்லதொரு குணவதியை அல்லாஹ் எனக்கு இரண்டாவது மனைவியாகத் தந்தான். அவள் மூலமாக அழகிய பெண் குழந்தையும் எனக்குப் பிறந்தாள். வீடு – வாசலை இழந்தேன்.எனினும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை. உலக முஸ்லிம்களால் மிகவும் விரும்பப்படும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நகரமான மதீனா மாநகரில் எனக்கு அல்லாஹ் வீட்டைத் தந்தான். உலகின் மிக அழகிய நகரங்களான வியன்னா, சூரிச், வான்கூவர், ஜெனிவா, சிட்னி போன்ற நகரங்களை விட மிகச்சிறந்த நகரம் அது. ஏனெனில், அந்நகரில் தஜ்ஜால் ( அந்திக் கிறிஸ்து ) நுழைய இயலாது என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். என்னுடைய பழைய நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தாலும் அவர்களை விட எல்லா வகையிலும் சிறந்த நண்பர்களை அல்லாஹ் எனக்குத் தந்துள்ளான். உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் எனக்குத் தோழர்களாகவும் சகோதரர்களாகவும் ஆகிவிட்டனர். அல்லாஹ் போதுமானவன்.

    தற்பொழுது இஸ்லாமிய பிரச்சாரப் பணி செய்து வரும் இவர் மூன்று நூல்களை எழுதியுள்ளார்.
    1) The First and Final Commandment – By Laurance B Brown.
    2) MisGod’ed: A Roadmap of Guidance and Misguidance in the Abrahmic Religions – By Laurance B Brown.
    3) The Eighth Scroll – By Laurance B

    Image may contain: 1 person

    Tuesday 26 March 2013

    இஸ்லாத்தைக் கடுமையாக வெறுத்த நான்,முஸ்லிம் ஆகிவிட்டேன்-அர்னோட் வேன் டோர்ன்




    "இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கக் கூடிய நான்,முஸ்லிம் ஆகிவிட்டேன் என்பதை எங்கள் கட்சியினர் நம்ப மறுப்பர் என்பது எனக்கும் தெரியும்.


    நான், கடந்த ஒரு வருடமாக பல முஸ்லிம் அறிஞர்களுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தி, மனதிலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக குர்ஆன், ஹதீஸ்களை ஆராய்ந்த பின்னரே, இஸ்லாத்தை ஏற்றேன் என்கிறார், நெதர்லாந்தின் "Party for Freedom" எனும் வலதுசாரி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் 46 வயதான "அர்னோட் வேன் டோர்ன்

    Friday 1 February 2013

    நீங்கள் இறைவனை தேடுபவரா?

    நீங்கள் இறைவனை தேடுபவரா?????????
    அன்பிற்கினிய சகோதர்களே நீங்கள் அகில உலகையும் படைத்து பராமரிக்கும்   ஓர் இறைவனை தேடக்கூடியவரா???
    நீங்கள் தேடக்கூடிய இறைவன் கீழ் காணும் தகுதியுடையவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா???
    1) இறைவன் ஒரே ஒருவனே
    2) அவனே படைக்க கூடியவன்
    3) அவனே காக்க கூடியவன்
    4) அவனே அழிக்க கூடியவன்
    5) அவன் எந்த தேவையும் அற்றவன்
    6)அவன் யாரையும் பெற்றவனாக இருக்க கூடாது
    7) அவன் யாராலும் பெறப்பட்டவனாகவும் இருக்க கூடாது
    8) அவன் சாப்பிடுபவனாக இருக்க கூடாது
    9) அவன் தூங்குபவனாகவும் இருக்க கூடாது
    10) அவன் சாவுபவனாகவும் இருக்க கூடாது
    11) அனைத்தையும் கண்கானிக்க கூடியவனாக இருக்க வேண்டும்
    12) அனைத்தையும் பார்க்க கூடியவனாக இருக்க வேண்டும்
    13) அனைத்தையும் கேட்க கூடியவனாக இருக்க வேண்டும்
    14) அனைத்து ஆற்றலும் அதிகாரமும் உடையவனாக இருக்க வேண்டும்
    15) அவனுக்கு நிகராக வேறேதும் இருக்க கூடாது


    இந்த தகுதியுடைய இறைவனை நீங்கள் வெறுப்பு விருப்பு இன்றி தேட ஆரம்பித்தால்  உண்மையிலேயே இஸ்லாமிய மார்க்கம் (குர்ஆன்  ஹதீஸை) தவிர வேறு எந்த மதத்திலேயும் வேறு எந்த கொள்கைலேயும் காணமுடியவே முடியாது.

    மேலுள்ள ஒவ்வொன்றுக்கும் இதோ ஆதாரம் இஸ்லாமியர்களின் வேதமான புனித குர்ஆனிலிருந்து


    1) உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். 2:163

    2)  படைப்பவன் படைக்காதவனைப் போன்றவனா? சிந்திக்க மாட்டீர்களா? 16:17

    3) அவனுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை. மறுமையை நம்புபவரையும் சந்தேகப்படுபவரையும் வேறுபடுத்திக் காட்டவே (இது நடந்தது). உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பாதுகாப்பவன். 34:21

    4)  ''மர்யமுடைய மகன் மஸீஹ்92 தான் அல்லாஹ்'' என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். ''மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?'' என்று நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.5:17

    5) அல்லாஹ் தேவைகளற்றவன்.112:2

    6) (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. 112:3

    7) (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.112:3

    8) வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை' என்று கூறுவீராக! 'கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்கு மாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகிவிடக்கூது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்' எனவும் கூறுவீராக! 6:14

    9) அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? 17 அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்ப வற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டை யும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன். 2:255

    10) அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? 17 அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்ப வற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டை யும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன். 2:255

    11) உங்களுக்காக எனக்குக் கொடுத்து அனுப்பப்பட்டதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு சமுதாயத்தை அவன் உங்களுக்குப் பகரமாக ஏற்படுத்துவான். அவனுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் செய்ய முடியாது. என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்' (எனவும் கூறினார்) 11:57

    12)  (அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். 42:11

    13) (அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். 42:11

    14) அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன்; உறுதியானவன்; ஆற்றல் உடையவன். 51:58

    15) அவனுக்கு நிகராக யாருமில்லை. 112:4

    உங்கள் தேடல் இதுவாக இருந்தால் அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக!