Monday 26 November 2018

அகீகா (குழந்தை தர்மம் )

                               

                          “அகீகா” இது குழந்தை கிடைத்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தருணம், ஆடறுத்து இறைச்சியை விநியோகித்தோ விருந்து சமைத்துக் கொடுத்தோ கொண்டாட இஸ்லாம் காட்டிய சிறந்த வணக்கம்.

இதை எப்படி கொடுக்க வேண்டும்?
யாருக்கு கொடுக்க வேண்டும்?
எப்போது கொடுக்க வேண்டும்?
எதை கொடுக்க வேண்டும்?
என்பன போன்ற சந்தேங்கள் பலருக்கு உண்டு அதை எனது இப்பதிவு தீர்த்து வைக்கும் என நம்புகின்றேன்.

ஒருவருக்கு ஆண் குழந்தை கிடைத்துவிட்டால் அதற்காக இரண்டு ஆடுகளும் பெண் குழந்தை பிறந்துவிட்டால் ஒரு ஆட்டையும் அறுத்தும் விருந்தாகவோ அல்லது இறைச்சியாகவோ கொடுப்பதே அகீகாவாகும்.

இதை தங்களது சொந்தங்கள்/ அயலவர்கள்/ நண்பர்கள் / ஏழை எளியோர் என்று நாம் விரும்பும் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். கொடுப்பவர்களும் உண்ணலாம் அதில் தடை இல்லை.

ஆட்டுக் கடாய்தான்  கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. பெட்டை ஆடும் கொடுக்கலாம். ஆனால் குட்டி இருந்து பால் கொடுக்கும் நிலையில் உள்ள பெட்டை ஆட்டை தவிர்த்தல் வேண்டும்.

அவ்வாறே எந்த வயதுடைய ஆட்டை கொடுக்க வேண்டும் என்ற வரையறை இல்லை. பொதுவாக சமைத்துண்ண நாம் எவ்வாறான, எந்த வயதுடைய ஆட்டை விரும்புவோமோ அதை அளவு கோலாக கொண்டால் போதுமானது.

எங்களது குடும்பம் பெரிதாக இருக்கிறது ஆடு கொடுத்து போதாது பகரமாக மாடு கொடுக்க முடியாதா? என்ற கேள்வியும் சிலருக்கு உண்டு.

நிச்சயமாக ஆடுதான் கொடுக்க வேண்டும். ஆடு என்பது அனைத்து சூழலிலும் பிரதேசங்களிலும் வாழக்கூடிய, கிடைக்கக் கூடிய ஒரு பிராணி என்பதாலோ என்னவோ இஸ்லாம் அகீகா விடயத்தில் ஆட்டை மட்டும் குறிப்பிட்டுள்ளது.

இது குழந்தை பிறந்து ஏழாம் நாளே கொடுக்க வேண்டும்.  மாறாக ஏழு நாட்களுக்குள் என்றோ அல்லது ஏழு நாட்கள் முடிந்த பின்னர் என்றோ தவறாக புரிந்து கொள்ளக் கூடாது.

ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுக்கு பொறுப்பாக்கப் பட்டுள்ளது.குழந்தையின் சார்பில் ஏழாம் நாளில் ஆட்டை அறுக்க வேண்டும். அன்று முடியை மழித்து பெயர் சூட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,.
அறிவிப்பவர் : சமுரா (ரலி)
நூல்கள் : அபூதாவூத், திர்மிதி, நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்

இதை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் இல்லை வசதி இல்லாதவர்கள் கடன் பட்டு கஸ்ட்டப்பட்டு கொடுப்பது அவசியமில்லை.

இறைவா எனக்கு நீ வசதியைத் தந்திருந்தால் அகீகா கொடுத்து இருப்பேன் என்று உளமாற நினைக்கும் போது அந்த எண்ணத்துக்காக அகீகா கொடுத்த கூலியைக் கொடுக்கும் அளவுக்கு அல்லாஹ் கருணையாளன் என்பதை மனதில் கொள்ளவேண்டும்        நன்றி; ஹாறூன் ஸஹ்வி       ********************************


بسم الله الرحمن الرحيم
ஒரு குழந்தை பிறந்து ஏழாவது நாளில் கொடுக்கப்பட வேண்டிய ஒரு விடயமே அகீகாவாகும். இந்த அகீகா குறித்து பலர் அதிகமான விடயங்களை அறியாதவர்களாக இருக்கின்றார்கள். அகீகாவுடைய விடயத்தில் அதிகமானவர்களுக்கு சந்தேகம் எழக்கூடியது பின்வரும் மூன்று விடயங்களிலேயாகும்.
1.அகீகா கொடுக்காதவர் தனது பெரிய வயதில் அதை நிறைவேற்ற வேண்டுமா?
2.ஏழாவது நாளுக்கு முன் குழந்தை மரணித்தால் அக்குழந்தைக்கு அகீகா  கொடுக்கப்பட வேண்டுமா?
3.ஆடு அல்லாத வேறு கால்நடைகளைக்கொண்டு அகீகாவை நிறைவேற்ற முடியுமா?
ஆகவே, இம்மூன்று வினாக்களுக்குமான தெளிவை இங்கு நாம் உங்களுக்கு சுருக்கமாகக் கூறுகின்றேன்.
முதல் வினா:
அகீகா கொடுக்காதவர் தனது பெரிய வயதில் அதை நிறைவேற்ற வேண்டுமா?
விடை:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது நுபுவ்வத்திற்குப் பின் தனக்காக அகீகா கொடுத்ததாக ஒரு ஹதீஸ் முஸன்னப் அப்திர்ரஸ்ஸாக் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றாலும் இந்த ஹதீஸில் அப்துல்லாஹ் இப்னு முஹர்ரர் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பொறுத்தவரையில் ஹதீஸ் கலை அறிஞர்களால் விடப்பட்டவர் என்ற தரத்தைப் பெற்றவராவார். ஆகவே, இவர் பலவீனமானவர் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
அத்தபரானீ அல்அவ்ஸத் என்ற நூலிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் இப்னுல் முஸன்னா என்பவர் இடம் பெறுகிறார். இவரும் பலவீனமானவர் என்ற காரணத்தால் இந்த ஹதீஸும் பலவீனமானதாகும்.
இமாம்களான அதாஃ, ஹஸன், இப்னு ஸீரீன் ஆகியவர்கள் பெரிய வயதில் அகீகா கொடுக்கலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்கள்.
இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அகீகா கொடுக்க முடியாது என்ற கருத்தைக் கூறியுள்ளார்கள். ஏனென்றால் அகீகா என்பது ஒரு தந்தை தனது மகனுக்கு நிறைவேற்ற வேண்டியதாகும் என்ற காரணத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகமான ஹனபி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் இக்கருத்தை முன்வைத்துள்ளார்கள். மேலும், இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் யார் இவ்வாறு அகீகா கொடுக்கிறாரோ அதனை நான் வெறுக்கமாட்டேன் என்றும் மேலும், மற்றோர் அறிவிப்பில் யார் இவ்வாறு செய்கிறாரோ அது சிறந்ததாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹிஸாம் அவர்கள் இவ்வாறு அகீகா கொடுப்பது விரும்பத்தக்கதல்ல. ஏனென்றால் இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என அவருடைய நூலான பத்ஹுல் அல்லாமில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பார்க்க: அல்முங்னீ 13:397, அத்துஹ்பா பக்கம்: 87, 88, அல்மஜ்மூஃ 8:431
இரண்டாவது வினா:
ஏழாவது நாளுக்கு முன் குழந்தை மரணித்தால் அக்குழந்தைக்கு அகீகா கொடுக்கப்பட வேண்டுமா?
விடை:
ஹன்பலீ மற்றும் ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் அகீகா கொடுக்க வேண்டும் எனக்கூறுகின்றார்கள். ஏனென்றால் ஒரு குழந்தை பிறப்பதன் மூலமே அகீகா நிறைவேற்றப்படுகின்றது என அவர்கள் கூறுகின்றார்கள். அகீகா குறித்து வரக்கூடிய பொதுவான ஹதீஸ்களை இவர்கள் ஆதாரமாக முன்வைக்கின்றார்கள்.
இமாம் மாலிக் மற்றும் ஹஸன் ஆகியோர் மரணித்த குழந்தைக்கு அகீகா கொடுப்பது விரும்பத்தக்கதல்ல எனக்கூறுகின்றனர். அக்குழந்தைக்கு ஏழாவது நாளில் அதை அறுக்கப்பட வேண்டும் என்ற திர்மிதியில் வரக்கூடிய ஸஹீஹான ஹதீஸை முன்வைத்து இவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். குழந்தை மரணித்தால் அக்குழந்தைக்கு ஏழாவது நாள் உயிர் வாழக்கிடைப்பதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
சரியான கருத்து ஏழாவது நாளுக்கு முன் மரணித்தவர்களுக்கு அகீகா கொடுக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இக்கருத்தை அஷ்ஷெய்ஹ் பின் பாஸ் மற்றும் இப்னு உஸைமீன் ரஹிமஹுமல்லாஹ் அவர்கள் சரிகண்டுள்ளார்கள்.
மூன்றாவது வினா:
ஆடு அல்லாத வேறு கால்நடைகளைக் கொண்டு அகீகாவை நிறைவேற்ற முடியுமா?
விடை:
பெரும்பாலான அறிஞர்கள் ஆடு அல்லாத கால்நடைகள் அகீகாவுக்குச் செல்லுபடியாகும் என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள்.
ஏனென்றால் முஸன்னப் இப்னு அபீ ஷைபாவில் சரியான அறிவிப்பு வரிசையின்படி அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓர் ஒட்டகத்தை அகீகாவுக்காக அறுத்ததாக ஒரு செய்தி பதிவாகியுள்ளது.
இக்கருத்து ஹன்பலீ, ஷாபிஈ மற்றும் மாலிகீ ஆகிய மத்ஹப்களைச் சார்ந்தவர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒட்டகம் மற்றும் மாடு ஆகியன ஆட்டைவிட அதிக கூலியைப் பெற்றுத்தரும் என அவர்கள் கூறுகின்றார்கள். அகீகாப் பிராணியின் இரத்தத்தை ஓட்டுங்கள் என்ற பொதுவான ஹதீஸை முன்வைத்து அவர்கள் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.
இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் ஆட்டை மாத்திரமே அகீகாவாகக் கொடுக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள்.
ஹப்ஸா பின்த் அப்திர்ரஹ்மான் பின் அபீபக்ர் என்பவருக்கு நீங்கள் ஓர் ஒட்டகத்தை அகீகா கொடுக்க வேண்டாமா? எனக்கூறப்பட்டது. அதற்கு அவர்கள் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும், என்னுடைய மாமியான ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஆண் குழந்தைக்கு இரு ஆடுகளும் மற்றும் பெண் குழந்தைக்கு ஓர் ஆடும் என்றே கூறக்கூடியவர்களாக இருந்தர்கள் எனக்கூறினார்கள்.                                        - முஸன்னப் அப்திர்ரஸ்ஸாக் 4:328
இந்த ஆதாரத்தை முன்வைத்து இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அவருடைய கருத்தை முன்வைக்கின்றார்கள். மேலும், அகீகாப் பிராணியின் இரத்தத்தை ஓட்டுங்கள் என்ற ஹதீஸை நாம் ஆதாரமாக் கொண்டால் பறவைகளையும் அகீகாக் கொடுக்க வேண்டி ஏற்படும் என அவர் மாற்றுக் கருத்துடையவர்களுக்கு மறுப்பளிக்கின்றார்.
மேலும், அனைத்து ஹதீஸ்களிலும் ஆட்டையே குறிப்பிடப்பட்டுள்ளது. அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹிஸாம் அவர்கள் கூறும்போது: ஹதீஸில் வந்த செய்தியோடு சுருக்கிக்கொள்வதே மிக ஏற்றமாகும். யார் ஓர் ஒட்டகத்தை அகீகா கொடுத்தால் அது செல்லுபடியாகும் என நான் ஆசை வைக்கின்றேன் என்கிறார்கள்.

Thursday 1 November 2018

ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி செய்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்....

ஆனால், அவரது வீட்டிலோ வறுமை.

ஜகாத் (தர்மம்) பொருட்கள், அரசு கஜானாவில் வந்து குவியும்.
இல்லையென்று வருவோர்க்கு "இதோ இந்த ஒட்டகத்தை ஓட்டிச் செல்", என்று சொல்லுமளவுக்கு அரசின் நிதி நிலை அமோக வளர்ச்சியில் இருந்த காலத்திலும் கூட,

 ஜனாதிபதியின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அடுப்பு பற்ற வைக்க இயலாத அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 2567)

கோதுமை மாவை, சல்லடை செய்து பயன்படுத்த இயலாத அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 5413)

அந்த மாவை கூட தண்ணீர் ஊற்றி பிசைந்து சாப்பிட வேண்டிய அளவிலான கொடிய வறுமை.
(ஆதாரம் புஹாரி 5413)

வயிற்றில் கல்லை நிரப்பிக் கொண்டு பசியாற்றினார்.

பசியின் கொடுமையால் இரவில் இரவில் தூக்கமின்றி அமர்ந்திருந்த வறுமை.

(ஆதாரம் முஸ்லிம் 3799)

உடுத்திய‌ உடைக்கு மாற்று உடை இல்லை என்கிற அளவிற்கு வறுமை.
உடுத்திருக்கும் உடை கூட, வெறும் இரு போர்வைகள்.. (ஆதாரம் புஹாரி 3108)

ஒரு முறை சால்வையொன்றை நபிகள் நாயகத்திற்கு ஒருவர் பரிசளிக்கிறார், நபிகள் நாயகமோ, இதை நான் என் கீழாடையாக பயன்படுத்திக் கொள்கிறேனே என்று அதை அவ்வாறே பயன்படுத்துகிறார்கள்.

போர்வையை வேட்டியாக பயன்படுத்துகின்ற அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 1277)


அவர் ஒரு போதும் தட்டில் வைத்து உணவு உண்டது கிடையாது. துணியை விரித்து அதில் தான் உணவை வைத்து உண்டிருக்கிறார்கள்.
(ஆதாரம் புஹாரி 5386)

இரவில் படுத்துத் தூங்குவதற்கும், பகலில் அதையே முன் வாசல் கதவாய் பயன்படுத்துவதற்கும் தான் பாய் வைத்திருந்தார்கள்.
(ஆதாரம் புஹாரி 730)

தோலினால் ஆன தலையணையை பயன்படுத்தினார்கள்.
(ஆதாரம் புஹாரி 6456)

ஒருவர் படுத்திருந்தால் இன்னொருவரால் நின்று தொழுகை செய்ய இயலாது. அந்த அளவிற்கு சிறிய குடிசையில் தான் நபிகள் நாயகம் வசித்தார்கள். (ஆதாரம் புஹாரி 382)

மேற்கூரை கூட இல்லாத வீட்டில் வசித்தார்கள். அவர்கள் எழுந்து நின்றால் வெளியில் இருப்பவர்களால் அவரது தலையை காண முடியும் (ஆதாரம் புஹாரி 729)


நாமெல்லாம் கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத ஏழ்மை.

நபிகள் நாயகம் அனுபவித்த வறுமையில் 100 ஒரு பங்கினை நாம் இன்றைக்கு அனுபவிக்கிறோமா?

இன்று, பிளாட்ஃபாரத்தில் பிச்சையெடுப்பவனை தான் நாம் பரம ஏழை என்போம்.

நபிகள் நாயகத்தின் வாழ்க்கை, இன்றைக்கு நாம் கருதுகின்ற பரம ஏழையை விடவும் கீழ் நிலையில் தான் இருந்தது என்பதை நம்மால் ஜீரணிக்க இயலுகின்றதா?

இத்தனைக்கும் அப்போது அவர் மன்னர்.
நாட்டுக்கே ஜனாதிபதி.
போர்ப்படை தளபதி..
மார்க்க அறிஞர்.
இறைவனால் நியமிக்கப்பட்ட இறைத் தூதர்,
சமுதாயத்தை நன்னெறிப்படுத்த வந்த புரட்சியாளர்,

என பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட மாமனிதராக அவர் திகழ்ந்தார்.

ஆக‌,
வறுமையிலும் நேர்மை.
வறுமையிலும் ஒழுக்கம்.
வறுமையிலும் வீரம்
வறுமையிலும் நீதி தவறாத நல்லாட்சி
வறுமையிலும் சுய மரியாதை
வறுமையிலும் மிகப்பெரும் புரட்சி..!

நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா??

எண்ணும் போதே உடலெல்லாம் சிலிர்க்கிறது..

மைக்கேல் ஹார்ட் என்கிற கிறித்தவ பாதிரியார், உலகில் மாற்றம் உருவாக்கிய நூறு பேரின் வாழ்வை அலசி, 'The Hundred' என்கிற நூலை வரைந்தார்.
அதில் முதல் இடத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கே வழங்கினார்.

நபிகள் நாயகம்... நாமெல்லாம் கற்பனையிலும் எண்ணிராத ஓர் உத்தம மனிதர்...!

Thursday 30 August 2018

மனிதன் விந்திலிருந்து படைக்கப்பட்டானா அல்லது

         
மனிதன்_விந்திலிருந்து_படைக்கப்பட்டானா மண்ணிலிருந்து_படைக்கப்பட்டானா?

#பதில்: மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும் படைக்கப்பட்டான்:
அருள்மறை குர்ஆனின் 75வது அத்தியாயம் ஸுரத்துல் கியாமாவின் 37வது வசனம் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

‘(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத் துளிக்குள் அவன் இருக்கவில்லையா?’ (அத்தியாயம் 75 ஸூரத்துல் கியாமா – 37வது வசனம்)

மேலும் அருள்மறை குர்ஆனின் பல இடங்களில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 5வது வசனம் மனிதன் மண்ணிலிருந்தும், இந்திரியத் துளியிலிருந்தும், படைக்கப்பட்டான் என்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

‘..நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும், பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்து படைத்தோம்..‘ (அத்தியாயம் 22 ஸூரத்துல் ஹஜ் – 5வது வசனம்).

மனித உடல் படைக்கப்பட்டிருக்கும் மூலக்கூறுகள் யாவும் (மனித உடலின் ஆக்கக் கூறுகள்) ஒரு சிறிதளவோ அல்லது பெரும் அளவோ பூமியில் இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாம் தெரிந்து கொண்டுள்ள மேற்படி உண்மையானது, மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்கிற அருள்மறை குர்ஆனின் கூற்றுக்கு அறிவியல் தரும் விளக்கமாகும்.

அருள்மறை குர்ஆனின் சில வசனங்கள் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்றும், சில வசனங்கள் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்றும் கூறுகிறது. மேற்படி கூற்று முரண்பாடானது அல்ல. ஒரே நேரத்தில் நடைபெற முடியாத எதிர்மறையான இரண்டு செயல்களுக்கு முரண்பாடு என்று பெயர்.

மனிதன் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான்:
அருள்மறை குர்ஆனின் சில வசனங்கள் மனிதன் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான் என்று கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 25வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபுர்கானின் 54வது வசனம் சொல்லும் பொருளை உதாரணமாகக் கொள்ளலாம்:

‘இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து..‘ ( அத்தியாயம் 25 ஸூரத்துல் ஃபுர்கான் 54வது வசனம்).

மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் படைக்கப்பட்டான் என்று அருள்மறை குர்ஆன் சொன்ன மூன்று கருத்துக்களையும் நவீன அறிவியல், உண்மை என்று நிரூபித்துக் காட்டியுள்ளது.

மேற்படி கருத்துக்கள் எதுவும் முரண்பாடாணது (Contradiction) அல்ல. மாறாக, மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும். (Contradiction).

உதாரணத்திற்கு, ஒரு கோப்பை தேநீர் தயாரிக்கப் பட வேண்டுமெனில் – அதற்கு தேவையான அளவு வெந்நீர் வேண்டும். தேவையான அளவு தேயிலைத் துகளும் வேண்டும். தேநீர் தயாரிக்க வெந்நீர் வேண்டும். அதுபோல தேநீர் தயாரிக்க தேயிலைத் துகளும் வேண்டும் என்று சொல்வதால் – மேற்படி இரண்டு கூற்றுக்களும் வௌ;வேறாக இருந்தாலும், அவைகள் இரண்டும் ஒன்றுக் கொன்று முரண்படவில்லை. அத்துடன் இனிப்பான தேநீர் வேண்டுமெனில், சர்க்கரையும் வேண்டும். இவ்வாறு மேற்சொன்ன மூன்று கருத்துகளில் எந்த கருத்தும் ஒன்றோடு ஒன்று முரண்படவில்லை.

இவ்வாறு அருள்மறை குர்ஆன் மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் படைக்கப் பட்டான் என்று சொன்ன எந்த கருத்தும் ஒன்றொடொன்று முரண்படவில்லை. மேற்படி கருத்துக்கள் எதுவும் முரண்பாடாணது (ஊழவெசயனiஉவழைn) அல்ல. மாறாக, மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும்(ஊழவெசயனளைவinஉவழைn).

உதாரணத்திற்கு ஒரு மனிதன் எப்போதும் உண்மையே பேசக் கூடியவன். அதேசமயம் அவன் ஒரு பொய்யன் என்றும் நான் சொல்கிறேன். மேற்படி எனது கூற்றுக்கள் முரண்பாடானது (Contradiction).

ஆனால் ஒரு மனிதன் நேர்மையானவன். அதே சமயத்தில் கருணை உள்ளம் கொண்டவன். மனிதர்களை நேசிப்பவன் என்று கூறுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும் (Contradiction). முரண்பாடில்லாத, தனிப் பண்புள்ள இரு வேறு கருத்துக்களாகும்.                                            நன்றி ;ABDHUL HAKEEM FB

Sunday 26 August 2018

நீர் அருந்தும்போது பின் பற்ற படவேண்டிய ஒழுங்கு

                               
                                                 
உட்கார்ந்து கொண்டு நீரை அருந்துங்கள்...
நம் உடலில் 70% நீர் ஆட்கொண்டு உள்ளது...
இந்த நீரை அருந்து வழிமுறைகள் கூட நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறுகிறார்கள்
நீரை நின்று கொண்டு அருந்துவதினால் நம் உடலின் நுரையீரல் முதல் குடல் வரை செங்குத்தாக நீர் பாய்ச்சப்படுகிறது,
மேலும் கடைசியாக இந்த நீர் குடலை கடக்கும் போது நாம் உண்ட உணவுகள் துரிதமாக கலங்கிய நிலையில் வயிற்றுக்கோளாறு களை ஏற்படுத்துகிறது.

இதனால் பித்தப்பைக் கோளாறு,
நுரையீரல் கோளாறு,மற்றும் குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளும் நம் உடலில் ஏற்படுகிறது...

1400 வருடங்களுக்கு முன்னதாகவே அண்ணல் நபி அவர்கள் நீர் அருந்தும் ஒழுங்கு முறை ஒன்றை நபித்தோழர்களுக்கு எடுத்துக்கூறியதை இங்கே நினைவுக்கு கொண்டு வருவது சிறப்பாக அமையும் என எண்ணுகின்றேன்.   

1.பிஸ்மில்லா என்று இறைவனின் பெயரைச் சொல்லி அருந்துங்கள்                              2.தண்ணீரைப் பார்த்து அருந்துங்கள்
3.வலதுகையால் அருந்துங்கள்                              4.உட்கார்ந்து அருந்துங்கள்                                      5.மும்மூன்று மிடர்களாக அருந்துங்கள்.              6.குடித்த பின் அல்ஹம்துலில்லாஹ் என்று
     அல்லாஹுவைப் புகழுங்கள்            

Tuesday 24 July 2018

கடவுளை விட பார்ப்பணனே சிறந்தவன் என்று இந்துக்களை ஏமாற்றி வருகின்ற கொடுமையே பார்ப்பணீயம் ஆகும் ..

ஆனால்

  இந்து வேதங்களில் சிலைவணக்கம் இல்லை..இந்து மதம் என்பதும் சிலை வணங்குவது கிடையாது..அதன் வாசகங்கள்
சிலை வணக்கம்..பார்ப்பணர் பெருமை..கீழ்சாதி கொடுமை ...ஒழிக்கப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்துக்களை அழைத்து உள்ளது..
அந்த வாசகங்கள் பின் வருகின்றது..
ஆரிய வந்தேறி யூத பார்ப்பணர்கள்
இதனை மறைத்து இந்தியர்களிடம் பார்ப்பணீயம் வளர்க்கவே இந்தியர்களிடம் சூத்திரன் வேதம் படித்தால் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்று என மிரட்டி இந்துக்களிடம் சிலை வணக்கம்,,சாதி கொடுமை வளர்த்தனர்

Concept of God according to Hindu Scriptures:

We can gain a better understanding of the concept of God in Hinduism by analysing Hindu scriptures.

BHAGAVAD GITA:

The most popular amongst all the Hindu scriptures is the Bhagavad Gita.

Consider the following verse from the Gita:

"Those whose intelligence has been stolen by material desires surrender unto demigods and follow the particular rules and regulations of worship according to their own natures."
[Bhagavad Gita 7:20]
 யார் ஒருவர் தன் மனோ இச்சையை (இறைவனை நேசிக்காத அளவிற்கு) பொருள் ஆசையின் பால் பறிகொடுத்து விடுகின்றாரோ அவரே போலியான கடவுள்களையும் இயற்கையையும் வழிபடுவார்கள்.
(பகவத் கீதை 7.20)

The Gita states that people who are materialistic worship demigods i.e. ‘gods’ besides the True God.

UPANISHADS:

The Upanishads are considered sacred scriptures by the Hindus.

The following verses from the Upanishads refer to the Concept of God:

1.  "Ekam evadvitiyam"
"He is One only without a second."

அவன் ஒருவனே..அவனைத்தவிர வேறு யாரும் இல்லை.
[Chandogya Upanishad 6:2:1]1

2.  "Na casya kascij janita na cadhipah."
"Of Him there are neither parents nor lord."
அவனுக்கு பெற்றோர்களும் இல்லை மேலும் அவனுக்கு இறைவனும் இல்லை.
[Svetasvatara Upanishad 6:9]2

3.  "Na tasya pratima asti"
"There is no likeness of Him."
அவனைப்போன்று வேறுயாரும் இல்லை
[Svetasvatara Upanishad 4:19]3

4.  The following verses from the Upanishad allude to the inability of man to imagine God in a particular form:

"Na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam."

"His form is not to be seen; no one sees Him with the eye."
அவனை யாரும் கண்ணால் பார்க்க முடியாது..அவனை யாரும் பார்க்கவும் இல்லை
[Svetasvatara Upanishad 4:20]4

1 [The Principal Upanishad by S. Radhakrishnan page 447 and 448]
[Sacred Books of the East, volume 1 ‘The Upanishads part I’ page 93]

2 [The Principal Upanishad by S. Radhakrishnan page 745]
[Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page 263.]

3 [The Principal Upanishad by S. Radhakrishnan page 736 & 737]
[Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page no 253]

4 [The Principal Upanishad by S. Radhakrishnan page 737]
[Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page no 253]

THE VEDAS
Vedas are considered the most sacred of all the Hindu scriptures. There are four principal Vedas: Rigveda, Yajurveda, Samveda and Atharvaveda.

1. Yajurveda
  The following verses from the Yajurveda echo a similar concept of God:

1. "na tasya pratima asti"
    "There is no image of Him."
அவனுக்கு எங்கும் உருவம் இல்லை
    [Yajurveda 32:3]5

2. "shudhama poapvidham"
"He is bodyless and pure."
அவன் பரிசுத்தமானவன்
[Yajurveda 40:8]6

3. "Andhatama pravishanti ye asambhuti mupaste"
"They enter darkness, those who worship the natural elements" (Air, Water, Fire, etc.). "They sink
deeper in darkness, those who worship sambhuti."   
 இயற்கை மற்றும் சம்பூதி (நாற்காலி,சிலை,மற்றும் உயிரற்ற பொருள்) வணங்குபவர்கள இருளில் மூழ்கிக்கிடப்பவர்களாவர்.
(காற்று,நீர்,நெருப்பு,)

[Yajurveda 40:9]7

4. Sambhuti means created things, for example table, chair, idol, etc.

The Yajurveda contains the following prayer:
"Lead us to the good path and remove the sin that makes us stray and wander."
[Yajurveda 40:16]8

5[Yajurveda by Devi Chand M.A. page 377]

6[Yajurveda Samhita by Ralph T. H. Giffith page 538]

7[Yajurveda Samhita by Ralph T. H. Giffith page 538]

8[Yajurveda Samhita by Ralph T. H. Griffith page 541].

2. Atharvaveda

The Atharvaveda praises God in Book 20, hymn 58 and verse 3:
1. "Dev maha osi"
"God is verily great"
இறைவன் மிகப்பெரியவன்

[Atharvaveda 20:58:3]9

3. Rigveda
1.  The oldest of all the vedas is Rigveda. It is also the one considered most sacred by the Hindus.
The Rigveda states in Book 1, hymn 164 and verse 46:  "Sages (learned Priests) call one God by many
names."
வலிமார்களும்(துறவிகள்) மஹான்களும் ஒரே அல்லாஹ்(இறையோனை) பல பெயரில் அழைப்பார்கள்.
[Rigveda ]




Sunday 24 June 2018

இஸ்லாமிய அழைப்பாளரான அஹ்மத் தீதாதிடம் ஒரு இறைமறுப்பாளன் கேட்டார்:

நீங்கள் மரணித்து மறுமைநாள் பொய்யென தெரிந்தால் உங்கள் உணர்வு எப்படி இருக்கும்?

தீதாத் சொன்னார்;

நீங்கள் மரணித்து மறுமை நாள் உண்மையென தெரியும் பொழுது உங்களுக்கு ஏற்படும் உணர்வைவிட மோசமாக இருக்காது.

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

நீங்கள் இதுவரை பார்த்திராத அஹமத் தீதாத் வீடியோ
https://m.facebook.com/story.php?story_fbid=1790480224507243&id=1684121598476440

யார் இந்த ஜாகிர் நாயக்
https://m.facebook.com/story.php?story_fbid=1786959881525944&id=1684121598476440

ஜாகிர் நாயக் ,கிறிஸ்தவ போதகருக்கு விட்ட சின்ன சவால்

https://m.facebook.com/story.php?story_fbid=1790108204544445&id=1684121598476440

✘ குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என (தவறான) ஆதாரத்துடன் நிரூபிக்க முயன்ற பாதிரியார்
https://m.facebook.com/story.php?story_fbid=1789010691320863&id=1684121598476440

மனிதன் குளோனிங் மூலம் உயிரினங்களை படைக்க ஆரம்பித்துவிட்டானே; படைக்கும் சக்தியை இறைவனிடமிருந்து மனிதன் பெற்றுக்கொண்டானா...?!
https://m.facebook.com/story.php?story_fbid=1790734021148530&id=1684121598476440

பெண்களின் அரசியல் உரிமைகள்
https://m.facebook.com/story.php?story_fbid=1788560881365844&id=1684121598476440

 அமைதிக்கு மதம் எப்படி தீர்வாக அமைய முடியும்? எத்தியோப்பியாவில் பசியால் சாகும் மக்களுக்கு மதம் எப்படி உதவி செய்யும்?
https://m.facebook.com/story.php?story_fbid=1787806078107991&id=1684121598476440

குர்ஆனில் விஞ்ஞான முறண்பாடு என்ற கற்பனை குற்றச்சாட்டுக்கு மறுப்பு
https://m.facebook.com/story.php?story_fbid=1786580484897217&id=1684121598476440

எல்லா மதங்களும் நல்லதையே போதிக்கும் போது, நான் ஏன் இஸ்லாத்தை ஏற்கவேண்டும்?
https://m.facebook.com/story.php?story_fbid=1785721378316461&id=1684121598476440

மறுபிறவி குறித்து உங்கள் கருத்து
https://m.facebook.com/story.php?story_fbid=1784864705068795&id=1684121598476440

 வேதத்தை கற்றறிந்த ஒரு இந்து சகோதரர் கேட்கும் கேள்வி
https://m.facebook.com/story.php?story_fbid=1780717165483549&id=1684121598476440

✘ பைபிளிலிருந்து குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டதா...?
https://m.facebook.com/story.php?story_fbid=1779353188953280&id=1684121598476440

நபி மொழியை உண்மைப் படுத்தியது விஞ்ஞானம்









சுபஹானல்லாஹ்!! உலகம்
பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது!
நபிமொழியை மெய்ப்பித்தது!
இன்றைய விஞ்ஞானம்!
சொர்க்கம் நரகம் உண்டா..???
மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு கேள்விகள்
கேட்கப்படுவானா...???
1400...ஆண்டுகளுக்கு முன்பு...முகம்மது நபிக்கு யார் சொல்லிக்கொடுத்தது.
எழுத படிக்கத்தெரியாத
முகம்மது நபி இறைவனிடம்
இருந்து... தனக்கு செய்தி
வருவதாக சொன்னார்கள்.
அப்படி வந்த செய்திகள் தான்
திருக்குர்ஆன் அதுமட்டுமின்றி
மக்களுக்கு அவ்வப்போது
சில...ரகசியங்களையும்
சொல்லியுள்ளார்கள்.அப்படி
அவர்கள் சொன்ன.... பல
உண்மையான ரகசியங்களில்
இதுவும் ஒன்று...
மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு [உள்வால்எலும்பு
(# coccyx_bone ) முதுகுத்தண்டின் வேர்ப்பகுதி]
அழியாது....இதை அழிக்கவும்
முடியாது என்று முகம்மது நபியவர்கள் சொன்னார்கள்.
இதை ஆராய்ச்சி செய்ய நினைத்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி
“ஹான்ஸ் ஸ்பீமேன்” இதை தன்னுடைய ஆய்வுக் கூடத்தில் பல ஆயிரம் டிகிரி மூலம் கரிக்கவும் மற்றும்.... பல அமிலங்களைக் கொண்டு கரைக்கவும் முயற்சி
செய்தார் முடிவில் அவருக்கு
கிடைத்தது தோல்வியே...
முடிவில்... முகம்மது
நபிகளின் வாக்கு உண்மையே
என்பதை இந்த உலகுக்கு
தன்னுடைய சோதனையின்
மூலம் நிரூபித்தார்.
இதைத்தான் 1400 வருடங்களுக்கு முன்பே...
அல்லாஹுவின் தூதர்(ஸல்)
அவர்கள் மறுமையில் மனிதனுக்கு அல்லாஹ்
எவ்வாறு உயிர் கொடுப்பான்
என்பதை பின்வரும் நபிமொழி கூறுகிறது..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனின்(மனிதனின் உடலிலுள்ள)
அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும் ;மனிதனின்(முதுகுத்தண்டின்
வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர!....
அதை வைத்தே அவன்
(தன் தாயின் கருவறையில் முதன்முதலாக) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில்)
படைக்கப்படுவான்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5661
பிறகு அல்லாஹ், வானத்திலிருந்து
ஒரு நீரை இறக்குவான்...
உடனே இ(றந்துபோன)வர்கள்
பச்சைப் புற்பூண்டுகள்
முளைப்பதைப் போன்று
எழுவார்கள். மனிதனின்
எல்லா உறுப்புகளும்
(மண்ணுக்குள்) மக்கிப்போய்
விடும்; ஒரே ஒரு எலும்பைத் தவிர! அது (அவனதுமுதுகுத்தண்டின் வேர்ப்
பகுதியிலிருக்கும்)உள்வால்
எலும்பின் (அணுவளவு)
நுனியாகும்.அதை வைத்தே
படைப்பினங்கள் (மீண்டும்
மறுமை நாளில்) படைக்கப்படும்”என்று சொன்னார்கள்.(ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5660

Thursday 31 May 2018



உமர் (ரலி) ஆட்சியில் நடந்த சம்பவம்.
மதீனா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம். எங்குமே பேரமைதி. வானிலே ஆங்காங்கே கண் சிமிட்டும் நட்சத்திரங்கள். இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார்.

*நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்த போது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

*அவரை நோக்கி உமர் (ரலி) இரண்டு முறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம் சொன்னார். அம்மனிதர் ஆவேசப்பட்டு, பக்கத்தில் கிடந்த வாளை எடுத்துக் கொண்டு, “நீ போக மாட்டாயா….? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரனாகக் கூடத் தெரியவில்லையே…? வழிப்பறி கொள்ளையனாகவல்லவா தோன்றுகிறது…?’ எனக் கத்தினார்.

*உமரோ அமைதியாக, “நண்பரே..! நீர் நினைப்பது போல் நான் பிச்சைக்காரனுமல்ல, வழிப்பறி கொள்ளையனுமல்ல. உம்மைப் பார்த்தால் வெளியூர்க்காரர் போல் தோன்றுகிறது. அதனால் தான் உம்மோடு பேச நினைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கையில் கூடாரத்திலிருந்து பெண்ணின் கூக்குரல் கேட்டது. திடுக்கிட்ட உமர் (ரலி) அவர்கள், “அங்கே கூக்குரலிடுவது, யார்..?’ என வினவ, “அவள் என் மனைவி’ என அம்மனிதர் கூற, “அவர் ஏன் கூச்சலிட வேண்டும்..?” என்று உமர் கேட்டார்.

*“பிழைப்பைத் தேடி, இந்நாட்டிற்கு வந்தோம். வந்த இடத்தில் பிரசவ வேதனை தொடங்கி விட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் நான் இங்கு கவலையோடு உட்கார்ந்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் அந்த மனிதர்.

*“மருத்துவச்சியை அழைத்து வருகிறேன்’ என உமர் (ரலி) எழுந்ததும், “வேண்டாம், வேண்டாம்’ எனப் பதறினார் அம்மனிதர். “ஏன் மருத்துவச்சியை வேண்டாம் என்கிறீர்..?’ என உமர் வினவியதும், “மருத்துவச்சிக்குக் கொடுக்க என்னிடம் பணமில்லை’ என்றார் சோகமுடன்.

*“நான் அழைத்து வரும் மருத்துவச்சி, பணம் வாங்க மாட்டாள். கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளி நடந்தார் உமர்.

*வீட்டை அடைந்ததும் தன்னுடைய மனைவியை அழைத்து உடனே புறப்படுமாறு உத்தரவிட்டார். “நீங்கள் சாப்பிடவில்லையா..?’ என மனைவி கேட்க, “இல்லை. அந்தச் சாப்பாடு வேறொருவருக்குத் தேவை’ என்றார். “கொஞ்சம் பாலாவது அருந்துங்களேன்’ என்றதும், “வேண்டாம். பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். உடனே அவற்றை எடுத்துக் கொண்டு புறப்படு. நான் ஒட்டகத்தை ஓட்டி வருகிறேன்’ என்று புறப்பட்டார் உமர்.

*சிறிது நேரத்தில் உமரும், அவருடைய மனைவியும் கூடாரத்தை அணுகியதும், மனைவியை கூடாரத்திற்குள் அனுப்பி விட்டு உமர் அவர்களும், அம்மனிதரும் வெளியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

*“இந்நாட்டிற்கு உமர் தானே இப்போது தலைவர்…?’

**“ஆமாம்.’

*“அவர் மிகவும் கடினமானவர் என்கிறார்களே..!’

*“அது அவரவர் கருத்தைப் பொறுத்தது.’

*“நீர் உமரை பார்த்திருக்கிறீரா….?’

*“பார்த்திருக்கிறேன்.’

*“அவரிடம் நிறையப் பணம் இருக்குமே?’

“அவரிடம் ஏது பணம்…?’

*“என்ன வேடிக்கை, ஒரு அரசாங்கத் தலைவர் பணம் சேர்த்து வைக்காமலா இருப்பார்…?’

*“அப்படி பணம் சேர்க்கும் யாரையும் நாங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதில்லை.’

*இச்சமயத்தில் கூடாரத்திலிருந்து மருத்துவச்சியின் குரல் ஒலித்தது. “ஜனாதிபதி அவர்களே…! உங்கள் நண்பருக்கு வாழ்த்துக் கூறுங்கள். அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.’

*“ஜனாதிபதி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் அந்த மனிதர் உடல் நடுங்கி, உமரின் காலில் விழச் சென்றார். அம்மனிதரை அணைத்துக் கொண்டு, “நண்பரே…! ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்…? என்ன நடந்துவிட்டது..?’ என அன்போடு கேட்டார் ஜனாதிபதி உமர் அவர்கள்.

*“அப்படியானால் மருத்துவம் பார்த்த அந்தப் பெண்மணி யார்..?’ என அம்மனிதர் வினவ, “அவர் எனது மனைவி’ என உமர் கூறவும், ஆச்சரியத்தால் திகைத்துப் போன அந்த மனிதர், நன்றி கலந்த குரலில் கேட்டார், “இந்த நாட்டின் தலைவரான தாங்களா இவ்வளவு ஊழியம் எனக்குச் செய்தீர்கள்…?’

*“இதில் வியப்படைய என்ன இருக்கிறது நண்பரே…? ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே…! நாளை பள்ளிவாசலுக்கு வாருங்கள். உங்கள் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்வோம்’ எனக்கூறி புறப்பட்டார் உத்தமர் உமர் (ரலி) அவர்கள்.

*இத்தகைய உயர் பண்பு நலன்களுடன் ஆட்சி செய்தவர் உமர் (ரலி) அவர்கள்.

Wednesday 30 May 2018




கண்ணால் காண்பது பொய்!....கணக்கீட்டில் அறிவதே மெய்!
எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7.

மாதத்தை துவக்குவதற்கான பிறை பார்த்தல், இன்று முஸ்லிம்களிடையே பல்வேறு குழப்பங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதை பார்க்கிறோம்.இதன் காரணம் என்னவென்று சிந்திக்கும்போது ஒரு ஹதிஸின் நோக்கத்தை எப்படி விளங்கி செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை அறியாததே ஆகும்.பிறை பார்த்தலுக்கான ஹதீஸை பார்ப்போம்.

நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்.மறைக்கப்பட்டால் நாள்களை எண்ணிக்கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்  (ரலி)    புஹாரி. 1900,1906. முஸ்லிம்.1958.

இது போன்ற சொற்களுடன் இன்னும் சில ஹதீஸ்கள் உள்ளன, ‘”மறைக்கப்பட்டால் ஷபானின் எண்ணிக்கையை முப்பதாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.”

இந்த ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு நோக்கத்தை சுட்டிக் காட்டி அதற்கான சாதனமொன்றையும் குறிப்பிடுகிறது. ஹதீஸின் நோக்கத்தை பொறுத்தவரையில் அது தெளிவானது. அதாவது ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைக்க வேண்டும்.அதன் ஆரம்பத்திலோ  அல்லது இறுதியிலோ ஒரு நாளைக் கூட வீணாக்கக்கூடாது.அவ்வாறே ஷாபான் அல்லது ஷவ்வால் மாதத்தின் நாட்களில்  நோன்பு நோற்கக் கூடாது என்பதே அந்த ஹதீஸின் அசலான நோக்கம்.

பெரும்பான்மை மக்களது சக்திக்குட்பட்ட, மார்க்க விசயத்தில் எவ்வித கஷ்டத்தையும் சங்கடத்தையும் உண்டு பண்ணாத சாதனம் ஒன்றைக் கொண்டு,மாதத்தின் தொடக்கத் தையும் முடிவையும் உறுதிப்படுத்துவதன் மூலமே இந்நோக்கம் நிறைவு செய்யப்படும் வெற்றுக்கண்ணால் பார்ப்பதே அக்காலத் தில் சாத்தியமான,இலகுவான வழிமுறை யாக இருந்ததாலே அதைக் குறிப்பிட்டு ஹதீஸ் வந்தது. எழுதவோ,கணக்கிடவோ தெரியாத சமூகத்தில் கணக்கீடு போன்ற வேறு வழிமுறை மூலமாகவே மாத துவக்கத்தை முடிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தால், அது அவர்களை கஷ்டத்தில் ஆழ்த்தியிருக்கும்.

.அல்லாஹ், நபியவர்கள் உம்மத்திற்கு இலகுவை விரும்புகிறானே தவிர கஷ்டத்தை அல்ல. எனினும் இந்த ஹதீஸின் நோக்கத்தை நிறைவேற்றுவ தற்கு புறக்கண்ணை விடப் பலமான மற்றொரு சாதனம் கிடைத்து விடுமாயின், அச்சாதனம் எவ்வித தவறோ,அனுமானமோ ,பொய்யோ இன்றி, உரிய மாதம் துவங்கி விட்டதை தெளிவாக காட்டக்கூடியதாகவும் ,முஸ்லிம் சமுகத்தின் சக்திக்குட்பட்டதாக வும் காணப்படுமாயின்; பழைய வழிமுறை யைப் பிடிவாதமாக பற்றிப்பிடித்துக் கொண்டு,ஹதீஸின் அசலானநோக்கத்தை  ஏன் அலட்சியப்படுத்தக் வேண்டும்.? 

அதிலும் இன்று முஸ்லிம் சமுகத்தில் பல வானவியல்,புவியியல்,இயற்பியல் விஞ்ஞானிகளும் தேர்ச்சி பெற்ற நிபுணர்களும் சர்வதேச அளவில் உருவாகிவிட்ட பின்னரும், மனிதன் சந்திரனுக்கு சென்று மீண்டு,அடுத்து செய்வாய் கோளுக்குச் செல்ல தயார் படுத்தும் சூழலில், முஸ்லிகளாகிய நாம் ஏன் இன்னும் அறிவியல் அணுகுமுறையில் தேங்கி நிற்க வேண்டும்.
 
வெற்றுக் கண்ணால் பார்ப்பதத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், ஓரிருவர் தாம் பிறையைக் கண்டதாக கூறும் செய்தியை வைத்து உரிய மாதம் துவங்கி விட்டதை ஏற்க முடியும் என்று ஹதீஸ் கூறும் போது, எவ்வித தவறோ,பொய்யோ, யூகமோ ஏற்பட முடியாததும், திட்டவட்டமான முடிவைத் தரக்கூடியதும், கிழக்கிலும்,மேற்கிலும் வாழுகின்ற ஒட்டு மொத்த முஸ்லிம் சமூதாயமும் ஒன்று பட்டு ஏற்கக்கூடியதும், நோன்பு திறப்பதிலும், விடுவதிலும்,பெருநாள் கொண்டாடுவதிலும் நிரந்தரமாக தீர்வு தரக்கூடிய ஒரு சாதனத்தை நாம் எவ்வாறு புறக்கணிக்க முடியும்?

ஒரு நாட்டிற்க்கும் அருகிலுள்ள மற்றொரு நாட்டிற்கும் இடையில் மூன்று நாட்கள் வித்தியாசப்படும் அளவுக்கு இன்று பிறை காண்பதில் முரண்பாடு உள்ளது. இது அறிவுப்பூர்வமான முரண்பாடு அல்ல.இதை மார்க்க ரீதியாகவோ,அல்லது அறிவியல் ரீதியாகவோ  ஏற்கமுடியாது. இம்மூன்றில் ஒன்றில் மட்டுமே உண்மையிருக்க முடியும்.ஏனையவை தவறானவை என்பதில் எவருக்கும் ஐயமில்லை.திட்டவட்டமான கணக்கீட்டு முறையை எடுத்துக் கொள்வதே மாதங்களின் சரியான துவக்கத்தை அறியும் வழிமுறையாக இன்று உள்ளது.

1400 ஆண்டுகளுக்கு முன்னால் வெற்றுக் கண்ணால் பார்க்கும் குறைந்த திறன் சாதனத்தை தந்தது அன்று சரியே. ஆனால் இன்று அதை விட திறன் மிகுந்த சாதனத்தை பயன்படுத்தி துல்லியமாக மாத துவக்கத்தை கணக்கிடுவதை நிச்சயமாக ஸுன்னா மறுக்காது. நோன்பை நோற்பதிலும் விடுவதிலும், உழ்ஹிய்யா கொடுக்கும் நாளை தீர்மானிப்பதிலும் காணப்படும் கருத்து வேறுபாட்டிலிருந்து முஸ்லிம் உம்மத்தை விடுவித்து....வணக்க வழிபாடுகளில் ஒன்றுபட்ட ஒரே நாளில் அனைவரும் அமல் செய்யும் ஆரோக்கியமான மாற்றத்தை கணக்கீட்டு சாதனமே தர முடியும். இந்த மாற்றம் குர் ஆன்  ஹதீஸ்களுக்கு உடன்பாடானதே.

சாதனங்கள் காலத்திற்கு காலம் மாறும்.சூழலுக்கு சூழல் மாறுபட முடியும்.அவ்வாறு மாறுவது அவசியமானதும் கூட .எனவே ஹதீஸ்கள், அச்சாதனங்களில் எதனையாவது குறிப்பிட்டு கூறு மாயின் அது யதார்த்தத்தை விளக்குவதற்காகவேயன்றி. அவற்றின் மீது நம்மை கட்டிப்போடுவதோ,அவற்றோடு நம்மை போதுமாக்கிக்கொள்வதற்கோ அல்ல.

உதாரணமாக, அல்லாஹ்வின் வழியில் போரிடுவதற்கு போர் சாதனங்களை தயார் செய்யச் சொல்கிறது அல் குர்ஆன்…

அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான)  போர்க் குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார் படுத்தி வையுங்கள்.இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம்
- அல் குர்ஆன்.8:60.

இந்த வசனத்தின் அசல் நோக்கம்,ஒரு முஸ்லிம் ஆட்சியாளர் ஒரு பலமான போர்ச் சாதனங்களை எப்போதும் தயார் நிலையில்  வைத்திருக்க வேண்டும்.இந்த ஆயுத பலமே எதிரிக்கு அச்சம் ஏற்படுத்தும்.அன்று குதிரைகளே போருக்கு விரைந்து செல்லும் உந்து சக்திகளாக இருந்தன.அதே குதிரைகளை இன்று ஒரு முஸ்லிம் ஆட்சியாளர், குர்ஆனில் குதிரை என்றுதான் சொல்லப்பட்டுள்ளது, எனவே எங்களுக்கு விமானம்,ஏவுகணை,யுத்த டேங்க், தேவையில்லை என்று சொன்னால்...இது அறிவுக்குப் பொருத்தமாகுமா? எவரும் இப்படி அல்லாஹ்வின் வசனங்களை அனர்த்தமாக்குவதில்லை.

இதற்குக்காரணம், போர்க்குதிரைகளே அன்று அதிவிரைவு சாதனமாக இருந்தது.இன்று அதைவிட சக்தி வாய்ந்த ஒலி வேகத்தை விஞ்சிப் பறக்கும் விமானம்,ஏவுகணைகள் சாதனங்கள் இருப்பதால்..அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற இன்று குதிரைகள் தேவைப்படுவதில்லை.இதே நிலைதான் புறக்கண்ணில் பிறையைப் பார்ப்பதும்.நமது கண்ணை விட துல்லியமாக பார்க்க,கணக்கிட கணினிகள் வந்து விட்டதால்...இன்று புறக்கண்ணை புறக்கணித்து,  மாத துவக்கத்தை துல்லியமாக அறிந்து கொள்ள கணக்கீட்டு வழி முறையை கைக்கொள்வதே அழகிய ஸுன்னா. அல்லாஹ்வின் மார்க்கம் சொல்லும் கட்டளையும் இதுவே.

கணக்கீட்டு அறிவை பயன்படுத்து.
ரமலான் பிறையை நீங்கள் காணும்வரை நோன்பு நோற்காதிர்கள்; பிறையை காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மறைக்கப்பட்டால் (முப்பது  நாள்களாக) அதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். – புஹாரி,முஸ்லிம்,நஸாயி,இப்னுமாஜா,முஸ்னத் அஹ்மத், தாரமி,

ஏராளமான ஹதீஸ் நூல்களில் இச்செய்தி பதியப்பட்டுள்ளது.இதன் அரபி வாசகத்திற்கு ஆங்கில மொழி பெயர்ப்புகள் எப்படி பொருள் தருகின்றன என்றால்,

“அத்தரு“ என்னும் சொல்லானது “ கத்ர்” மற்றும் ‘தக்தீர்” என்னும் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.அதன் பொருள் கணக்கிடு (மதிப்பிடு), வேறோன்றோடு ஒத்திருக்கும் ஒருபொருள், அதிகாரமோ ஆதிக்கமோ வழங்குதல்,ஏதேனும் ஒன்றின் நேர்மை, அல்லது செல்லக்கூடிய தன்மை பற்றி சிந்தித்தல், குறிப்புகள் மற்றும் அடையாளங்கள் மூலமாக முடிவு காணல்.,அல்லாஹ்வின் விதி அல்லது முடிவு.  – லிசானுல் அரப்.V.5.PP 74-75.

இப்படி பல பொருள் இருப்பதாலேதான் இந்த ஹதீசை அதாவது, மறைக்கப்பட்டால்,தடையிருந்தால்,உங்கள் அறிவையும்,விவேகத்தையும் பயன்படுத்தவும். (is “use discretion or reasoning, if there is anything overcasts”.) என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்கள்.வெற்றுக்கண்ணில் மூன்றாம் நாள் பிறைப்பார்த்து அதை முதல் நாளாக கணக்கிடும் மூடத் தன்மையை விட்டு,அறிவை,அறிவியல் கணக்கீட்டை பயன்படுத்தச்  சொல்கிறார்கள்.


முதுபெரும் ஹதீஸ் துறை  அறிஞரான அல்லாமா செய்கு அஹமது ஷாகிர் (ரஹ்) அவர்கள், இவ்விவகாரத்தை வேறொரு கோணத்தில் அணுகுவதை பார்ப்போம்.

“பிறையை கண்ணால் பார்த்தல்” என்பது ஓர் “இல்லத்” எனும் காரணத்துடன் தொடர்பு பட்ட அம்சமாகும்.அந்த “இல்லத்”தை ஸுன்னாவே குறிப்பிட்டு காட்டியுள்ளது.எனினும்,இப்போது புறக் கண்ணால் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை மாறிவிட்டதால் அதன் அடிப்படையாக  கொண்டுவந்த சட்டமும் இல்லாமல் போய்விடுவது அவசியமாகி விடுகிறது. எப்போதும் ஒரு சட்டம் அதற்குரிய “இல்லத்” உடன் சம்பந்தப்பட்டே வரும்.என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

இந்த சிந்தனையின் அடிப்படையிலேயே வானவியல் கணக்கீட்டு மூலம் சந்திர மாதம் துவங்குவதை உறுதிப்படுத்த முடியும் என்ற கருத்துக்கு அவர் வருகிறார். பலமும் தெளிவும் கொண்ட அவரது கூற்றை அப்படியே இங்கு தருவது பொருத்தமாக அமையும். “ அவாயிலுஷ் ஷு ஹுர் அல் அரபிய்ய” என்ற கட்டுரையில் அவர் கூறுவதை பார்ப்போம்.

“இஸ்லாத்திற்கு முன்னரும், இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலும் வானவியல் கலைகளைப் பற்றிய விஞ்ஞான பூர்வமான அறிவை அரபிகள் பெற்றிருக்கவில்லை.என்பதில் எவ்வித ஐயமுமில்லை.எழுதவோ,எண்ணவோ தெரியாத உம்மீ சமூகமாகவே அவர்கள் இருந்தார்கள்.

.”மாதம் என்பது இருபத்தொன்பதாகும் எனவே பிறையைப் காணும்வரை நோன்பு நோற்க வேண்டாம்,அதனைக் காணும் வரை நோன்பு நோற்பதை நிறுத்த வேண்டாம்.அது உங்களுக்கு தெரியாது போனால் அதனைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.’’--- புஹாரி,முஸ்லிம்.

நமது ஆரம்ப கால அறிஞர்கள் இந்த ஹதீஸின் பொருளை சரியாக (தப்ஸீர்) விளக்கினாலும், இதற்கு வியாக்கியானம் (தக்வீல்) கொடுக்கும் விசயத்தில் தவறிழைத்து விட்டனர்.இவ்விசயத்தில் அவர்கள் அனைவரது அபிப்பிராயத்தையும் மொத்தமாக வெளிப்படுத்தக் கூடியதாக அல் ஹாபிழ் இப்னு ஹஜ்ரின் கூற்று காணப்படுகிறது.


“கணிப்பீடு (அல்-ஹிஸாப்) என்பதன் மூலம் இங்கு நாடப்படுவது நட்சத்திரங்களையும் அவற்றின் அசைவுகளையும் பற்றிய கணிப்பீடாகும் அவர்கள் இவ்விசயம் பற்றி மிகக் குறைவாகவே அறிந்து வைத்திருக்கின்றனர். எனவேதான், நோன்பு மற்றும் ஏனைய வணக்கங்கள் பற்றிய தீர்ப்பு, பிறையை கண்ணால் பார்ப்பதோடு தொடர்பு  படுத்தப்பட்டது.நட்சத்திரங்களின் அசைவு பற்றி அறிந்து கொள்வதிலுள்ள சிரமத்தை நீக்குவதே இதன் நோக்கமாகும்.

பின்னர் இவ்வறிவு பெற்றோர் தோன்றினாலும்,நோன்பு நோற்றல் தொடர்பான தீர்ப்பு பழையபடி தொடர்ந்தது  மட்டுமின்றி, ஹதீஸின் வெளிப்படையான வசனப்போக்கு, இத்தீர்ப்பை நட்சத்திரங்களின் கணிப்பீடுடன் தொடர்புபடுத்துவதை முற்றாக மறுப்பது போலவும் அமைந்திருக்கிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஹதீசிலுள்ள “ உங்கள் பார்வைக்கு அது தென்படாவிட்டால் எண்ணிக்கையை முப்பதாக பூரணப்படுத்துங்கள்.” என்ற பகுதி இதனை காட்டுவதாய் உள்ளது.

அல் பாஜி கூறுகிறார், “ பிறை பார்த்தலில் நட்சத்திரங்களை தொடர்பு படுத்துவது சஹாபா பெருமக்களின் கூற்றுக்கு முரணாக உள்ளது.இப்னு பஸீஸா கூறுகிறார்கள், “ இது பிழையான போக்காகும்.நட்சத்திரக் கலையில் ஈடுபடுவதை ஷரியத் தடுத்துள்ளது.ஏனெனில் அது வெறும் யூகமும் அனுமானமும் ஆகும்.அதில் திட்டவட்டமான தன்மையோ,சாத்தியப்பாட்டுத் தன்மையோ கிடையாது.ஆக இங்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய அம்சம் “கண்ணால் பார்த்தல்” என்பதே தவிர நட்சத்திர கணிப்பீடல்ல, என்ற இவ்விளக்கம் சரியாக இருப்பினும்,  இத்துறை பற்றி அறிந்தவர்கள் தோன்றிய பிறகும் கூட “கண்ணால் பார்த்தலின்” அடிப்படையிலேயே நோன்பு பற்றிய தீர்ப்ப  வழங்கப்பட வேண்டும் என்ற வியாக்கியானம் (தக்வீல்) தவறானதாகும்.

ஏனெனில் இவ்விசயத்தில் கண்ணால் என்னும் கட்புலனில் மாத்திரம் தங்கி இருக்கவேண்டும் என்ற கட்டளையானது குறிப்பிட்டதோர் “இல்லத்” உடன் இடம் பெற்றதாகும்.சமூகம் எழுதவோ, எண்ணவோ தெரியாத உம்மீ சமூகமாக இருந்தது என்பதே அந்த “இல்லத்” (காரணம்) ஓர் காரணமும்,அந்த காரணத்தினால் உருவான சட்டமும் (மக்லூல்) எப்போதும் இணை பிரியாதவை.”இல்லத்” இருக்கும்போது “மக்லூல்” சட்டமும் இருக்கும்.இல்லத் நீங்கி விட்டால் சட்டமும் நீங்கி விடும். அந்த வகையில், ஒரு உம்மீ சமூகம் தனது எழுத்தறிவற்ற நிலையிலிருந்து விடுபட்டு, எழுதவும்,படிக்கவும்,உடைய அறிவாற்றலை பெற்றுக்கொள்ளுமாயின், அதாவது முழு சமூகமும் வானியல் கலைகளைப் பற்றிய அறிவைப் பெற்று...

அதிலுள்ள படித்தவர்களும்,பாமரர்களும்,மாதத்தின் தொடக்கத்தை கணக்கிடுவதில் திட்டவட்டமான ஒரு நிலைப்பாட்டிற்க்கு வர முடியுமாயின், கண்ணால் பார்த்தல் என்ற தேவை இல்லாமல் போய்விடும் போது; பார்க்க வேண்டும் என்ற சட்டமும் போய்விடும்.ஏனெனில் கண்ணால் பார்த்தலை விட கணினி மூலம் கணக்கீடும முறை பலமானது,நம்பத்தகுந்தது. ஆகவே கணக்கீட்டு முறைக்கு சமூகம் மாறுவது கடமையாகும்.கணினி அறிவு கிடைக்கப் பெற்ற காலத்திலும் புறக்கண்ணை நம்புவதால் ஏற்படும் பிழைகளை இன்றும் நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.

இவ்வருட ரமளான் பிறை 16-5-2018 அன்று புதன்கிழமை துவங்கி விட்டது, கண்ணில் பார்த்துத்தான் நாளை ஆரம்பிப்பவர்கள், புதன் கிழமை மாலை மறையும் முதலாம் பிறையைக் கண்டு அடுத்த நாள் வியாழக்கிழமையை முதல் பிறை என்று ரமலானை தொடங்கினர்.புதன் கிழமை மாலையில் பிறையைப் பார்க்க இயலாத இலங்கை உலமாக்கள், பிறர் பார்த்ததை ஏற்றுக்கொள்ளாமல் வெள்ளிக்கிழமை நோன்பை தொடங்கினர்.

அந்த வெள்ளிக்கிழமை மூன்றாம் பிறை இலங்கை மவுலவிகளுக்கு முதல் பிறையாக தெரிகிறது.ஆகவேதான் சொல்கிறோம்,இவர்கள் காண்பதெல்லாம் பொய் பிறையே தவிர மெய்யான அந்தநாளுக்குரிய பிறையல்ல.இந்த ஆலிம் உலமாக்களின் பிற்போக்கான புறக்கண் பார்வையால், அல்லாஹ்வின்  அருள் வழங்கும் மாதத்தின் சிறப்பான நாட்கள்,குறிப்பாக ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல்கத்ரை இழப்பதுடன்,ஹராமான நாளில் முஸ்லிம் சமுதாயம் நோன்பு நோற்ற குற்றத்திற்கும் ஆளாக நேரிடுகிறது. அல்லாஹ்  இம்மக்களுக்கு நேர்வழி காட்டுவானாக,இவர்களின் இதயத்தை விசாலப்படுத்துவானாக.
[11:31, 29/05/2018] ‪+94 77 334 0530‬: اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ‏ 
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 55:5)

Tuesday 29 May 2018

பிள்ளைகளின் முதல் ஆசிரியை,அப்பிள்ளைகளின் தாய்தான்

குழந்தைகள் முதலில் கற்கும் கல்வி தாயிடமே. அந்த தாய் எதை சொல்லி தருகிறாளோ அதுவே பசு மரத்தாணி போல் உள்ளத்தில் பதிந்து விடும். ஒரு தாய் நினைத்தால் தன் குழந்தையை எப்படிப்பட்டவர்களாகவும் உருவாக்க முடியும் இது தாயின் கடமையும் கூட. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொருவரும் உங்களின் பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள் ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்கும், அவனின் குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அறிவிப்பாளர் உமர்(ரலி) அவர்கள் புகாரி 2554.

ஆகவே, தாய் குழந்தைகளுக்கு முதலில் மார்க்க கல்வியை கற்று தரவேண்டும் அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதில் தான் மறுமை வெற்றி உண்டு தினமும் காலை மாலை குர்ஆன் பாடம் சொல்லி கொடுக்க வேண்டும் இரவில் தூங்கும் போது குழந்தைகளுக்கு (முன்னோர்கள்) பாட்டி கதை சொல்வார்கள் தற்போதுள்ள குழந்தை சினிமா, சீரியல், கிரிக்கெட் இன்னும் பல. இதை தவிர்த்துவிட்டு குழந்தைகளுக்கு நபி(ஸல்) அவர்களின் போதனைகளை அழகிய முறையில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

உதாரணமாக குகைவாசிகள் ஹதீஸ் உள்ளது. மூவர் பாறைக்குள் நுழைந்து கொண்டார்கள் பாறை மூடியது அப்போது ஒவ்வொருவடைய பிரார்த்தனையால் வெளிவே வந்தார்கள் அதில் ஒருவர் தன் தாய்க்கும், தந்தைக்கும் செய்த பணிவிடையால் பாறை விலகியது. இந்த ஒரு செய்தியை மட்டும் வைத்து அழகாக சொல்லலாம். அப்படியே குழந்தைகள் உள்ளத்தில் பதிந்து விடும். பிறகு பாருங்கள் அந்த குழந்தை தாய் தந்தையருக்கும் செய்ய வேண்டிய முதல் கடமையை சிறு வயது முதல் அறிந்து கொள்வார்கள். இஸ்லாத்தில் முதல் வணக்கம் அல்லாஹ்வுக்கு அடுத்த தாய் தந்தையர்களுக்குதான் என்று 17:23 என்ற வசனத்தில் அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

அடுத்து குழந்தைகள் மார்க்க கல்வி பயில சரியாக செல்கிறார்களா பள்ளிக்கூடம் சரியாக போகிறார்களா நல்ல நண்பர்களோடு பழகுகிறார்களா? காசை வீண்விரயம் செய்யாமல் நல்ல செலவு செய்கிறார்களா? என்று பல அம்சங்களை கவனிக்க வேண்டும் மேலும் நேற்றைய படிப்புக்கும் இன்றைய படிப்புக்கு குழந்தையிடம் என்ன வித்தியாசம் உள்ளது என்று கவனிக்க வேண்டும். புதிய நண்பர்கள் உருவாகும் போது அவர்களுடைய பழக்கங்களையும் ஆராய வேண்டும் முதலில் தொழுகை உள்ளதா? என்று கவனிக்க வேண்டும் எந்த அளவிற்கு குழந்தையை கவனிக்கிறீர்களோ அந்த அளவிற்கு குழந்தையின் வெற்றியை காண்பீர்கள்.
                                                                               




Friday 25 May 2018

றமளானில் கேட்கவேண்டிய துஆக்கள்

 
றமளானில் கேட்க வேண்டிய துஆக்கள்  
    *****************************
1.எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக.
2.இறைவா! முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக.
3.இறைவா! ரமலான் உடைய அருட்கொடைகளையும் பரக்கத்துகளையும் எங்களுக்குநிறைவாக தந்தருள்வாயாக!
4.இறைவா எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக! மேலும் ஹலாலான ரிஸ்கை த‌ந்தருள்வாயாக!
5.இறைவா! இஸ்லாமிய சட்டத்தின்படி முழ்மையான முறையில் செயல் படக் கூடியவ‌ர்க‌ளாக‌ எங்களை ஆக்கியவைப்பாயாக!
6.இறைவா! நீயே எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக! மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றிவைப்பாயாக! மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!
7.இறைவா! லைலத்துல் கத்ர் இரவை பெறக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வயாக!
8.இறைவா! ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடிய பாக்கியத்தை எங்களிக்குத் தந்தருள்வாஆக!
9.இறைவா! பொய் புறம், கோபம்,பொறாமை இன்னும் சண்டை சச்சரவுகளை விட்டும் எங்களை காப்பாயாக!
10.இறைவா!வறுமையின் பயம் மற்றும் கடன் சுமையை விட்டும் எங்கலை பாதுகாப்பாயாக!
11.இறைவா!எஙக்ளின் சிறிய பெரிய பாவங்களை மன்னிப்பாயாக!
12.இறைவா! தஜ்ஜாலுடைய குழப்பங்கள், ஷைத்தான் மற்றும் மனோ தீங்குகளை விட்டும் எங்களை காப்பாயக!
13.இறைவா! முழுமையான பர்தா முறையில் பெண்களை வாழச்செய்வாயாக!
14.இறைவா! சிறிய பெரிய எல்லா நோய்களை விட்டு எங்களை வாழச்செய்வாயாக!
15.இறைவா! இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!
16.இறைவா! பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!
17.இறைவா பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழ வைப்பாயாக!
18.இறைவா! நாளை மறுமை நாலிபெருமனார் (ஸல்) அவர்களின் பொற்கரத்தால் ஹவ்ளுள் கவ்தர் தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக!
19.இறைவா! மறுமை நாளில் பெருமனார் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு அருள்வாயாக!
20.இறைவா! உன்னுடைய பிரியத்தையும் எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக!
21.இறைவா! மரண வேதனை, மண்ணரை வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!
22.இறைவா! இறைவா! முன்கர் நக்கீர் உடைய கேள்வி கனக்கை எங்களுக்கு இலேசாக்கி வைப்பாயாக!
23. இறைவா! கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு த்ந்தருள்வாயாக!
24.இறைவா! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாக!
25.இறைவா! கியாமத் நாளில் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!
26.இறைவா! கியாமத் நாளில் இழிவுகலை விட்டும் எங்களை மூமீனான ஆண், பெண் அனைவரையும் காப்பாற்றுவாயாக!
27.இறைவா! எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுபாயாக!
28.இறைவா! கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயக!
29.இறைவா! ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக!
30.இறைவா! உன்னுடைய அருளை கொண்டு எங்களுடைய அனைத்து பாவத்தையும் மன்னித்து எங்களை சொர்க்கத்தில் நுழைய செய்வாயாக!


AR. ரஹ்மானிடம் அமெரிக்காவில் கேட்கப்பட்ட ஓரு கேள்வி !

உங்கள் நாட்டில் யார்ஆட்சி அமைத்தால் நலமாக இருக்கும் என விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டபோது
A.R ரஹ்மான் கூறிய பதில்:-

இந்தியாவில் யார் ஆட்சி சிறப்பானது என்று நான் கூறுவதை விட பண்டைய சவூதி அரேபியாவில் கலிபா உமர்(ரலி)அவர்களின் ஆட்சி போல் இருந்தால் நலமாக இருக்கும் என விரும்புகிறேன் ! !

சுதந்திரத்தை எழுதிக்கொடுத்த பின் ஆங்கி லேய அதிகாரி சுதந்திர இந்தியாவின் ஆட்சி எவ்வாறு இருக்க ஆசைபடுகிறீர்கள் எனக் கேட்ட போது,

காந்தி அவர்கள் உடனே அழித்த பதில் : -

அரேபி தேசத்தில் ஆட்சி செய்த ஜனாதிபதி உமர் (ரலி)என்பவரின் ஆட்சி போல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

கெஜிர்வால் டெல்லியை வெற்றி பெற்ற கையுடன் அவரிடம் நீங்கள் எவ்வாறு ஆட்சி அமைக்க விரும்புகிறீர்கள் என்று கேட்ட போது,

கெஜிர்வால் அழித்த பதில் : -
உமர் அவர்களுடைய ஆட்சியை போல் செயல்பட விரும்புகிறேன்.

இதை படித்தவுடன் உங்களில் எழும் கேள்வி யார் அந்த உமர் (ரலி)

உமர் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஓரு சம்பவத்தை இங்கு சொல்கின்றேன் ,

அதன் பின் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் பாலஸ்தீன்  யூதர்களிடம் இருந்து வெற்றி பெற்று மீண்டும் இஸ்லாமியர் கைவசம் வந்து விட்டது உமர்(ரலி) ஜனாதிபதியாக ஆனார். தான் செல்லாமல் தன் படைவீரர்களை வைத்து மீட்டார், அப்பொழுதைய பாலஸ்தீன வாசிகள் தங்களின் ஆட்சியாளர் உமர் (ரலி)அவர்களின் முகத்தை பார்க்க ஆசைப் பட்டு ஆர்வத்தில் கிளர்ச்சி செய்தனர்.

இதையறிந்த உமர் அவர்கள் தனக்கு துணையாக ஆட்சியின் பணியாளர் ஓருவரை அழைத்து கொண்டு பாலஸ்தீனம் புறப்பட்டு சென்றார்.

சவுதி அரேபியா தேசத்தில் இருந்து தற்போதைய இஸ்ரேலுக்கு ஒரு ஒட்டகத்தில் உமர்(ரலி) அவர்களும் அவரின் வேலையாளில் ஓருவரையும் அழைத்து சென்றார் என்றால் எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் ?

உமர்(ரலி) அவர்கள் செல்லும் வழியில் தன் பணியாளிடம் ஓரு குறிப்பிட்ட அளவை சொல்லி அதாவது இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு ஓட்டகத்தில் நான் அமர்வேன்,
பின் நீ இரண்டு கிலோமீட்டர் நீ அமர்ந்து வா என்று ஓப்பந்தம் செய்து கொண்டார்கள்.

உமர்(ரலி) அவர்களே ஒட்டகத்தில் முழுவதுமாக அமர்ந்து வந்தாலும் யாரும் கேட்கமுடியாது
இருந்தும் சம உரிமையைப் பேணினார்.
அவ்வாறே மாறி மாறி சுழற்சி முறையில் பயணித்து பாலஸ்தீன எல்லையை நெருங்கி விட்டார்கள்.

பாலஸ்தீன எல்லைக்குள் மக்கள் இரு வழி யிலும் பெருங்கூட்டமாக காத்து நின்றார் கள்
அவர்களை முஸ்லிம் தளபதி ஓருவர் கட்டு படுத்தி உமர்(ரலி)அவர்களின் வரவை எதிர் நோக்கியிருந்தார்
உமர்(ரலி) அவர்கள் பாலஸ்தீன எல்லைக் குள் நுழையும் நிலையில் உமர்(ரலி) அவர்களின் ஓட்டகத்தில் அமரும் தூரம் முடிந்து விட்டது,உமர்(ரலி) அவர்கள் ஒட்டகத்தை பணியாளிடம் தந்தார்.

பணியாளோ தற்போது எல்லைக்குள் நுழைய இருக்கிறோம் நீங்கள் தொடர்ந்து அமருங்கள் எனக் கூறினார்.

மேலும் மக்கள் காணும் போது நீங்கள் ஓட்டகத்தில் அமர்வதே சரியென்றார்.

ஆனால் உமர்(ரலி) அவர்களோ நான் இங்கு ஓட்டகத்தில் மன்னனாக அமர்வதை விட
நான் ஓப்பந்தத்தை மீறாத அடியானாக இறைவன் முன் நிற்க ஆசைப்படுகின்றேன்.
அதனால் மிகவும் களைப்பாக இருக்கும் நீ அமர்ந்துகொள் என்று பணியாள் அமர்ந்தி ருக்க ஓட்டகத்தை பிடித்து கொண்டு பாலஸ் தீனத்தில் புகுந்தார்கள்.

மக்கள் அனைவரும் பணி யாளரை மன்னரென நினைத்து ஓட்டகத்தில் இருப்பவரை பார்த்து மகிழ்ச்சி கொணடார்கள்.

மக்கள் பணியாளரே மன்னன் என நினைக்க மற்றொரு காரணம், பணியாளின் சட்டையில் மூன்று கிளிஞ்சல்கள் ஒட்டகத்தை பிடித்து வந்த உமரின் ஆடையிலோ 16 கிளிஞ்சல்கள்,

அங்கே இருந்த மக்கள் யாரும் இதற்கு முன் உமர் அவர்களை பாத்ததில்லை என்பதால் பணியாளை மன்னனாக உறுதியாக்கி பார்த்தார்கள்.

அங்கே முஸ்ஸீம் தளபதி காலித் பின் வாலித் அவர்கள் ஒட்டகத்தில் பணியாள் அமர்ந்து உமர் நடந்து வருவதை கண்டதும் தன் உடைவாளை உருவிக் கொண்டு பணியாளை வெட்டு வதற்காக விரைந்து வந்தார்.

அதை கண்ட உமர் காலித் அவர்களை தடுத்து நீங்கள் வரம்பு மீற வேண்டாம்.

மேலும் ஒப்பந்தபடியே அவர் அமர்ந்து வரு  றார் எனக் கூறினார்.

அப்போது அங்கிருந்த மக்கள் உமர்(ரலி) அவர்களின் நேர்மை, தன்னடக்கம் அனைத்தையும் கண்டு இப்படி ஓருவர் ஆட்சியில் தாங்கள் குடிமக்கள் என்பதை நினைத்து பெருமைப்படுகிறோம் என்றனர்.

தற்போதைய உலகத்தில் காரின் கதவை விரைவாக திறந்து விடவில்லை என்பதற்காக எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.என்பதை நாம் நாளாந்தம் கேள்விப் படுகிறோம்.

தான் ஓரு ஜனாதிபதி என்பதை நினைத்து கர்வம் கொள்ளாதவர் உமர்(ரலி) அவர்கள்.

Tuesday 22 May 2018

கேன்சருக்கு நபிவழியில் மருந்து கண்டுபிடிப்பு, சவூதி ஆசிரியை சாதனை..!
   
நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துாதர் என்பது மீண்டும் நிருபணம்!!
அவர்களின் சொல்லை அடிப்படையாக
கொண்டு நடைபெற்ற ஆய்வில் புற்று நோய்க்கான மருந்து கண்டு பிடிப்பு…
அல்லாஹு அக்பர்!
ஒட்டகத்தின் பால் மற்றும் சிறு நீரில்
மருத்துவ குணம் உள்ளதாக நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் பாலின்
மருத்துவ குணம் ஓரளவு சிந்தனைக்கு எட்டும் விசயமாகும் சிறு நீரில் நோய்களை உருவாக்கும் கிருமிகள் தான் இருக்கும் அதில் எப்படி நோயை குணபடுத்தும் மருத் துவ குணம் இருக்கமுடியும் இப்படி சிந்தித் தார் சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில்
அமைந்துள்ள கிங் அப்துல் அஜீஸ் பல்கலை கழகத்தில் பணியாற்றும் பாதன் குர்ஷித் என்ற பேராசிரியை. அதே சமயம் அந்த வார்த்தை சாதரண மனிதனின் உதடுகள் உதிர்த்த வார்தையல்ல இறைவனின் தூதுத்துவத்தை சுமந்து நிற்கும் முஹம்மது நபியின் உதடுகளில் இருந்து புறப்பட்டு வந்த வார்த்தைகள் அப்படியானால் அந்த வார்த்தைக்குள் ஏதோ மர்மம் இரகசியம்
புதையுண்டு கிடக்கிறது அதை வெளிச்சத் துக்கு கொண்டு வரவேண்டும் என எண்ணிய அந்த பேராசிரியை 30ஆண்டுகளுக்கு முன்பு அன்றிருந்த வசதிகளை கொண்டு ஒட்டகத் தின் சிறு நீர் பற்றிய தனது ஆய்வை தொடங் கினார் பல கட்டமாக சவுதியிலும் சவுதிக்கு வெளியே வளர்ந்த நாடுகளின் அதி நவீன
ஆய்வு கூடங்களிலும் தனது ஆய்வை தொடர்ந்த அந்த மருத்துவ பேராசிரியை ஆய்வின் முடிவில் உலகையே அதிசயிக்க வைக்கும் நம்மை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் உலகின் மருத்துவ விஞ்ஞானத் தையே திகைப்பில் ஆழ்த்தும் ஒரு அற்புத மான உண்மையை கண்டறிந்தார்….
ஆம் ஒட்டகத்தின் சிறு நீரில் புற்று நோயை தணிக்கும் குணபடுத்தும் மூலகூறுகள் உள்ளன அதிலிருந்து புற்று நோயை குணப் படுத்துவதற்கான மருந்துகளை தயாரிக்க முடியும் என்பதை தான் அந்தப் பேராசிரியை கண்டறிந்தார் அதை பல் வேறு விதங்களில் சோதித்து பார்த்த அவர் இறுதியில் புற்று நோயால் பாதிக்க பட்ட சிலருக்கு அவர் தயாரித்த அந்த மாத்திரைகளை கொடுத்த போது பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயில்
இருந்து குணமடைவதை கண்டிறிந்தார்
அவரது ஆய்வு ஒட்டகத்தின் சிறு நீரில்
மருத்துவ குணம் உள்ளது என்ற நபிகள்
நாயகத்தின் கருத்தை 100 சதவீதம் உறுதி செய்தது..
30 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற
ஆய்வுக்கு பிறகு அந்தப் பேராசிரியை கண்டறிந்த முடிவுக்கான அடிப்படையை சாதரண வார்த்தைகளில் நபிகள் (ஸல்)
அவர்களால் எப்படி சொல்ல முடிந்தது விஞ்ஞானத்தின் விழிகள் இறுகக்கட்டப் பட்டிருந்த காலத்தில் வாழ்ந்த நபிகள் நாயகத்தால் அதுவும் எழுதவும் படிக்கவும் தெரியாத நபிகள் நாயகத்திற்கு ஒட்டகத்தின் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளது என்ற
உண்மை எப்படி தெரிந்தது அவர் சராசரி மனிதனாக இருந்து கொண்டு இதை சொல்வதற்கு வாய்ப்பே இல்லை எல்லா வற்றையும் அறிந்துள்ள இறைவனின் தூதராக அவர் இருந்ததால் அவரிடம்
இருந்து புறப்பட்டு வந்த வார்த்தை இறை வனின் வார்த்தையாக இருந்ததால்
இது சாத்தியமானது எனவே இந்த
நபி மொழியும் நபிகள் நாயகத்தின் தூதுத்துவத்தை அறுதியிட்டு உறுதி கூறும்
அற்புத சான்றுகளில் ஒன்றாக அமைகிறது. 
இனி அந்த நபி மெழியை தருகிறேன்
ﻋَﻦْ ﺃَﻧَﺲٍ ﺭَﺿِﻲ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﺃَﻥَّ ﻧَﺎﺳًﺎ ﺍﺟْﺘَﻮَﻭْﺍ ﻓِﻲ ﺍﻟْﻤَﺪِﻳﻨَﺔِ
ﻓَﺄَﻣَﺮَﻫُﻢُ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻﻠﻰ
ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃَﻥْ ﻳَﻠْﺤَﻘُﻮﺍ ﺑِﺮَﺍﻋِﻴﻪِ ﻳَﻌْﻨِﻲ ﺍﻻﺑِﻞَ ﻓَﻴَﺸْﺮَﺑُﻮﺍ ﻣِﻦْ
ﺃَﻟْﺒَﺎﻧِﻬَﺎ ﻭَﺃَﺑْﻮَﺍﻟِﻬَﺎ
ﻓَﻠَﺤِﻘُﻮﺍ ﺑِﺮَﺍﻋِﻴﻪِ ﻓَﺸَﺮِﺑُﻮﺍ ﻣِﻦْ ﺃَﻟْﺒَﺎﻧِﻬَﺎ ﻭَﺃَﺑْﻮَﺍﻟِﻬَﺎ ﺣَﺘَّﻰ ﺻَﻠَﺤَﺖْ
ﺃَﺑْﺪَﺍﻧُﻬُﻢْ ﻓَﻘَﺘَﻠُﻮﺍ
ﺍﻟﺮَّﺍﻋِﻲَ ﻭَﺳَﺎﻗُﻮﺍ ﺍﻹﺑﻞَ ﻓَﺒَﻠَﻎَ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ
ﻓَﺒَﻌَﺚَ ﻓِﻲ ﻃَﻠَﺒِﻬِﻢْ
ﻓَﺠِﻲﺀَ ﺑِﻬِﻢْ ﻓَﻘَﻄَﻊَ ﺃَﻳْﺪِﻳَﻬُﻢْ ﻭَﺃَﺭْﺟُﻠَﻬُﻢْ ﻭَﺳَﻤَﺮَ ﺃَﻋْﻴُﻨَﻬُﻢْ . ﺭﻭﺍﻩ
ﺍﻟﺒﺨﺎﺭﻱ
வெளி ஊரில் இருந்து நபிகள் நாயகத்தை காண வந்த சில மனிதர்கள் நோயுற்று இருந்தார்கள் அவர்களை பார்த்த நபிகள் நாயகம் தனது ஒட்டக மேய்ப்பாளரிடம் அந்த ஒட்டகத்தின் பாலையும் சிறு நீரையும்
பெற்று அருந்துமாறு கூறினார்கள்
அவ்வாறே அந்த மனிதர்கள் செய்தனர்
முழுமையாக ஆரோக்கியம் பெற்றனர்
அறிவிப்பவர் அனஸ் (ரலி) ஆதாரம்
புகாரி.

Sunday 20 May 2018




இஸ்லாத்தை நோக்கிய பிரிட்டன் – அதிர்ந்து போயுள்ள கிறிஸ்தவ உலகம்..!

ஜெர்மனி, ஹாலந்தில் அதிகரிக்கும் முஸ்லிம்கள் மிக விரைவில் ஹலால் உணவு அணைத்து இடங்களிலும் விற்பனைக்கு வந்து விடும் – பிரிட்டிஷ் பிரதமர்!
தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில் தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.
பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் இலட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறிஸ்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்து கொண்டிருகின்றனர். ”இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்” என்ற தலைப்பில் “The Independent” என்ற பிரித்தானிய பத்திரிக்கை ஓர் ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஆங்கிலப் பத்திரிகைத் தொகுப்பு:
பார்க்க:
http://www.independent.co.uk/…/the-islamification-of-britai…
கிறிஸ்தவ உலகத்தின் அடித்தளமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறிஸ்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பாக் கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால், தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில் தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.
2001ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000 வரை இருக்கலாம் என கணெக்கெடுக்கப்படது, ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு இலட்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters”என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை கிறிஸ்தவர்கள்  இஸ்லாத்தை ஏற்றார்கள் கணக்கெடுத்துள்ளனர், அதில் தலைநகர் லண்டனில் மட்டும் 14000 கடந்த ஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாக, தனி நபர் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கணக்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).
பிரான்ஸ் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்றிக்கு 4000. எனவே “The Independent”நடத்திய இந்த புது ஆய்வின் படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள் தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர் கூறுகையில், நாங்கள் இந்த தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன் மடங்காக இருக்கும் என தெரிவித்தார்.
ஏன் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தை பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றது, இந்த பொய் பிரச்சாரத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர், இந்த ஆய்வில் பலர், இஸ்லாத்தின் உன்னதமிக்க கருத்தினால் ஈர்க்கப்படு, உந்தப்பட்டு போன்ற ஆபாசங்களும், அசிங்கங்களும் நிறைந்த பைபிளை தூக்கி எறிந்துவிட்டு உண்மை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.
இஸ்லாத்தை அறிவு பூர்வமாகவும், ஆதாரபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் எதிர்க்க முடியாத கிறிஸ்தவ உலகம் பொய்ப் பிரச்சாரங்கள் மூலமாக இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முழு வீச்சில் செயற்பட்டு வருகின்றது. பிரிட்டனைச் சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற இரண்டு இளைஞர்களை சுட்டுக் கொன்ற CIA, இவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என பத்திரிகையில் செய்திகளை பரப்பி மக்களை அச்சமுற செய்கின்றனர்,“Faith Matters” ஆய்வில் இங்கிலாந்தில் வரும் செய்திகளில் 32 % செய்திகள் இஸ்லாத்தை தீவிரவாதத்தோடு சம்பந்தபடுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
கிறிஸ்தவர்களிடம் இருப்பது, பொய்களும், ஆபாசங்களும், மனிதனுக்கு உதவாத உழறல்களும் நிறைந்த பைபிள் தான் இந்த பைபிளை வைத்து கொண்டு கிறிஸ்தவர்களை தக்க வைக்க முடியாது என்பதை கிறிஸ்தவ மிஷனரிகள் நன்றாக உணர்ந்துள்ளன. பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி கிறிஸ்தவர்களை ஏமாற்றி கிறித்துவத்தை வாழ வைத்து கொண்டிருக்கின்றனர் பாதிரிமார்கள். மேற்கத்திய நாடுகள் போடும் பிச்சை டாலர்களுக்காக விவாத வேஷம் போடும் சான்(SAN) போன்ற அமைப்புகள் கூட பைபிள் இறை வேதம் என நிரூபிக்க பைபிளிலிருந்து ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாமல் கண்டபடி உழறி கொட்டியது.
ஒரு காலத்திலும் கிறித்துவர்களால் அறிவுபூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் “கிறித்துவம் இறைவனின் மார்க்கம்” என்பதை நிருபிக்க முடியாது என்பது இவர்களின் இஸ்லாத்திற்கெதிரான பொய்ப்பிரச்சாரங்களிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.
பொது மேடையில் வாசிக்கும் தகுதிகூட இல்லாத பைபிள் மூலம் இஸ்லாத்தை தழுவும் கிறித்துவர்களை தடுக்க முடியாது என்பதை உணர்ந்து தான் முஸ்லீம்களை பார்த்து “பயங்கரவாதி” “பழமைவாதி” வெற்று கோஷம் போடுகின்றது.
அல்லாஹ்வின் கிருபையால் பிரிட்டனில் வாழும் கிறித்துவர்கள் பைபிளின் தரத்தை அறிந்து சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். கேத்தரீன் என்ற கிறித்துவ பெண்மனி இஸ்லாத்தை ஏற்று, தற்போது பிரிட்டன் இஸ்லாமிய அமைப்பிற்கு தலைவியாக உள்ளார். இவர்களைப் போன்ற பலர் கிறிஸ்தவர்கள் மத்தியில் தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து பலரை கிறித்துவத்திலிருந்து விடுவித்து நேர் வழியான இஸ்லாத்தின் பக்கம் அழைத்து வருகின்றனர்.
பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை தழுவிய சிலர் கருத்து தெரிவிக்கையில்ஸ..பவுல் மார்ட்டின்-எனக்கு எனது நண்பர்கள் மூலம் குர்ஆன் அறிமுகமானது, குர்ஆனைப்படிக்கும் போது அதனுடைய அறிவியல் உண்மைகளை பார்த்து வியந்து போனேன், (குர்ஆன் இறை வேதம் என்பதை உணர்ந்து) இஸ்லாத்தை தழுவினேன்.
(குர்ஆன் குறித்த விவாதத்திற்குவரமால் ஓடி ஒளியும் சானின் (SAN) தந்திரம் தற்போது விளங்குகின்றது. லண்டனைச் சேர்ந்த இந்த “பவுல் மார்ட்டின்” போல் கிறிஸ்தவர்கள் குர்ஆனின் அறிவியல் அற்புதங்களைப்பார்த்து ஆயிரக்கணக்கில் இஸ்லாத்தை தழுவி விடுவார்கள் எனப்பயந்து போய் தந்திரங்கள் செய்து தப்பிக்க நினைகின்றது சான்(SAN)).
டென்னிஸ் ஹார்ஸலி -நான் ஒரு கிறிஸ்தவர், கத்தோலிக்க பள்ளியில் படித்தேன், நண்பர்கள் மூலம் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, பின்பு நான் குர்ஆனைப் படிக்கும் போது ஏசு,மேரி,தோரா பற்றிய பல்வேறு உண்மையான தகவல்கள் குர்ஆனில் இருந்தது. எனவே கிறிஸ்தவத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை ஏற்பது இயற்கையானது என கருதுகின்றேன்(அதாவது நீங்கள் உண்மையாக ஏசுவை நம்புவதாக இருந்தால், மேரியை மதிப்பாதாக இருந்தால்,தோராவை நம்புவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது தான் உண்மையான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும்.

கதீஜா ரியோபுக்- ”நான் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவள், என் குழந்தையுடன் வாரா வாரம் சர்ச்சிற்கு செல்வேன், இஸ்லாத்தில் இணைந்ததும் கிடைத்த அமைதி சர்ச்சில்
கிடைக்கவில்லை,ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த எனது தாயால் நான் இஸ்லாத்தை ஏற்றதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை, நான் இப்போது ஹிஜாப் அணிகின்றேன், நோன்பு வைக்கின்றேன், வாழ்வில் அமைதியை உணர்கின்றேன்.”

ஹனா தஜீமா- ”நான் பல மதங்களை ஆய்வு செய்தேன், குர்ஆன் அறிவு பூர்வமாக இருந்தது, பெண்களுக்கு உரிமையை தருவதாக இருந்தது. எனவே, ஆழ்ந்த மதப்பற்றுள்ள எனது குடும்பத்திலிருந்து நான் இஸ்லாத்தை தழுவினேன்.”
இது கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய சிலரின் கருத்துக்கள், பின்பற்றுவதற்க்கு பைபிளில் ஒன்றும் இல்லை (புரக்கணிப்பதற்கு நிறைய உள்ளது), எனவே இந்த மக்களுக்கு உண்மைய எடுத்துச் சொன்னால் இஸ்லாத்தை ஏற்க கோடிக் கணக்கான கிறிஸ்தவர்கள் இருகின்றனர், இன்ஷா அல்லாஹ். நாம் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை இந்த கிறிஸ்தவ மக்களுக்கு எடுத்து சொல்வது தான் மீதமிருக்கும் வேலை.
மிக விரைவில் ஹலால் உணவு அணைத்து இடங்களிலும் விற்பனைக்கு வந்து விடும் – பிரிட்டிஷ் பிரதமர்!
மிக விரைவில் ஹலால் உணவு அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வந்து விடும் அதனை நீங்கள் ருசிக்கத்தான் போகின்றீர்கள். – பிரிட்டிஷ் பிரதமர்.
ஐக்கிய இராச்சியத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு ஹலால் உணவே சிறந்தது எனவும் ஹலால் முறைப்படி உயிரினங்களை அறுப்பதற்கு எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படமாட்டாது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை லண்டனில் நடைபெற்ற சிறந்த இஸ்லாமிய ஊடகங்களுக்கான விருது வழங்கும் நிகழ்சியில் தெரிவித்தார்.
லண்டனில் சில பகுதிகளில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை மற்றும் கட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும் அவற்றை இல்லாமல் செய்ய பிரித்தானிய நீதித்துறைக்கு கட்டளை இட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எந்த ஒரு முஸ்லிமும் வெறுமனே இஸ்லாத்தை பின்பற்றவில்லை மாறாக முழு நம்பிக்கையுடன் அவர்களுடைய வாழ்கை முறையை சிறப்பாக அமைத்துக்கொள்ளவும், வாழ்வின் இலட்சியங்களை அடைந்து கொள்ளவும் பின்பற்றுகின்றார்கள் என கூறினார்.
மிக விரைவில் ஹலால் உணவு அணைத்து இடங்களிலும் விற்பனைக்கு வந்து விடும் அதனை நீங்கள் ருசிக்கத்தான் போகின்றீர்கள். நான் பிரதமராக இருக்கும் வரையில் ஹலால் உணவே பிரதானமானதாக இருக்கும் எனவும் அதுவே பிரித்தானியாவை பாதுகாப்பாக வைத்திருக்கும் என உறுதியளித்தார்.
கடந்த மாதம் டென்மார்க்கில் ஹலால் உணவு தடை செய்யப்பட்டுள்ளபோதும் பிரித்தானிய பிரதமர் மிகவும் துணிச்சலாக ஹலால் உணவுக்கு ஆதரவளித்து பாராட்டத்தக்க ஒன்றாக காணப்படுகிறது.
”இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர்.” (அல் குர்ஆன் 5: 83)


Thursday 17 May 2018









சர்வதேசப்பிறை ஓர் அறிமுகப்பார்வை


அன்பின் இஸ்லாமிய சகோரர்களே! சகோதரிகளே!
பொதுவாக முஸ்லிம்கள் தமது நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளில் பிறை தொடர்பாக ஊருக்கு ஊர் பிறை பார்க்கவேண்டும், நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டும், இஸ்லாமிய கலண்டர் ஒன்றை உருவாக்கி அதனடிப்படையில் செயற்பட வேண்டும் அல்லது முழு உலகிற்கும் ஒரு பிறை பார்த்தால் போதும் என்பது போன்ற நிலைப்பாடுகளை கொண்டிருக்கின்றார்கள்.
இவைகளில் நாம் உலகில் ஒரு இடத்தில் பிறை கண்டால் முழு உலகும் அதைக்கடைப்பிடிக்க வேண்டும் என்ற (சர்வதேசப்பிறை) நிலப்பாட்டையே பின்வரும் காரணங்களால் அவசியம் தெரிவு செய்ய வேண்டும்.
1.அல்குர் ஆனும், அஸ்ஸுன்னாவும் சர்வதேசப்பிறையையே அதிகம் வலியுறுத்துவது.
2.ச‌ர்வ‌தேச‌ப்பிறையே அறிவுபூர்வமானதும் நடைமுறைச்சாத்தியமானதும் ச‌ர்வ‌தேச‌ முஸ்லிம் ச‌மூக‌த்தின் ஒற்றுமைக்கு வ‌ழிவ‌குக்க‌ கூடிய‌தாக‌வும் இருக்கின்ற‌து.
3.பிறையை எமக்குத் தீர்மானித்து தரும் பிறைக்கொமிட்டியினர் தொடர்ச்சியாக மோசடிகளில் ஈடுபட்டு அவர்களின் நம்பகத்தன்மையை இழந்தமையும்.
1.சர்வதேசப்பிறை தொடர்பான அல்குர்ஆன் அல்ஹதீஸ் ஆதாரங்கள்:.
இன்றைய நடைமுறையில் உள்ளது போல் இஸ்லாமிய அடிப்படையில் ஒரு வருடத்தின் மாதங்கள் பன்னிரன்டுதான் என அல்குர் ஆனின் பின்வரும் வசனம் உறுதி செய்கிறது.
 நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் என்னிக்கை 12களாகும். இவை அல்லாஹ்வின் நியதியில் அவன் வானங்கள், பூமியயை படைத்த நாள்முதல் இருந்து வர்கின்றன.”(அல்குர்ஆன்)
அவ்வாறே ஒரு மாதத்திற்கு எத்தனை நாட்கள் என்பதை பின்வரும் நபி மொழி தெளிவு படுத்துகிறது.
“நாங்கள் எழுதாத, கணக்கை பயன்படுத்தாத உம்மி சமூகமாவோம். எனவே மாதம் என்பது ஒன்றில் இருபத்தொன்பது நாட்களாகும், அல்லது முப்பது நாட்களாகும்” என நபியவர்கள் விரல்களினால் சைகை செய்தார்கள்.”அறிவிப்பளர்: இப்னு உமர் ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்.
மேற்படி நபிமொழி மாதம் என்பது இருபத்தொன்பது அல்லது முப்பது நாட்கள் என்பதை தெளிவுபடுத்துவதுடன் ஒருபோதும் இருபத்தெட்டு ஆகவோ முப்பத்தொன்று ஆகவோ இருக்க முடியாது என்பதையும் வலியுறுத்துகின்றது. எனவே அதனடிப்படையில் மாதத்தின் முதல் நாளை எவ்வாறு தீர்மானிப்பது என்பது தொடர்பான ஆதாரங்களை கவனிப்போம். ரமளான் மாதத்தின் முதல் நாளை தீர்மானிப்பது தொடர்பாக இஸ்லாம் மூன்றே மூன்று வழிகளை மாத்திரம் காட்டித்தந்துள்ளது.
1.(29ம் நாளில்) பிறையை கண்ணால் கண்டு நோன்பு நோட்பது பிறையை கண்ணால் கண்டு நோன்பை விடுவது.
” பிறையை கண்டே நோன்பு வைய்யுங்கள்பிறையை கண்டே நோன்பை விடுங்கள்.” அறிவிப்பளர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரம்: புஹாரி
2.(29ம் நாளில்) பிறையை காணாவிட்டால் கண்டதாக வருகின்ற இரு சாட்சிகளின் தகவல்களை ஏற்றுக்கொள்ளல்.
இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள்நோன்பை விடுங்கள்.” அறிவிப்பளர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழ்ர்களிடமிருந்து)ஆதாரம்:அஹ்மத் நஸ்ஈ
3.(இருபத்தொன்பதாம் நாளில்) நாம் பிறையை கானவில்லை, கண்டதான சாட்சியங்களும் கிடைக்கவில்லை என்ற நிலையிருந்தால் குறித்த மாதத்தை முப்பது நாட்களாக பூர்த்தி செய்துவிட்டு, பிறை பார்க்காமல், சாட்சியங்களை எதிபார்க்காமல், முப்பதாம் நாளை அடுத்த மாதத்தின் முதல் நாளாக கொள்வது.
மேகத்தால் உங்களுக்கு பிறை மறைக்கப்பட்டால் (மாதத்தை) முப்பதாகப் பூர்த்தி செய்யுங்கள்.
அறிவிப்பளர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரம்: புஹாரி
என‌வே மேற்கூற‌ப்ப‌ட்ட‌ மூன்று அடிப்ப‌டைக‌ளையும் நாட்டுக்கு நாடு பிறை பார்ப்ப‌வ‌ர்க‌ளும் ச‌ரி அல்ல‌து ச‌ர்வ‌தேச‌ப்பிறை அடிப்ப‌டையில் செய‌ற்ப‌டுப‌வ‌ர்க‌ளும் ச‌ரி எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். ஆனால்இரு சாட்சிய‌ங்க‌ளின் சாட்சிய‌த்தை ஏற்றுக்கொள்வ‌து என்ற‌ விட‌ய‌த்தில்தான் நாட்டுக்கு நாடு பிறை பார்ப்ப‌வ‌ர்க்ளுக்கும் ச‌ர்வ‌தேச‌ப்பிறை பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கும் இடையே க‌ருத்து முர‌ண்பாடு தோன்றுகிற‌து.
மேற்படி இரு சாட்சியங்களும் முஸ்லிம்களாக, நம்பிக்கையானவர்களாக இருக்க வேண்டுமென்று மாத்திரம் நபிமொழிகள் வலியுறுத்த நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பவர்கள் குறித்த நாட்டுக்குள் அவர்கள் இருக்க வேண்டுமென்று மூன்றாவது ஒரு நிபந்தனையையும் எந்த ஒரு தெளிவான ஆதாரமும் இல்லாமல் முடித்து விடுகின்றார்கள். அதாவது நபி (ஸல்) அவர்கள்” இரு நீதமான முச்லிம்களின் சாட்சியம்” என பொதுவாக கூறியிருக்க அவ்விருவரும் எங்கள் நாட்டுக்குள் இருந்தால்தான் ஏற்றுக்கொள்வோம், வெளிநாட்டில் இருந்தால் அவர்கள் முஸ்லிம்களாக நீதமானவர்களாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அடம் பிடிக்கின்றார்கள்.
சர்வதேசப்பிறை அடிப்படையில் செயற்படும் நாம் என்ன கூறுகிறோம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியது போல் இரு நீதமான முஸ்லிம்களின் சாட்சியத்தை அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் சரி அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். நபி (ஸல்)அவர்கள் மதீனாவிற்கு வெளியில் இருந்து வந்த சாட்சியங்களையும் ஏற்றுள்ளார்கள் என பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்திகிறது.
ரமளான் மாதத்தின் முப்பதாம் நாளில் மக்கள் நோன்பு நோற்றிருந்தனர். அப்பொழுது இரு கிராமப்புற காட்டரபிகள் வந்து அல்லஹ்மீது ஆனையிட்டு நாங்கள் நேற்று இரவு பிறை கண்டதாக நபி (ஸல்)அவர்களிடம் சாட்சி கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் (அதை ஏறுக்கொண்டு) மக்களை நோன்பை விடும்படி ஏவினார்கள் அறிவிப்பளர் : இப்னு ஹர்ராஸ் (நபித்தோழரிடமிருந்து)
ஆதாரம்: அஹ்மத்அபூதாவூத்
எனவே அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் அடிப்படையில் உலகில் எங்கு பிறை கண்டாலும் சாட்சியங்கள் அடிப்படையில் அதனை ஏற்று செயற்படுவதே சரியானதாகும். நாட்டுக்கு நாடு பிறை பார்ப்பதற்கு அல்குர் ஆன், அல்ஹதீஸில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதும் நிரூபிக்கப் படுகின்றது.
2.ச‌ர்வ‌தேச‌ப்பிறையே அறிவுபூர்வமானதும்:நடைமுறைச்சாத்தியமானதும் ச‌ர்வ‌தேச‌ முஸ்லிம் ச‌மூக‌த்தின் ஒற்றுமைக்கு வ‌ழிவகுக்கக்கூடியதுமாகும்:
ஆம், வெளிநாட்டில் உள்ள நீதமான முஸ்லிம்களின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்வதே அறிவு பூர்வமான விடயமாகும். உதாரணமாக வெளிநாட்டில் உள்ள ஒருவர் இறந்துவிட்டார் என்ற தகவலை ஏற்று அவருடைய மனைவி இத்தா இருக்கின்றார் என்பதப் பார்க்கின்றோம். உள்நாட்டு சாட்சியத்தை மாத்திரம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பவர்கள் கூட இந்த விடயத்தில் இவ்வாறு நடப்பது முரண்பாட்டை காட்டுகிறதல்லவா?
அது மாத்திரமல்ல, நாட்டுக்கு நாடுதான் பிறை பார்க்க வேண்டு மென்பது பகுத்தறிவிற்கு முற்றிலும் முரணான் வாதமாகும். இதை விளங்கிகொள்ள பெரிதாக அல்குர் ஆன், அல்ஹதீஸை ஆய்வு செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரமான ஒவ்வொரு முஸ்லிமாலும் இதனைப்புரிந்து கொள்ளமுடியும்.
நாடுகளின் வரையறையை அல்லாஹ்வோ, அவனது தூதரோ ஏற்படுத்தவில்லை. அவை மனிதனாலும் அரசியற் காரணிகளாலும் உருவானவை. நாடுகள் சில ஒரு நாடாக மாறவும் கூடும். அதேபோல ஒரு நாடு பல நாடுகளாக பிரியவும் சாத்தியமுண்டு. எனவே, நாடுகள் பிரியும்போதும் சேரும்போதும் அல்லாஹ்வின் சட்டம் வேறுபடும் என்று யாராவது கூறமுடியுமா?
எமது நாட்டையே எடுத்துக்கொள்வோம். தற்போது முழு இலங்கைக்கும் ஒரு பிறை பார்க்க வேண்டுமென்று வாதிடுபவர்கள் தப்பித் தவறி அரசாங்கம் புலிகளுக்கு ஈழ நாட்டை கொடுத்து விட்டால் ஒரு பிறை பார்ப்பதா? இரு வேறு பிறைகள் பார்க்கவேண்டுமா?
இரு பிறைகள் என்றால் அது அறிவுபூர்வமான வாதமா? அல்லது ஒரு பிறைதான் என்றால் நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்ற வாதம் நொருங்கிவிடுமல்லவா? எனவே நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பது அல்குர் ஆன், அல்ஹதீஸுக்கு முரணான வாதம் மட்டுமல்ல மனித அறிவிக்கும் முரணாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் சுமார் ஐம்பது கி.மீ தொலைவிலுள்ள இந்தியாவின் கீழக்கரையில் பிறை கண்டால் ஏற்றுக்கொள்ளக் கூடாது அனால், சுமார் நானூறு கி.மீ தொலைவிலுள்ள மாத்தறையில் பிறை கண்டால் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது எவ்வளவு பகுத்தறிவுக்கு முரணான வாதம்?அது மாத்திரமல்ல, சர்வதேசக்கடற்பரப்பில் பயணிக்கின்ற ஒருவர் எந்த நாட்டின் பிறை அடிப்படையில் நேன்பு நோட்க வேண்டும்?
உதாரணமாக, இந்தியாவில் பிறை கண்டு இலங்கையில் பிறை காணவில்லை என்று வைத்துக்கொள்வோம், இலங்கை இந்தியாவிற் கிடையில் உள்ள கடற்பரப்பில் பயணம் செய்யும் ஒருவர் இந்திய பிறை அடிப்படையில் நோன்பு நோட்பதா? அல்லது இலங்கையில் பிறை தென்படவில்லை என்று நோன்பு வைக்காமல் விடுவதா?
எனவே நாட்டுக்கு நாடு பிறை என்ற வாதம் அறிவுக்கு முரணான‌தென்பதயும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும்; உலகில் ஓரிடத்தில் பார்க்கின்ற பிறையைக் கொண்டு உலக முஸ்லிம்கள் அனைவரும் செயற்பட வேண்டும் என்கின்ற “ச்ர்வதேசப்பிறை” ஒரு நடைமுறச்சாத்தியமான விடயம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் எப்போது ஒரு பகுதிக்கு பகலாகவும் ஒரு பகுதி இரவாகவும் இருக்கும். எனவே ஒருபகுதிக்கும் அதற்கு நேர் எதிரே இருக்கின்ற பகுதிக்கும் இடையே உள்ள கால வித்தியாசம் ஆக கூடியது 12 மனித்தியாலங்கலாக இருக்கும்.
உதாரணமாக:- இலங்கையில் வெள்ளிக்கிழமை மாலை ஏழு முப்பது மணி என்றால் கலிபோனியாவில் வெள்ளிக்கிழமை காலை ஏழு முப்பது ஆக இருக்கும். எனவே இப்போது இலங்கையில் பிறை கண்டால் அது சனிக்கிழமை ரம்ழான் மாதத்தின் முதற்பிறை என்கின்ற படியால் கலிபோனியாவில் உள்ளவர்கள் வெள்ளி இரவு ஸஹர் செய்து சனிக்கிழமை முதல் நோன்பை பிடிப்பார்கள்.
ஆனால், மேற்கு நாடுகளில் முதற்பிறை தென்பட்டால் கீழத்தேய நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு ஒரு சிக்கல் இருக்கின்றது.
அதாவது, கலிபோர்னியாவில் பிறை கண்டதாக அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை ஏழு முப்பது மனிக்கு அறிவித்தார்களென்றால் நாம் சனி காலை ஏழு முப்பது மனியில் இருப்போம். கலிபோனியாவில் கண்ட பிறை சனிக்கிழமை முதல் நோன்பு என்பதைக்காட்டியதால் சனி காலை ஏழு முப்பது மனியில் இருக்கின்ற நாம் தகவல் கிடைத்த நேரத்தில் இருந்து நோன்பை நோற்க வேண்டும். இதற்கு நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த பின்வரும் சம்பவம் ஆதாரமாகும்.
ரமளான் நோன்பு கடமையாக்க படுவதற்கு முன்பு ஆஷுரா நோன்பு கடமையாக இருந்தது. ரமளான் நோன்பு கடமையானதன் பின்னால் அஷுரா நோன்பு விரும்பியவர் நோற்கல்லாம் விரும்பியவர் விட்டு விடலாம் என்று ஆக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது முஹர்ரம் பத்தாம் நாள் யூதர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு இருக்கக் கண்டு அந்த நாள் ஆஷுரா என தெரிந்து அன்று காலையுணவை சாப்பிட்டார்கள், அப்படியே நோன்பு வக்கும் படியும் சாப்பிடாதவர்கள் அந்த நேரத்தில் இருந்து மீதமுள்ள நேரத்தில் (மாலை வரை) “நோன்பு நோற்கும் படியும் ஏவினார்கள்” இதற்கான ஆதாரங்களை புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் ஆஷுரா என்ற பாடத்தில் பார்க்கலாம்.
எனவே நபி(ஸல்) அவர்கள் ஒரு கடமையான நோன்பை தனக்கு தகவல் தெரிந்த நேரத்தில் இருந்து நோற்று மக்களையும் நோற்கும்படி ஏவியதன் அடிப்படையில் எமக்கு குறித்த நாள் நோன்பு என்று தகவல் கிடைத்தது முதல் நோன்பு நோற்பது கடமையாகும்.
அகவே, ஆகக்கூடுதலான 12 மனி வித்தியாசத்திலேயே பிறைத்தகவலை ஏற்று நோன்பு நோற்பது சாத்தியமாக இருக்கும்போது அதற்குக் குறைவான நேரங்களில் ஏற்படும் வித்தியாசத்தில் நோன்பு நோற்பது மிகவும் சாத்தியமான ஒன்றாகும். எனவே உலகில் ஓரிடத்தில் பிறை கண்டால் அதை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுச்செயல்படுவதே நடைமுறைச்சாத்தியமானதாகும் என்பது தெளிவாகின்றது.
ஆனால், நாட்டுக்கு நாடு பிறை பார்த்தல் என்பது நடைமுறைச்சாத்தியம் இல்லாத விடயமாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக, கரிபியன் தீவுகள், ட்ரிலிடாட், குயானா அகிய நாட்டு மக்கள் தொடர்ச்சியாக 6 மாதங்களை மழைகாலமாக கொண்டிருப்பவர்கள் நாட்டுக்கு நாடு பிறை என்ற அடிப்படையில் 4 மாதங்கள் தொடர்ச்சியாக முப்பது முப்பதாக பூர்த்தி செய்துவிட்டு ரமளான் மாதத்தை ஆரம்பிப்பார்களானால் ரமளான் மாத்தத்தின் முடிவைக்காட்டும் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை ரம்ளான் மாதத்தின் 27ல் அல்லது 28லேயே தென்பட்டுவிடும். மாதம் என்பது 29 அல்லது 30 நாட்கள்தான் என்று நாம் ஆரம்பித்தில் கூறியுள்ள நபிமொழிக்கு இது முரண்படுவதால் இம்மக்கள் வெளிநாட்டவரின் பிறையை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.
எனவே, நாட்டுக்கு நாடு பிறைபார்த்தல் என்பது எமது நாட்டுக்கு சாத்தியம் சில நாடுகளுக்கு சாத்தியமில்லை என்பதிலிருந்து அது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று என்பதனை புரிந்து கொள்வதுடன் அசாத்தியமான விடயங்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் மார்க்கமாகாது என்பதனையும் விளங்க வேண்டும்.
சில பாமரர்கள் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நேரத்திலா தொழுகிறார்கள்? தொழுகை நேரங்கள் வித்தியாசப்படுவது போல பெருநாள் போன்றவையும் வித்தியாசப்படவேண்டும் தானே என்று கேள்வி கேற்கின்றனர். இக்கேள்வி அடிப்படையிலேயே தவறாகும். காரணம் நாம் ம்ஃரிப் தொழுவதென்றால் சூரியன் மறைய வேண்டுமென்றுதான் நபி மொழி கூறுகின்றதே தவிர சூரியன் மறந்ததாக இரு முஸ்லிம்கள் சாட்சி சொன்னால் அதனடிப்படையில் தொழுங்கள் என்று கூறவில்லை.
அனால், பிறை விடயத்தில் பிறை கண்டால் நோன்பு பிடியுங்கள் என்று மாத்திரம் கூறாமல் இரு நீதமான முஸ்லிம்கள் அவர்கள் (எந்த நாட்டவராக இருந்தாலும்) பிறை கண்டதாக தெரிவித்தால் நோன்பு பிடியுங்கள் என்றும் நபி மொழி கூறுவதால் தொழுகைக்கும் நோன்பிற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பவர்களின் வாதத்தின் படியே பார்த்தாலும் காத்தான் குடி மக்களாகிய நாம் எல்லா வருடங்களும் காத்தான்குடியில் கண்டுதான் நோன்பு பிடிக்கின்றோமா? பிறை கண்டுதான் நோன்பை விடுகின்றோமா?
இல்லை, மாறாக கிண்ணியாவில் பிறை கண்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டு அத்தகவல் வானொலி மூலம் அறிவிக்கப்பட்டால் நோன்பு நோற்கிறோம் நோன்பை விடுகிறோம் அவ்வாறே கென்னியாவில் பிறை கண்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டு அத்தகவல் தொலை பேசியூடாக அறிவிக்கப்பட்டாலும் கூட அதை ஏற்று செயத்பட வேண்டும் என்றுதான் நாம் கூறுன்றோமே தவிர, பிறை காணப்படாவிட்டாலும் நோன்பு பிடிக்க வேண்டுமென்று ஒரு போதும் கூறவில்லை.
அவ்வாறே சர்வதேசப்பிறையானது முழு உலக முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு வழிவகுக்ககூடையதும், கண்டத்திற்கு ஒரு பிறை, நாட்டுக்கு ஒரு பிறை, ஊருக்கு ஒரு பிறை, மத்ஹபுகளுக்கு ஒரு பிறை, தரீக்காவிற்கு ஒரு பிறை என்று அனைத்து வேறுபாடுகளையும் களையக்கூடியதாகவும் உலகமே ஒரு கிராமம் போல் ஆகிவிட்ட இக்காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை பிரகடணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
3.பிறை விடயத்தில் அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமாவும் அதன் பிறைக்குழுவும் தொடர்ந்தும் மோசடிகள் செய்து வருவது:
நாட்டுக்கு நாடு பிறை பார்த்தல் என்ற அடிப்படையில் நோன்பு, நெருநாள் இபாத்தத்களை நிறைவேற்றிவருவதாக நினத்திருக்கும் நீங்கள் உண்மையிலேயே இலங்கை பிறையின் அடிப்படையில் நோன்பு பிடிப்பதும் இல்லை, பெருநாள் கொண்டாடுவதும் இல்லை.
மாறாக ஜமிய்யதுல் உலமாவின் பிறைக்குழுவும், பெரிய பள்ளிவாயல் நிருவாகமும் பிறை கண்டாலும் சரி, பிறை காணாவிட்டாலும் சரி அவர்கள் இச்சைக்கு ஏற்ப எப்போது நோன்பு என்று அறிவிக்கின்றார்களோ அப்போது நோன்பு நோற்கின்றீர்கள். எப்போது பெருநாள் என்று அறிவிக்கின்றார்களோ அப்போது பெருநாள் கொண்டாடுகின்றீர்கள். இந்த மோசடி நம்பிக்கை துரோகம் ஓரிரு வருடங்களாக அன்றி ஐந்தாறு வருடங்களாக தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
இத்தகவல் உங்களை திடுக்கிட செய்யலாம். உண்மை கசப்பாக இருந்தாலும் அதை எத்தி வைப்பது எமது பணி என்பதால் இங்கு ஆதாரத்துடன் விளக்குகிறோம்.
2005ம் ஆண்டு இலங்கையில் கண்ட பிறையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு புதன், வியாழன், வெள்ளி அகிய மூன்று தினங்களிலும் இல்ங்கை மக்கள் பெருநாள் கொண்டாடினர். இதில் ஜமிய்யதுல் உலமாவில் உள்ள சில உலமாக்கள் கூட பிறைக் குழுவால் அறிவிக்கப்பட்ட வெள்ளிக்கிழமைக்கு முன்பாக பெருநாள் கொண்டாடினர்.
ஆனால் நமது பிரதேச மக்கள் நோன்பு நாளில் நோன்பு பிடிக்காமல் இருப்பதற்கும், பெருநாள் தினத்தில் நோன்பு பிடிப்பதற்கும், பெருநாள் இல்லாத தினத்தில் பெருநாள் கொண்டாடுவதற்கும் தவறாக வழிநடாத்தப்பட்டனர்.
இவைகளுக்கான அடிப்படைக்காரணம் என்ன?
அல்குர் ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் ஏன் மத்ஹபுகளில் கூட ஒதுக்கப்பட்ட வான சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்து முதல் நாள் பேருவலை முஸ்லிம்கள் கண்ட பிறை நிராகரிக்கப்பட்டது. எனவே குர் ஆன், ஹதீஸுக்கு முரணான வான சாஸ்திரத்தின் அடிப்படையில்தான் இலங்கையில் நோன்பு மற்றும் பெருநாள் தீர்மானிக்கப்படுகிறதே பிறை பார்த்தல் அடிப்படையில் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அத்தோடு இது தொடர்பாக மாற்றுக்கருத்துள்ளவர்களுடன் அவர்கள் யாராக இருந்தாலும் என்றும் எப்போதும் அல்குர் ஆன், அல்ஹதீஸ் அடிப்படையில் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளவோ, கல்ந்துரையாடவோ தேவை ஏற்படின் ஒரு பகிரங்க விவாதத்தில் கலந்து கொள்ளவோ எமது நிருவன உலமாக்கள் தயாராக உள்ளனர்.
அல்லாஹ் எம்மனைவருக்கும் சத்தியத்தை சத்தியமாக காட்டி அதைப்பின்பற்றுகின்ற பாக்கியத்தையும் அசத்தியத்தை அசத்தியமாகக் காட்டி அதை தவிர்ந்து நடக்கின்ற பாக்கியத்தையும் தந்தருள்வானாக!
“எமது கடமை தெளிவாக சொல்வதே அன்றி வேறில்லை” (அல்குர் ஆன்)