Sunday 24 June 2018

இஸ்லாமிய அழைப்பாளரான அஹ்மத் தீதாதிடம் ஒரு இறைமறுப்பாளன் கேட்டார்:

நீங்கள் மரணித்து மறுமைநாள் பொய்யென தெரிந்தால் உங்கள் உணர்வு எப்படி இருக்கும்?

தீதாத் சொன்னார்;

நீங்கள் மரணித்து மறுமை நாள் உண்மையென தெரியும் பொழுது உங்களுக்கு ஏற்படும் உணர்வைவிட மோசமாக இருக்காது.

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

நீங்கள் இதுவரை பார்த்திராத அஹமத் தீதாத் வீடியோ
https://m.facebook.com/story.php?story_fbid=1790480224507243&id=1684121598476440

யார் இந்த ஜாகிர் நாயக்
https://m.facebook.com/story.php?story_fbid=1786959881525944&id=1684121598476440

ஜாகிர் நாயக் ,கிறிஸ்தவ போதகருக்கு விட்ட சின்ன சவால்

https://m.facebook.com/story.php?story_fbid=1790108204544445&id=1684121598476440

✘ குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என (தவறான) ஆதாரத்துடன் நிரூபிக்க முயன்ற பாதிரியார்
https://m.facebook.com/story.php?story_fbid=1789010691320863&id=1684121598476440

மனிதன் குளோனிங் மூலம் உயிரினங்களை படைக்க ஆரம்பித்துவிட்டானே; படைக்கும் சக்தியை இறைவனிடமிருந்து மனிதன் பெற்றுக்கொண்டானா...?!
https://m.facebook.com/story.php?story_fbid=1790734021148530&id=1684121598476440

பெண்களின் அரசியல் உரிமைகள்
https://m.facebook.com/story.php?story_fbid=1788560881365844&id=1684121598476440

 அமைதிக்கு மதம் எப்படி தீர்வாக அமைய முடியும்? எத்தியோப்பியாவில் பசியால் சாகும் மக்களுக்கு மதம் எப்படி உதவி செய்யும்?
https://m.facebook.com/story.php?story_fbid=1787806078107991&id=1684121598476440

குர்ஆனில் விஞ்ஞான முறண்பாடு என்ற கற்பனை குற்றச்சாட்டுக்கு மறுப்பு
https://m.facebook.com/story.php?story_fbid=1786580484897217&id=1684121598476440

எல்லா மதங்களும் நல்லதையே போதிக்கும் போது, நான் ஏன் இஸ்லாத்தை ஏற்கவேண்டும்?
https://m.facebook.com/story.php?story_fbid=1785721378316461&id=1684121598476440

மறுபிறவி குறித்து உங்கள் கருத்து
https://m.facebook.com/story.php?story_fbid=1784864705068795&id=1684121598476440

 வேதத்தை கற்றறிந்த ஒரு இந்து சகோதரர் கேட்கும் கேள்வி
https://m.facebook.com/story.php?story_fbid=1780717165483549&id=1684121598476440

✘ பைபிளிலிருந்து குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டதா...?
https://m.facebook.com/story.php?story_fbid=1779353188953280&id=1684121598476440

நபி மொழியை உண்மைப் படுத்தியது விஞ்ஞானம்









சுபஹானல்லாஹ்!! உலகம்
பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது!
நபிமொழியை மெய்ப்பித்தது!
இன்றைய விஞ்ஞானம்!
சொர்க்கம் நரகம் உண்டா..???
மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு கேள்விகள்
கேட்கப்படுவானா...???
1400...ஆண்டுகளுக்கு முன்பு...முகம்மது நபிக்கு யார் சொல்லிக்கொடுத்தது.
எழுத படிக்கத்தெரியாத
முகம்மது நபி இறைவனிடம்
இருந்து... தனக்கு செய்தி
வருவதாக சொன்னார்கள்.
அப்படி வந்த செய்திகள் தான்
திருக்குர்ஆன் அதுமட்டுமின்றி
மக்களுக்கு அவ்வப்போது
சில...ரகசியங்களையும்
சொல்லியுள்ளார்கள்.அப்படி
அவர்கள் சொன்ன.... பல
உண்மையான ரகசியங்களில்
இதுவும் ஒன்று...
மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு [உள்வால்எலும்பு
(# coccyx_bone ) முதுகுத்தண்டின் வேர்ப்பகுதி]
அழியாது....இதை அழிக்கவும்
முடியாது என்று முகம்மது நபியவர்கள் சொன்னார்கள்.
இதை ஆராய்ச்சி செய்ய நினைத்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி
“ஹான்ஸ் ஸ்பீமேன்” இதை தன்னுடைய ஆய்வுக் கூடத்தில் பல ஆயிரம் டிகிரி மூலம் கரிக்கவும் மற்றும்.... பல அமிலங்களைக் கொண்டு கரைக்கவும் முயற்சி
செய்தார் முடிவில் அவருக்கு
கிடைத்தது தோல்வியே...
முடிவில்... முகம்மது
நபிகளின் வாக்கு உண்மையே
என்பதை இந்த உலகுக்கு
தன்னுடைய சோதனையின்
மூலம் நிரூபித்தார்.
இதைத்தான் 1400 வருடங்களுக்கு முன்பே...
அல்லாஹுவின் தூதர்(ஸல்)
அவர்கள் மறுமையில் மனிதனுக்கு அல்லாஹ்
எவ்வாறு உயிர் கொடுப்பான்
என்பதை பின்வரும் நபிமொழி கூறுகிறது..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனின்(மனிதனின் உடலிலுள்ள)
அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும் ;மனிதனின்(முதுகுத்தண்டின்
வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர!....
அதை வைத்தே அவன்
(தன் தாயின் கருவறையில் முதன்முதலாக) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில்)
படைக்கப்படுவான்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5661
பிறகு அல்லாஹ், வானத்திலிருந்து
ஒரு நீரை இறக்குவான்...
உடனே இ(றந்துபோன)வர்கள்
பச்சைப் புற்பூண்டுகள்
முளைப்பதைப் போன்று
எழுவார்கள். மனிதனின்
எல்லா உறுப்புகளும்
(மண்ணுக்குள்) மக்கிப்போய்
விடும்; ஒரே ஒரு எலும்பைத் தவிர! அது (அவனதுமுதுகுத்தண்டின் வேர்ப்
பகுதியிலிருக்கும்)உள்வால்
எலும்பின் (அணுவளவு)
நுனியாகும்.அதை வைத்தே
படைப்பினங்கள் (மீண்டும்
மறுமை நாளில்) படைக்கப்படும்”என்று சொன்னார்கள்.(ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5660