Friday 1 February 2013

நீங்கள் இறைவனை தேடுபவரா?

நீங்கள் இறைவனை தேடுபவரா?????????
அன்பிற்கினிய சகோதர்களே நீங்கள் அகில உலகையும் படைத்து பராமரிக்கும்   ஓர் இறைவனை தேடக்கூடியவரா???
நீங்கள் தேடக்கூடிய இறைவன் கீழ் காணும் தகுதியுடையவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா???
1) இறைவன் ஒரே ஒருவனே
2) அவனே படைக்க கூடியவன்
3) அவனே காக்க கூடியவன்
4) அவனே அழிக்க கூடியவன்
5) அவன் எந்த தேவையும் அற்றவன்
6)அவன் யாரையும் பெற்றவனாக இருக்க கூடாது
7) அவன் யாராலும் பெறப்பட்டவனாகவும் இருக்க கூடாது
8) அவன் சாப்பிடுபவனாக இருக்க கூடாது
9) அவன் தூங்குபவனாகவும் இருக்க கூடாது
10) அவன் சாவுபவனாகவும் இருக்க கூடாது
11) அனைத்தையும் கண்கானிக்க கூடியவனாக இருக்க வேண்டும்
12) அனைத்தையும் பார்க்க கூடியவனாக இருக்க வேண்டும்
13) அனைத்தையும் கேட்க கூடியவனாக இருக்க வேண்டும்
14) அனைத்து ஆற்றலும் அதிகாரமும் உடையவனாக இருக்க வேண்டும்
15) அவனுக்கு நிகராக வேறேதும் இருக்க கூடாது


இந்த தகுதியுடைய இறைவனை நீங்கள் வெறுப்பு விருப்பு இன்றி தேட ஆரம்பித்தால்  உண்மையிலேயே இஸ்லாமிய மார்க்கம் (குர்ஆன்  ஹதீஸை) தவிர வேறு எந்த மதத்திலேயும் வேறு எந்த கொள்கைலேயும் காணமுடியவே முடியாது.

மேலுள்ள ஒவ்வொன்றுக்கும் இதோ ஆதாரம் இஸ்லாமியர்களின் வேதமான புனித குர்ஆனிலிருந்து


1) உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். 2:163

2)  படைப்பவன் படைக்காதவனைப் போன்றவனா? சிந்திக்க மாட்டீர்களா? 16:17

3) அவனுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை. மறுமையை நம்புபவரையும் சந்தேகப்படுபவரையும் வேறுபடுத்திக் காட்டவே (இது நடந்தது). உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பாதுகாப்பவன். 34:21

4)  ''மர்யமுடைய மகன் மஸீஹ்92 தான் அல்லாஹ்'' என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். ''மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?'' என்று நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.5:17

5) அல்லாஹ் தேவைகளற்றவன்.112:2

6) (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. 112:3

7) (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.112:3

8) வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை' என்று கூறுவீராக! 'கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்கு மாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகிவிடக்கூது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்' எனவும் கூறுவீராக! 6:14

9) அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? 17 அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்ப வற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டை யும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன். 2:255

10) அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? 17 அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்ப வற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டை யும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன். 2:255

11) உங்களுக்காக எனக்குக் கொடுத்து அனுப்பப்பட்டதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு சமுதாயத்தை அவன் உங்களுக்குப் பகரமாக ஏற்படுத்துவான். அவனுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் செய்ய முடியாது. என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்' (எனவும் கூறினார்) 11:57

12)  (அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். 42:11

13) (அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். 42:11

14) அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன்; உறுதியானவன்; ஆற்றல் உடையவன். 51:58

15) அவனுக்கு நிகராக யாருமில்லை. 112:4

உங்கள் தேடல் இதுவாக இருந்தால் அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக!