Sunday 30 December 2012

இஸ்லாத்தை நோக்கி ....இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் :



{{{{{ இஸ்லாத்தை சரியாக கடைபிடிக்காமல் மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கும் முஸ்லிம்களில் சிலருக்கு..
மாற்று மதத்தைச் சார்ந்த ஒருவர் குர்ஆனை முறையாக படித்ததின் விளைவாக அறிவுரை சொல்வதை கேளீர் !!!}}}}}}}


இஸ்லாத்தை நோக்கி ....இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் :

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார்.

கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார்.

தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனை தினந்தோறும் படித்து வருகிறார்.

இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது:

குர்ஆனை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குர்ஆன் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது.

இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.

ஏற்கனவே இவரின் மைத்துனி லோரன் பூத் 2010ம் ஆண்டு இஸ்லாத்தை தழுவியது அனைவரும் அறிந்ததே!!!· ·

ல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.............!! 

இஸ்லாத்தை நோக்கி திரும்பியது டோனி பிளேரின் பார்வை.............!!


மேலும் குர்ஆனையும் புரட்ட தொடங்கிவிட்டார் டோனிபிளேர்................!





இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இஸ்லாத்தை நோக்கி தமது பார்வையை

திருப்பியுள்ளார்,

இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா சபை ஐரோப்பிய தூதராகவும்

செயல்பட்டு வருகிறார்,

அடிப்படையில் கிறித்தவரான இவர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் இஸ்லாத்தை நோக்கி அவர் தனது கவனத்தை திருப்பியுள்ளார், தற்போது

அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனை தினந்தோறும் படித்து வருகிறார்,

இது குறித்து டோனி பிளேர் கூறியதாவது :-

குர்ஆன் படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன், சர்வதேச அளவில் செயல்பட

நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும், அதற்காக தினந்தோறும் குர்ஆன் படிக்கிறேன்,

 உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குர்ஆனின் போதனைகள் உதவுகிறது,

இது ஒரு சீர்திருத்த புத்தகம், இதில் எல்லா விஷயங்களும் உள்ளன, அறிவியலை போற்றி,

 மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது என்றும் டோனி பிளேர் கூறியுள்ளார்.

ஏற்கனவே இவரின் மைத்துனி லோரன் பூத் 2010 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவியது

அனைவரும் அறிந்ததே....

இந்நிலையில் இவரின் கவனமும் இஸ்லாத்தை நோக்கி திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது

அல்ஹம்துலில்லாஹ்...............!!
 —

“ நான் பிரெஞ்சுக்காரி. உன்னை போல் அரபு நாட்டவள் இல்லை! இது எனது நாடு! இஸ்லாம் எனது மார்க்கம்



அது பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சூப்பர் மார்கெட்.

தனக்கு வேண்டிய பொருள்களைத் தள்ளுவண்டியில் நிறைத்துக் கொண்டு, காசாளரிடம் கணக்கைப் பார்த்துப் பணத்தைச் செலுத்துவதற்காக நின்ற வாடிக்கையாளர்களுள் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்த முஸ்லிம் பெண்மணியொருவர்!

பிரான்சில் ‘ஹிஜாபு’க்கு இருக்கும் எதிர்ப்பு பற்றித் தெரியுமல்லவா?

சில நிமிடங்களில், இந்த முஸ்லிம் பெண்ணின் முறை வந்தது. தான் வாங்கிய பொருள்களை ஒவ்வொன்றாகக் காசாளர் (கேஷியர்) முன்னால் எடுத்து வைக்கத் தொடங்கினார் இந்தப் பெண்மணி.

அந்தக் கவுண்டரின் காசாளரும் முஸ்லிம் பெண்தான்! ஓர் அரபு நாட்டிலிருந்து வந்து பிரான்ஸ் குடியுரிமை பெற்று வாழ்பவர்! தன் முன்னால் நிற்கும் வாடிக்கையாளர் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்து ( ‘நிகாப்’ எனும் முகத்திரையுடன்) இருப்பதைப் பொறுக்க முடியாத காசாளப் பெண், அவரை முறைத்துப் பார்த்தாள்.

“ இந்த நாட்டில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்! எல்லாம் உங்களைப் போன்றவர்களால்தான்! ‘ஹிஜாப்’, ‘நிகாப்’ எனும் தீவிரவாத அடையாளங்கள்! வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு வேலை செய்யும் நாம், சம்பாதிக்கும் நோக்கத்தில் தான் வந்துள்ளோம்; மாறாக, நமது மார்க்கத்தை அடையாளம் போட்டுக் காட்டவல்ல! நமது வரலாற்றை இங்கு வெளிச்சம் போட்டுக் காட்ட அல்ல! நீ உன் மார்க்கத்தை நடைமுறைப்படுத்த நாடினால், உனது அரபு நாட்டுக்குப் போக வேண்டியது தானே!? அங்கே போய், நீ விரும்பியபடி நடந்துகொள்!” பொரிந்து தள்ளினார், பொறுமையிழந்த அந்தக் காசாளப் பெண்.

இத்தகைய ஏச்சு ஏவுகணையைக் கேட்ட அந்த முஸ்லிம் பெண்மணி, தான் எடுத்து வைத்துக்கொண்டிருந்த பொருள்களை நிறுத்தினார். காசாளரைக் கண்களால் சந்தித்தார்! ஒன்றும் மறுமொழி பேசவில்லை! அமைதியாகத் தனது ‘நிகாபை’ விலக்கினார்.

அரபு நாட்டுக் காசாளப் பெண் அதிர்ச்சியில் உறைந்து போனாள்!

தனக்கு முன்னால் நின்ற பெண்ணோ, பிரெஞ்சுக்காரி! இதை, அப்பெண்னின் செம்பட்டை முடியும் நீலக் கண்களும் வெளிச்சம் போட்டுக் காட்டின!

அடுத்து அமைதியாகச் சொன்னாள் அந்த முஸ்லிம் பெண்மணி:

“ நான் பிரெஞ்சுக்காரி. உன்னை போல் அரபு நாட்டவள் இல்லை! இது எனது நாடு! இஸ்லாம் எனது மார்க்கம்! இஸ்லாத்தில் பிறந்த நீங்களெல்லாம் மார்க்கத்தை விற்றுவிட்டீர்கள், உலகை தேடுவதற்காக! நாங்கள் அந்த உண்மை மார்க்கத்தைத் தேடி, விலை கொடுத்து வாங்கிக் கொண்டோம்!”

அசடு வழியத் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த காசாளப் பெண்ணைப் பார்த்து அமைதியாகக் கூறினார் அந்தப் பேறு பெற்ற இஸ்லாமிய பெண்மணி:

“ சரி போகட்டும். இப்போது என் கணக்கைப் பார்!”

Friday 21 December 2012

மியான்மர்,இலங்கை,பௌத்த பயங்கரவாதங்கள் ஒரு கட்டுக்கதை அல்ல


புத்தர் போதித்தது அகிம்சையா? அல்லது நரவேட்டையா?

செவ்குன் கிராமவாசி 2001-இல், நடந்த சம்பவம் ஒன்றை பீதியுடன் நினைவு கூர்கிறார்:

“எங்கள் வீடுவாசல்களை, நிலபுலன்களை பிடுங்கிக் கொண்ட BKBA ராணுவத்தினர், கிராமத்துக்குள்ளேயே ஒரு முகாம் அமைத்தார்கள். மசூதி இடித்த இடத்தில் பெளத்த கோயிலைக் கட்டிக் கொண்டனர். எங்கள் முப்பாட்டன் காலத்துக்கும் முன்னிருந்து நாங்கள் உழுதுவந்த செழுமையான சமதள நிலத்து வயல்களை அபகரித்துக் கொண்டனர். எங்கள் கண்முன்னாலேயே அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் மற்றும் கரும்பை அறுத்துச் சென்றார்கள்!”

செவ்குன் கிராமம் நூறு முஸ்லிம்களின் இருப்பிடம். குடியிருப்புகளுக்கு எதிரே அமைந்திருந்தது அழகிய மசூதி – வழிபாட்டு ஸ்தலம்.

பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த BKBA பெளத்த பயங்கரவாதிகள் முஸ்லிம்களின் குடியிருப்புகளை இடிக்க ஆரம்பித்தார்கள். பள்ளிவாசலை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். மசூதி இருந்த இடத்தில் வழக்கம் போல பௌத்த மடத்தைக் கட்டினார்கள். முஸ்லிம்களின் குடியிருப்புகள் இருந்த இடத்தில் சாலையை அமைத்தார்கள்.

சொந்த நாட்டிலேயே அகதிகளான முஸ்லிம்கள் புலம் பெயர்ந்து அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தார்கள். சொற்பமான சிலர் வேறு இடங்களில் குடியேறினார்கள். அதே கிராமத்தில் இருக்க இடமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சிலர்.

மியான்மர் என்றழைக்கப்படும் பர்மாவில் வாழும் முஸ்லிம்களின் உண்மை நிலை இதுதான்.

இதில் குறிப்பாக பர்மாவின் கெரென் மாநிலம் பாஸிஸ பௌத்த தீவிரவாதிகள் மூட்டிவிட்ட இன துவேஷங்களால் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

புத்தர் போதித்தது அகிம்சையா? அல்லது நரவேட்டையா? என்று திரும்பவும் பௌத்த வரலாறுகளை  மறு பரீசிலனை செய்ய வேண்டியிருக்கிறது. அன்பு-அகிம்சை என்று சொல்லிக் கொண்டே பௌத்த பிக்குகள் நரமாமிசம் உண்ணும் அரக்கர்கள் போல மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறர்கள் அங்கே
அன்றாடம் அடிமைகளைவிட மோசமான நிலையில்தான் முஸ்லிம்கள் வாழ வேண்டி உள்ளது.

இறை வழிபாடுக்கு முற்றிலும் தடை. சமய நெறிகளுக்கு எதிரான அவமானம். இதெல்லாம் பர்மிய முஸ்லிம்கள் அன்றாடம் பறிகொடுத்து வரும் மனித உரிமைகள்.

அவரவர்க்கு பிடித்த உணவு உண்ணவும் தடை. 2000மாம் ஆண்டில் இருந்தே மியான்மரில் இறைச்சியை பயன்படுத்த தடை விதிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.

இறைச்சி சாப்பிட்டது ஊர்ஜிதமானால்.. அவர்கள் 5 ஆயிரம் கியாட் அதாவது 42 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியாக வேண்டும்.

இறைச்சிக்காக அறுக்கப்பட்டது ஆடாக இருந்தால்.. அதை பயன்படுத்தியவருக்கு 10 ஆயிரம் கியாட்டிலிருந்து (84 ஆயிரம் ரூபாய்)  .50 ஆயிரம் கியாட்வரை (4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.

மாடாக இருந்தாலோ ஒரு லட்சம்  கியாட் (8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்) அபராதமாக விதிக்கப்படும்.

மீனை உணவாக எடுத்துக் கொண்டாலும் அவருக்கும் இதே நிலைதான்; அபராதம்!

மீன் பிடித்துக் கொண்டிருந்த முஸ்லிம்கள் பயங்கரவாத புத்த பிக்குகளிடம் மாட்டிக் கொண்டு அந்த அரக்கர்களின் காலடியில் விழுந்த கதறி அழுது பாவமன்னிப்புப் பெற்ற சம்பவங்களும் ‘டேக் வெஹ் பு’ கிராமத்தில் நடந்துள்ளன.

KHRG மனித உரிமை அமைப்பின் அறிக்கையில் இது பதிவாகியுள்ளது.

முஸ்லிம்கள் மீன்களை வேட்டையாடக் கூடாது. யாருக்கும் தெரியாமல் இரவு நேரங்களில் மீன் வேட்டையாடி சிக்கிக் கொண்டால்..அவர் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

அந்தத் தண்டனை அடி-உதையாக இருக்கலாம். புத்த பிக்குவின் காலில் விழுந்து கதறி அழுது பாவமன்னிப்பு கேட்பதாகவும் இருக்கலாம். இத்தனையும் நடந்தும் கூட மீன்பிடித்தல் குற்றத்துக்காக 5 ஆயிரம் கியாட் (42 ஆயிரம் ரூபாய்) அபராதம் செலுத்தியவர்களும் உண்டு.

மீன் பிடித்த குற்றவாளி பணிந்து போகவில்லை என்ற ஒரே காரணத்துக்காக ஒருவருக்கு 30 ஆயிரம் கியாட் (2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளன. அப்படி அபராதம் செலுத்தாதவர்கள் மரண தண்டனை விதிக்கப்படும் உச்சக் கட்ட உத்திரவும் உண்டு.

அகதிகள் முகாம்களில் தங்கியிருப்போரின் பதிவுகள் இவை.

2000 லிருந்து மியான்மரில் இறைச்சி உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்றாடம் அரங்கேறும் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த பயங்கரவாதம் SPDC அரசுக்குத் தெரியாமல் நடக்கும் ரகசியம் அல்ல. ஏனென்றால்.. இந்த சம்பவங்கள் எல்லாம் அதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளின் முன்னிலையில்தான் நடக்கின்றன. அரசு அதிகாரிகள் ஒருநாளும் BKBA பௌத்த தீவிரவாதிகளைக் கைது செய்து முஸ்லிம்களின் உயிர் உடமைகளை பாதுகாத்ததாக இதுவரையும் வரலாறு இல்லை.

தாய்லாந்தில் பௌத்த துறவிகள் எவ்வாறு முழு ஆயுதபாணியாக ஒரு ராணுவ வீரனைப் போல துப்பாக்கி சகிதமாக நடமாடகிறார்களோ அது போன்ற நிலைதான் பர்மாவிலும்.

பௌத்தத் துறவிகள் பௌத்தம் அல்லாத மக்களிடம் இன துவேஷங்களைக் காட்டி வரும் மரபு ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. அது வரலாற்றுப் பூர்வமானது கூட.


இலங்கை: முஸ்லிம் சமூகத்தின் மீது இனவாத வெறுப்பினையும் மத அசௌகரியங்களையும் தொடர்ந்தும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற 
தீவிரவாத பிக்குள் அமைப்பான பொதுபல சேனாவினையும் அதனுடைய பிரதான பிக்குவான ஞானசார தேரரையும் அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகள் எது இதய சுத்தியுடன் கடந்த அரசாங்கமோ அல்லது அதற்குப் பிறகு வந்த   நல்லாட்சி அரசாங்கமோ செயற்படத் தவறியுள்ளது என்பது ஒரு வரலாற்றுத் தவறாகும் 

மிகவும் உறுதியான அரசியல் இருப்புடனும் பாரம்பரிய அடையாளங்களுடனும் வரலாறு நெடுக இலங்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகளை பல்வேறு விதங்களிலும் அத்துமீறுகின்ற விதமாக பொதுபலாசேனா என்கின்ற பயங்கரவாத பிக்குகள் அமைப்பும் அதன் தலைமைப் பிக்குவான ஞானசார தேரரும் தம்முடைய அடாவடித்தனங்களைப் பகிரங்கமாக முன்னெடுத்து வருவது ஒரு போதுமே ஏற்றுக்கொள்ள முடியாதது.


01. முஸ்லிம்களின் அடிப்படை மத வழிபாட்டு உரிமைகளைத் துவம்சம் செய்யும் விதமான எதிர்ப்புப் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை

02. முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மத அனுட்டானங்களான ஹலால் உணவு முதலான பண்பாடுகளைக் கொச்சைப்படுத்துகின்றமை
03. முஸ்லிம் குடியேற்றங்களையும் பள்ளிவாயல்களையும் அழித்து இல்லாமலாக்கும் அடாவடித்தனங்களை நேரடியாக அரச பாதுகாப்புடன் ஈடுபடுகின்றமை
04. முஸ்லிம்களின் பொருளாதாரத்தைக் குறிவைத்து பொய்ப்பிரச்சாரங்களையும் அழிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றமை.


என நீண்டுகொண்டே போகின்ற இவர்களின் அத்துமீறல்களின் பட்டியலானது முஸ்லிம்களை மட்டுமன்றி ஏனைய இன சகோதரர்களையும் கடும் கோபத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

தேசிய ஊடகங்களுக்கு முன்னால் பகிரங்கமாக அரச பாதுகாப்புப் படைகளின் துணையுடன் அரங்கேறும் இந்த வன்முறை நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்கவோ சட்டத்தின் முன் நிறுத்தவோ நாதியின்றி வாய் மௌனித்த அரசியல் தலைமைகளுடன் முஸ்லிம் சமூகம் இன்று நடுத்தெருவில் அரசியல் அநாதைகளாக நின்றுகொண்டிருக்கிறது.
அதற்காக நமது எந்தவித அரசியல் கருத்து வேறுபாடுகளையும் கடந்து மொத்தமாக  இலங்கை முஸ்லிம் சமூகம் என்கின்ற ஒரே அடையாளத்துடன் ஒன்று சேர்ந்து நமது குரல்களைப் பலமாக ஒலிக்கச் செய்வது நம் ஒவ்வொருத்தருக்கும் கடமையாக இருக்கிறது
பொதுபலசேனா என்கின்ற இந்தப் பயங்கரவாத பிக்குகளின் அமைப்பினதும் அதன் தலைமைப் பிக்குவான ஞானசர தேரரைரினதும் இனவாத அத்துமீறல்களை வன்மையாகக் கண்டிக்கின்றதாகவும், இவர்களை இத்துடனாவது தடுத்து நிறுத்தி சட்டத்தின் முன்னால் சமர்ப்பிக்கவும் இலங்கையின் அதிகாரத் தரப்புக்கு அழுத்தம் கொடுக்கவுமாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது  அஸ்ர்,கார் கி
முஸ்லிம்  பெயர் தாங்கிகள்(முனா,பிக்குகள்) தரவு கொடுக்க றுத்து
 விட்டனர்.
அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால் இறை நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும், அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கமாட்டான். (அல் குர்ஆன் 9:32)

எத்தனை பேர் திட்டம் போட்டோ அல்லது தன் அறியாமையாலோ இஸ்லாத்திற்கு கெட்ட பெயர் தேடி தர நினைத்தாலும் இறைவனின் ஒளியை யாராலும் ஊதி அணைத்துவிட முடியாது. கடைசி வரை இறைவன் அதனை பாதுகாப்பான்.






Monday 3 December 2012

"இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்தான்" - அமெரிக்க பேராசிரியர்




"இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்தான்" - அமெரிக்க பேராசிரியர் இயேசு கிறிஸ்து ஒரு 

முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். 

அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ரொபேர்ட்

 எப்.ஷெடிங்கர்-Robert F. Shedinger – இயேசு ஒரு முஸ்லிம் என்று தனது ஆய்வு நூலில் 

குறிப்பிட்டுள்ளார். இவர் இயேசு ஒரு முஸ்லிம்? was jesus a muslim? என்ற தலைப்பிலான 

தனது புதிய நூலில் தலைப்பில் கேட்டும் கேள்விக்கு அந்த நூலில் திடமாக ஆம் எஸ் அவர் 

ஒரு முஸ்லிம்தான் என்று தெரிவித்துள்ளார் . இந்த நூல் பெரும் எதிர்பார்ப்பை 

ஏற்படுத்தியுள்ளது . இந்த நூல் இந்த ஆண்டில் வெளிவரவுள்ளது மதங்கள் குறித்த

 பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் கற்பித்தல் குறித்து வகுப்பில் ஒரு முஸ்லிம் மாணவி 

2001-ஆம் ஆண்டில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர 

மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய தீர்மானித்துள்ளார். "இஸ்லாத்துடன் 

தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் 

சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து அதிகமாக ஆராய தூண்டுகோலாக 

அமைந்தது"- எனபேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் தெரிவிக்கிறார். பாக்ஸ்நேசன் செய்தி

 சேவைக்கு பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் வழங்கிய பேட்டியில் : ‘எனது கற்பித்தல் 

முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த 

மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் 

இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான 

இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் 

இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் 

முடிவுச்செய்தேன்.’ என்று தெரிவித்துள்ளார். இவர் நீண்டகாலமாக இயேசு கிறிஸ்து ஒரு 

முஸ்லிம்தான் என்று தெரிவித்து வருகிறார். தற்போது அவர் எழுதிய நூல் 

வெளிவரவுள்ளது 

என்பதால் மீண்டும் இந்த தகவல் சூடு பிடித்துள்ளது. Jesus was a Muslim, claims U.S. religions 

professor source: lankamuslim-org குர் ஆன் (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் 

நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; 

மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) 

தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; 

(இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. 3:47 قَالَتْ رَبِّ أَنَّىٰ

 يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ ۖ قَالَ كَذَٰلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ إِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ 3:47. 

(அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் 

தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் 

கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு 

காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே 

அது ஆகி விடுகிறது.

” 19:20 قَالَتْ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ وَلَمْ أَكُ بَغِيًّا 19:20. அதற்கு அவர் 

(மர்யம்), 

“எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் 

நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார். 19:22 فَحَمَلَتْهُ 

فَانتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِيًّا 19:22. அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன்

தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். 19:27 فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ ۖ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ 

شَيْئًا فَرِيًّا புதிய எற்படு மத்தேயு அதிகாரம் 1 18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் 

விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், 

அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று 

காணப்பட்டது. 19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை 

அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட 

யோசனையாயிருந்தான். 20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய 

தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் 

மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் 

உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21. அவள் ஒரு குமாரனைப் 

பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் 

பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் 

கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 23. அவன்: இதோ, ஒரு

கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று 

பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் 

என்று அர்த்தமாம். 24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் 

கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; 25. அவள் தன் முதற்பேறான 


குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

Thursday 29 November 2012

நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு






நூஹ் நபியின்                                    
கப்பல் தங்கிய மலை
கண்டுபிடிப்பு

-----------------------------------------

“திருக்குர்ஆன் வசனத்
தை நிருபிக்கும் 16
ஆயிரம் அடி உயரமுடைய
மலையின் மேல் உள்ள
ஒரு கப்பல்”
” பூமியே!
உனது தண்ணீரை நீ
உறிஞ்சிக் கொள்! வானமே நீ
நிறுத்து!”
என்று (இறைவனால்)
கூறப்பட்டது. தண்ணீர்
வற்றியது. காரியம்
முடிக்கப்பட்டது. அந்தக்
கப்பல்
ஜூதி மலை மீது அமர்ந்தது
. “அநீதி இழைத்த
கூட்டத்தினர்
(இறையருளை விட்டும்)
தூரமாயினர்” எனவும்
கூறப்பட்டது .
(திருக்குர்ஆன் 11:44.) இதில்
சான்று உள்ளது.
அவர்களில் அதிகமானோர்
நம்பிக்கை கொள்வதில்லை”
(திருக்குர்ஆன்
26:121.).“அவரையும்,
கப்பலில் இருந்தோரையும்
காப்பாற்றினோம்.
இதை அகிலத்தாருக்குச்
சான்றாக்கினோம்”.
(திருக்குர்ஆன் 29:15.)”
பலகைகள் மற்றும் ஆணிகள்
உடைய (கப்பல்) ஒன்றில்
அவரை ஏற்றினோம்.
அது நமது கண்காணிப்பில்
ஓடியது. இது (தன்
சமுதாயத்தால்)
மறுக்கப்பட்டவருக்கு (
நூஹுக்கு) உரிய கூலி.
அதைச் சான்றாக
விட்டு வைத்தோம்.
படிப்பினை பெறுவோர்
உண்டா? “.
(திருக்குர்ஆன்
54:13-15.)இவ்வசனங்களில்
நூஹ் நபியின்
கப்பலை அத்தாட்சியாக
மலையின் மேல்
விட்டு வைத்திருப்பதாக
திருக்குர்ஆன்
கூறுகின்றது.
மலை போன்ற
உயரத்திற்கு வெள்ளம்
வந்ததால்
ஜூதி மலைக்கு மேல் கப்பல்
நிலை கொண்டது.
இம்மலை துருக்கி நாட்டின்
எல்லையில்
அமைந்துள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த
போதான் மாவட்டத்திலுள்ள
அரராத் என்ற மலை தான்
ஜூதி மலை என்று
ஆராய்ச்சியாளர்கள்
கண்டு பிடித்துள்ளனர்.
அமெரிக்க நாட்டைச்சேர்ந்த
ஒருமலையேறும்
குழு அம்மலையை ஆய்வு
செய்து பனிப்
பாறைகளுக்கு அடியில்
கப்பல் துண்டுகள்
இருந்ததைக்
கண்டு பிடித்துள்ளது.1969
ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2
ஆம் திகதியன்று
கிழக்குத்துருக்கியின்
ரஷ்ய எல்லையில்
அமைந்துள்ள அரராத் மலைத்
தொடரில் ஒரு கப்பலின் சில
மரப் பகுதிகளை அந்த
ஆராய்ச்சிக்குழு
கண்டுபிடித்தது.
இம்மலைத் தொடரின்
மேற்குப்பகுதியில், 16,000
அடி உயரத்தில் பனியால்
மூடப்பட்ட
பாறைகளுக்கிடையே20
மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின்
மரப் பலகைகள்
புதைந்து கிடந்தன.
16 ஆயிரம்
அடி உயரமுடைய
மலையின் மேல் ஒரு கப்பல்
நிலை கொண்டுள்ளது
என்றால் அந்த
அளவுக்கு வெள்ளப்
பெருக்கு ஏற்பட்டிருக்க
வேண்டும்.
அதன் காரணமாக அந்த
மலைக்கும் மேலே கப்பல்
மிதந்து கொண்டு
இருக்கும் போது வெள்ளம்
வடிந்திருக்க வேண்டும்.
இதனால் அந்தக் கப்பல்
மலையின்
மீது நிலை கொண்டிருக்க
வேண்டும்
என்று ஆய்வாளர்கள்
ஊகித்துச்
சொல்வதை திருக்குர்ஆன்
1430
ஆண்டுகளுக்கு முன்பே
சொல்லி விட்டது.
மலையின் மேலே கப்பலைக்
கொண்டு போய்
வைத்தது யார்? என்ற
கேள்விக்குத் திருக்குர்ஆன்
மட்டுமே தக்க
விடை கூறுகிறது.
‘அக்கப்பலை அத்தாட்சியாக
விட்டு வைத்திருக்கிறோம்
; சிந்திப்பவர் உண்டா?’
என்று கூறி, சமீபத்தில் 40
ஆண்டுகளுக்கு முன்
கண்டுபிடிக்கப்பட்ட இந்த
உண்மையை 14
நூற்றாண்டுகளுக்கு
முன்பே திருக்குர்ஆன்
முன்னறிவிப்பு
செய்துள்ளது .
திருக்குர்ஆன்,
“இறைவனின் வேதம்”
என்பதற்கு இது
சான்றாகவுள்ளது.
இந்த சம்பவங்கள் மூலம்
இஸ்லாம் எவ்வாறான
மார்க்கம் என்றும் இஸ்லாம்
மட்டுமே உண்மையான
மார்க்கம் என்றும் அறிய
முடிகிறது.

யூத விஞ்ஞானிக்கு அறிவியல் ரீதியாக வழி காட்டிய அல்குர்ஆன்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!


கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். 

இவரது மனமாற்றத்திற்கு  வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்
.

‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க

வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.

மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய்

பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்

‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள்

விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட்

மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு

மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம்

காட்டிவிடும். ‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே

அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத

 விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.

இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:

அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார்.

தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான்.

அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப,

அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர்

அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது.

அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம்

பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.

இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது.

முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள்

மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம்

செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு.

குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.

Monday 19 November 2012

ஸிஜ்ஜீல்’ கல்லை கண்டுபிடித்ததாக தகவல்!


புனித திருக்குர்ஆனில் கூறப்படும் ‘ஸிஜ்ஜீல்’ கல்லை கண்டுபிடித்ததாக தகவல்!

Tuesday 13 November 2012

இஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி , முஹர்ரம்


இஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி , முஹர்ரம் 1434

இஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி , முஹர்ரம் மாதத்தோடு மலர்கின்றது. இறைவனுக்காகவும் அவனது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த திருத்தூதுக்காகவும் முஸ்லிம்கள்

ஏற்றுக்கொண்ட அரும்பெரும் தியாகமே ஹிஜ்ரத் “துறந்து செல்லல்” என்ற பொருளைத் தாங்கி நிற்கும். இந்த ஹிஜ்ரத் சன்மார்க்க வாழ்வை பாதுகாத்துக் கொள்வதற்காகத் தமது நாட்டையும், வீட்டையும் சொத்து சுகங்களையும் துறந்து செல்ல சித்தமாயிருக்க வேண்டும் என்பதே ஹிஜ்ரத்தின் தத்துவம்.

“ஒரு முஸ்லிமுக்கு தனது உயிரிலும் மேலானது அவருடைய இஸ்லாமிய வாழ்வுதான். அவ் வாழ்வுக்கு பங்கம் ஏற்படுமானால் அவர் எல்லாவித தியாகங்களுக்கும் ஹிஜ்ரத்துக்கும் தயாராகி விடுவார்” இது ஹிஜ்ரத் கற்பிக்கும் பாடம்.

ஹிஜ்ரத் பயண வேகத்தின் இந்த நீண்ட நெடிய கால ஓட்டத்தில் இவ்வையகத்தில் இஸ்லாம் நிகழ்த்திய அற்புதங்கள், புரட்சிகள், கற்பித்த பாடங்கள் எத்தனை எத்தனை. பெருமானார் (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களும், குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் கர்பலா களத்திலே சிந்திய இரத்தமும் இந்தப் பயண வேகத்தில் ஒரு பகுதிதான்.
இன்றும் அந்தப் பயணவேகம் தொடர்கிறது. அசத்தியத்திற்கு அடிபணியாத அவர்களின் நெஞ்சுறுதி இவ் அகிலத்தை செந்நிறமாக்கிக் கொண்டிருக்கிறது. மனித குலத்தை சிந்திக்க வைக்கிறது.

இஸ்லாமிய மாதங்களில் 4 மாதங்களை அல்லாஹுத்தஆலா புனிதமான மாதங்களாக ஆக்கியுள்ளான். ரஜப், துல்கஃதா, துல் ஹஜ் ஆகிய 3 உடன் இஸ்லாமிய புதுவருடத்தின் முதல் மாதமான இந்த முஹர்ரம் மாதமும். ஆனால் இந்த 4 மாதங்களில் முஹர்ரம் மாதத்துக்கு மட்டும்தான் “புனிதம்” என்ற பொருள் தங்கியுள்ளது. அது ஏன் என்று நோக்கினால் உலகில் மிக முக்கிய நிகழ்ச்சிகள் இம் மாதத்தில் 10 ஆம் நாளில் தான் நிகழ்ந்துள்ளது.
வானங்கள், பூமிகள், மலைகள், கடல்கள் ஆகியவற்றை படைத்தது இந்நாளில் தான். இறை அறிவிப்புப் பலகை, இறை எழுதுகோல் ஆகியவற்றை படைத்ததும் இந்நாளில் தான். ஆதம் (அலை) அவர்களையும் ஹவ்வா (அலை) அவர்களையும் படைத்ததும், சுவர்க்கத்தை படைத்ததும், அதிலே இவ்விருவரையும் நுழைய வைத்ததும் இந்நாளில் தான்.

முஹம்மது நபீ (ஸல்) அவர்கள் மக்காவை துறந்து மதீனா வந்தபோது அங்கு வாழ்ந்த யூதர்கள் ஆசூ;றா பத்தாம்நாள் நோன்பு நோற்றிருந்தார்கள். இதுபற்றி நபீகள் (ஸல்) அவர்கள் வினவியபோது இன்றுதான் நபீ மூஸா (அலை) அவர்களும், தோழர்களும் பிர்அவ்ன் எனும் சர்வாதிகாரியையும், அவனது கூட்டத்தையும் தோற்கடித்த நாள் என்றும் இன்றுதான் பிர்அவ்ன் கடலில் மூழ்கி இறந்த நாள் என்றும் இதனாலேயே நோன்பு நோற்றோம் என்றும் நவின்றார்கள்.

இதைக் கேட்ட நபீ நாயகம் (எனது சகோதரர்) மூஸாவுக்கு கிடைத்த வெற்றியை முன்னிட்டு நீங்கள்நோன்பு நோற்பதைவிட நான் மிகத் தகுதியுடையவன் எனக்கூறி தாமும் அன்று நோன்பிருந்ததுடன். தான் அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் ஒன்பதாம் நாளும் நோன்புநோற்பேன் என்றார்கள். ஆயினும் அதற்கிடையில் நபீகள் (ஸல்) அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார்கள்.

நபீகள் (ஸல்) ஒன்பதான் நாள் நோன்பு நோற்காவிடினும் நோற்பேன் என்று சொன்னதால் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் சுன்னத்தாக்கப் பட்டுள்ளது.

முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாளாகிய ஆஷ¤ரா தினத்தில் நோன்பு நோற்பது முஸ்லிம்களின் மீது கட்டாயமான ஸ¤ன்னத்தாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷ¤ரா தினத்தில் நோன்பு நோற்றதோடு ஏனையவர்களையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள் (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)

மேலும் அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆஷ¤ரா நோன்பைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆஷ¤ரா நோன்பாகிறது சென்ற வருடங்களுக்கான தெண்டப் பரிகாரமாகும். (ஆதாரம்: முஸ்லிம்)
இத்துணை சிறப்பு மிக்க மாதமே ஹிஜ்ரி புத்தாண்டின் முதல் மாதம் முஹர்ரம். துரதிருஷ்டமாக இதே மாதத்தில் முஸ்லிம்களின் இதயத்தை பிழியும் ஒரு சோக சம்பவம் நடைபெற்றது. அதனை நினைக்கும் தோறும் துக்கம் ஏற்படுகிறது.

கோமான் நபி (ஸல்) அவர்களின் குலக் கொழுந்தான இமாம் ஹுஸைன் இப்னு அலி (ரலி) அவர்களும், அவர் தம் குடும்ப உறுப்பினர் சிலரும் கர்பலா களத்தில் இதே ஆஷ¤ரா நாளில் ஹிஜ்ரி 60 இல் ஷஹாதத்தின் பானத்தைப் பருகினார்கள். யkதின் ஆட்களால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள்.

\இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் விரும்பியிருப்பார்களாயின் மிகவும் சொகுசான இன்ப வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும். அன்றைய ஆட்சியாளர்கள் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க காத்திருந்தார்கள். இமாமவர்கள் சத்தியப் பாதையில் தமது இன்னுயிரை அர்ப்பணிக்கத் துணிந்தார்களே தவிர யkதின் நியாயமற்ற ஆட்சிக்கு தமது ஆதரவைக் கொடுக்க முன் வரவில்லை.
“அநீதிக்கு தலை சாய்ப்பது ஒரு முஃமினுக்கு அழகல்ல” என்ற தத்துவத்தையே இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் “ஷஹாதத்” சங்கநாதம் செய்து கொண்டிருக்கிறது. முஹர்ரம் 10 ஆம் நாளில் முஸ்லிம்கள் கற்க வேண்டிய பாடம் இதுதான். எனவே ஒவ்வொரு ஹிஜ்ரத்துக்குப் பிறகும் ஒவ்வொரு கர்பலாவுக்குப் பின்பும் இஸ்லாம் புத்துயிர் பெற்று எழுகிறது. ஹிஜ்ரி புத்தாண்டே உன் வருகை மனித குல சுபீட்சத்துக்கும், நாட்டு நலனுக்கும், செழிப்புக்கும் காரணமாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறோம்.

முஹர்றம் பத்தாம் நாள் ஆசூறா தினம் அதிவிசேடங்களை உள்ளடக்கிய மாதினமாகும் சுருங்கக் கூறின்
  • அன்றுதான் நபீ ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னித்தான்
  • அன்றுதான் நபீ நூஹ் (அலை) அவர்களுடைய கப்பல் தூபான் வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றப்பட்டு ஜூதி மலையில் தரை தட்டியது.
  • அன்றுதான் நபீ மூஸா (அலை) நபீ ஈஸா (அலை) பிறந்தார்கள்.
  • அன்றுதான் சர்வாதிகாரி நும்றூதால் நெருப்புக்கிடங்கில் எரியப்பட்ட நபீ (இப்றாஹிம்) அலை காப்பாற்றப்பட்டார்கள்
  • அன்றுதான் நபீ யூனுஸ் (அலை) அவர்களின் சமூகத்தை விட்டு வேதனை நீக்கப்பட்டது.
  • அன்றுதான் நபீ ஐயூப் (அலை) அவர்களின் துன்பம் நீங்கியது.
  • அன்றுதான் நபீ யஃகூப் (அலை) அவர்கள் தனது மகன் யூசுப் (அலை) அவர்களை இழந்ததால் தேய்ந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.
  • அன்று பாழ்கிணற்றில் எறியப்பட்ட நபீ யூசுப் ( அலை) அதிலிருந்து வெ ளியேற்றப்பட்டார்கள்.
  • அன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பமாக்கப்பட்டது.
  • அன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்தது.
  • அன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியில் உள்ளவர்களுக்கு இறங்கியது
  • தூபான் வெள்ளத்தின் பின் பூமியில் முதன் முதலாக சமையல் செய்யப்பட்டது. இதை நூஹ் நபீ அவர்களே செய்தார்கள்.
  • அன்றுதான் சுலைமான் நபீ அவர்களுக்கு முழு உலக ஆட்சியும் வழங்கப்பட்டது.
  • அன்றுதான் நபீ ஸக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலை) அவர்கள் பிறந்தார்கள்.
  • அன்றுதான் பிர்அவ்னும் அவனதும் சூனியக்காரர்களும் தோற்கடிக்கப்பட்டனர்.
  • அன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான்
  • அன்றுதான் நபீ பேரர் ஹுசைன் (றழி) அஹ்லுல்பைத் என்றழைக்கப் படுவோரில் அநேகரும் கொலை செய்யப்பட்டனர்.

முஹர்ரம் 10ம் நாள் மகிழ்ச்சியா..? துயரமா...?


முஹர்ரம் 10ம் நாள் மகிழ்ச்சியா..? துயரமா...?

இஸ்லாமிய வரலாற்றில் நேர் எதிரான இரு சம்பவங்கள் ஒரே நாளில் நடந்துள்ளது நமது கவனத்திற்குரியது.

முஸ்லிம்களில் உள்ள ஷியா பிரிவினர் முஹர்ரம் மாதம் 10ம் நாள் மிகத் துக்ககரமான நாளாக ஆக்கிக்கொண்டு, அன்றைய தினம் தம்மைத்தாமே வருந்திக்கொள்ளக்கூடிய மிக மோசமான செயலில் இறங்குவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம்,

இதே நாளில்தான் நபி(ஸல்) அவர்களின் பேரரான ஹுசைன்(ரலி) அவர்கள் கர்பலாவில் நடந்த போரில் ஷஹீதாக்கப்படுகிறார்கள். அது மிக சோகமான ஒரு சம்பவம்தான். இந்நிகழ்ச்சி நடந்த இதே நாளில்தான் இதைவிட முக்கியமான ஒரு சம்பவம் நடக்கிறது. ஃபிர்அவ்ன் என்ற கொடியவனுக்கு எதிராக நபி மூஸா(அலை) அவர்கள் செய்த பிரச்சாரம் ஒரு முடிவுக்கு வந்து அவனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பனு இஸ்ரவேலர்களைக் கூட்டிக் கொண்டு எகிப்தை விட்டு வெளியேறுகிறார்கள். விபரம் அறிந்த ஃபிர்அவ்ன் தம் படையுடன் பின்தொடர்ந்து மூஸா(அலை) அவர்களை முற்றுகையிடுகிறான். அந்தச் சந்தர்ப்த்தில் உலகிலேயே மிகப் பெரிய அற்புதம் ஒன்று நிகழ்கிறது. கடல் இரண்டாகப் பிளந்து இரண்டு மலைகள் போல் எழுந்து நின்று விடுகின்றது. அந்த வழியே மூஸா(அலை) அவர்களுக்கு வழிவிட்ட அந்தக் கடல், ஃபிர்அவ்னும் அவனுடைய சேனைகளும் உள்ளே இறங்கியதும் அவர்களைச் சுருட்டி விழுங்கி விடுகிறது. இவை அனைத்தும் இறைவனின் ஏற்பாட்டின்படி நடக்கின்றன.

இந்த நாளைப் புகழந்து நன்றி செலுத்தும்விதமாக நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்து பிறரையும் நோன்பு நோற்கச் சொன்ன விவரம் புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. ஒரே நாளில் இந்த இரு நிகழ்ச்சிகளை எந்த அடிப்படையில் தீர்மானிப்பது?

இந்த இரண்டு சம்பவங்களில் அன்றைய நிகழ்வையும் இன்றைய நிகழ்ச்சிகளையும் அலசுகின்றது கட்டுரை.

முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது என்றாலே பல்வேறு அனர்த்தங்கள் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள மூடர்கள் பலரால் அரங்கேற்றப்படுவதை பார்க்கின்றோம். ரதம் போன்று ஒற்றை ஜரிகைகளாலும் வர்ணங்களாலும் அலங்கரித்து இறுதியில் அதை நதிகளில் போட்டு அழிப்பது இது போன்ற நிகழ்வுகளை "பஞ்சா" என்ற பெயரில் முஸ்லிம்களில் ஷியாக் கொள்கைக்காரர்கள்.

முஹர்ரம் மாதம் 10 ஆம் நாளை கோலாகலமாகக் கொண்டாடுவது ஷியாக்களின் வழக்கம். முஹர்ரம் பண்டிகை என்னும் பெயரில் ஷியா முஸ்லிம்கள் இப் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்;.

அன்றைய தினம் சில மூடர்கள் பக்திப் பரவசத்துடன் யாஅலி. யாஹுஸைன் எனன்ற கோஷத்துடன் தீயில் நடப்பதும், புலி வேஷம் போட்டு ஆடுவதும், என்று இன்னும் பல்வேறு அநாச்சாரங்களையும் அரங்கேற்றுகின்றனர்.
பஞ்சா என்பதற்கு பாரசீக மொழியில் ஐந்து என்று பொருள். நபி(ஸல்), அலி (ரலி), பாத்திமா (ரலி), ஹஸன்(ரலி), ஹூஸைன்(ரலி), ஆகிய ஐந்து பேருக்கும் தெய்வீகத் தன்மை இருப்பதாக நம்புவது ஷியாக்களின் கொள்கை. இதன் அடையாளமாகத் தான் பஞ்சா எடுக்கும் மாபாதகச் செயலை இந்த பஞ்சமா பாதகர்கள் செய்கிறார்கள்.

ஷியாக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. முஹர்ரம் பண்டிகை என்று அழைக்கப்படும் இப்பண்டிகையில்(?) ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலா போர்க்களத்தில் இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக இப்பண்டிகை(?) கொண்டாடப்பட்டு வருகிறது. முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் நடக்கும் அனாச்சாரங்கள் ரொம்ப அதிகம்.

முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல், ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது இந்துக்களின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது.

முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும்.
1) முஹம்மது (ஸல்) அவர்கள்,
2) அவர்களின் திருமகளார் பாத்திமா (ரலி),
3) அலி (ரலி),
4) ஹஸன் (ரலி),
5) ஹுஸைன் (ரலி)
என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் கையாகும்.

உருது மற்றும் ஹிந்தியில் பாஞ்ச் என்றால் ஐந்து என்று எல்லோரும் அறிவோம். இதை அடிப்படையாகக் கொண்டே பஞ்சா என்ற பெயர் வந்தது.

இந்த இஸ்லாத்தைத் தகர்க்கும் அனாச்சாரங்களை கண்டிக்க வேண்டிய சில மார்க்க அறிஞர்கள், மௌலவிகள் கூட இந்த முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா நோன்பு என்ற தலைப்பில் ஹுஸைன் (ரலி)யின் கர்பலா போர்க்களத்தையும், சோக வரலாற்றையும் பேசி மக்களிடம் பாராட்டுகள் பெறுகிறார். நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கலீஃபாக்கள் ஆட்சி நடத்தினார்கள் அவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் இறந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவில்லை எனும் போது அவர்களது பேரர் என்ற காரணத்தினால் அவரை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்துவது வரம்பு மீறிய செயலாகும்.

குறிப்பாக இப் பஞ்சா ஊர்வலத்தில் மாரடித்தல் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது யா அலீ!, யா ஹுஸைன்! என்று அவர்கள் இறந்த தினத்தில் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றை முஸ்லிம்கள் செய்கிறார்கள்.

மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஊர்வலங்களில் வன்முறை ஏற்பட்டு அரசாங்கம் இந்த பஞ்சா ஊர்வலத்தைத் தடை செய்துள்ளது. இதுபோன்ற செயல்களால் மதக்கலவரங்கள் ஏற்படுகின்றன

ஷியா பிரிவினர் செய்யும் இந்தக் காரியங்களில் எதுவொன்றும் இஸ்லாத்தை சார்ந்ததல்ல. போட்டோக்களில் காணப்படும் இந்த இரத்தக் காணிக்கை மடமையின் உச்சக்கட்டமாகும். மார்க்கம் பற்றிய சாதாரண அறிவுள்ளவர்களுக்கு கூட இந்த கொடுமை எல்லைக் கடந்த அறியாமை என்பது தெரியும். இந்தக் காரியங்களில் ஈடுபடுபவர்கள், இந்தக் காரியத்தை செய்யும் படி தூண்டுபவர்கள் படிப்பறிவற்ற, சிந்தனையற்ற, இஸ்லாமிய தெளிவற்ற, வரலாற்று ஆய்வற்ற மிகக் கீழான அடையாளங்களாவார்கள்.
---------------------------------------------------------------------------
முஹர்ரம் மாதத்தின் சிறப்பு - சிறப்பிப்பது எப்படி?

“முஹர்ரம்”

இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம்.முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு “விலக்கப்பட்டது” என்று பொருள்.

சொற் பொருள்”

முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம் இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

“புனித மாதங்கள்- அஷ்ஹுருல் ஹுரும்”
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.

அல்லாஹ் புனிதமாக்கிய மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். அதனை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் பேணுவது நம் கடமையாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ''அதில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் '' (9:36) புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமில் குற்றமிழைப்பது எவ்வளவு குற்றமோ அது போன்றே புனிதம் மிக்க மாதங்களில் தவறிழைப்பதும் பெரும் குற்றமாகும். எனவே மற்ற மாதங்களைக் காட்டிலும் அதிகமாகப் புனிதம் மிக்க மாதங்களைப் பேணுதல் அவசியம் ஆகும்.

''நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் சின்னங்களையோ புனிதம் மிக்க மாதங்களையோ (நீங்கள் தீங்கிழைக்கக) ஆகுமானதாக்கிக் கொள்ளாதீர்கள் '' (5:2)

அவர்கள் அறிவிக்கின்றார்கள், '' ரமளானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் '' ( முஸ்லிம், அஹ்மத்)

யூதர்கள் இந்த பத்தாம் நாளில் நோன்பு நோற்கும் வழக்க முடையவர்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது இப்பழக்த்தைக் கண்டதும் அதற்குரிய காரணத்தை அவர்களிடம் கேட்டனர். அதற்கு “நானே இறைவன்” எனக் கூறிய பிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் இறைவன் செங்கடலில் மூழ்கடித்ததும் நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் மக்களையும் காத்தருளியதும் அந்நாளில்தான் என்றும் அந்த நன்றியை நினைவுகூர மூஸா(அலை) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றனர் என்றும் அதனையே தாங்களும் பின்பற்றுவதாகவும் கூறினர். அதைக்கேட்ட முஹம்மத் (ஸல்), ”அவ்விதமாயின் நானும் என் மக்களும் தாம் உங்களையும்விட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” என்று கூறி அது முதல் தாங்களும் நோற்று தம் மக்களையும் அவ்வாறே நோன்பு நோற்குமாறும் பணித்தனர்.                        (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
ஆஷ§ரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது , அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். (முஸ்லிம்)

அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: '' நபி(ஸல்) அவர்களிடம் ஆஷ§ரா நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், '' கடந்த ஒரு வருட பாவங்களுக்கு அது பரிகாரமாகும்'' என்று கூறினார்கள். (முஸ்லிம்)
ஹுஸைன்(ரலி) அவர்களை விட சிறந்தவர் இறைத்தூதர் மூஸா(அலை) அவர்கள். சிறப்பு அடிப்படையில் பார்ப்பதாக இருந்தாலும் ஹுசைன் அவர்களின் சம்பவத்தை விட மதிப்பு மிக்க மூஸா அவர்களை முன்னிருத்தி அவர்களை பாதுகாத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி நோன்பிருப்பதே சிறந்ததாகும்.

மூஸா என்ற இறைத்தூதர் மிகப் பெரும் அதிசயத்தால் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியான சம்பவமும், முஹம்மத்(ஸல்) அவர்களின் பேரப்பிள்ளை 'கர்பலா'வில் கொல்லப்பட்ட துக்க சம்பவமும் பல நூற்றாண்டு வித்தியாசத்தில் ஒரே நாளில் நடக்கின்றது.

துயரமான சம்பவம் நடந்ததால் அந்த நாளை துக்க நாளாக முடிவு செய்யலாமா..?

நாளுக்குச் சக்தி இருந்து அன்றைய தினம் நல்ல நாளாக இருந்தால் ஹுசைன்(ரலி) அவர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த நாள் கெட்ட நாளாக இருந்தால் மூஸா(அலை) அவர்கள் தோல்வி அடைந்திருக்க வேண்டும். இது ஒன்றும் நடக்கவில்லை.

இறைவன் காலச்சக்கரத்தை தன் கையில் வைத்துக்கொண்டு, தான் நாடியவாறு சுழற்றுகிறான்;.

(இன்பம், துன்பம், சோதனை போன்ற) இத்தகைய காலங்களை மனிதர்களுக்கு மத்தியில் நாமே மாறி மாறி வரச் செய்கிறோம் - அல்குர்ஆன்: (3:140)
யாரை உயர்த்துவது, யாரைத் தாழ்த்துவது, யாருக்குக் கொடுப்பது, யாரை எடுப்பது என்று எல்லா விஷயங்களையும் தீர்மானிக்க,
ஒவ்வொரு நாளும் அவன் காரியத்திலே இருக்கிறான் - அல்குர்ஆன்: (55:29)

இத்தகைய கருத்தை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உள்ளன. இதையெல்லாம் நாம் உணர்ந்தால் காலத்தையோ, நேரத்தையோ குறைகூறி இறைவனின் கோபத்திற்குள்ளாக மாட்டோம்.

நாம் விரும்பாத, நமக்கு துன்பம் தரக்கூடிய செயல்கள் வாழ்க்கையில் ஏற்படத்தான் செய்யும். அப்போது அதற்கான காரணங்களை அலச வேண்டும். காரணம் நம் கட்டுப்பாட்டை மீறியதாக இருந்தால்,

(முஸ்லிம்களே..) நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், விளைச்சல்கள், உயிர்கள் ஆகியவற்றின் இழப்புகளால் சோதிப்போம். (காலத்தை சபிக்காமல்) பொறுமையை கைக்கொள்ளுவோருக்கு நன்மாராயம் உண்டு, (பொறுமையுடைய) வர்களுக்கு எந்த துன்பம் ஏற்பட்டாலும், நாங்கள் அல்லாஹ்விற்குரியவர்கள், நிச்சயமாக அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள் நேர்வழி பெற்ற இவர்களுக்குத்தான் இறைவனின் நல்லாசியுண்டு -
அல்குர்ஆன்: (2:155,156) 
காலத்தைக் குறைகூறி, ஷைத்தானுக்கு துணைபோய், தனக்குத் தானே இழிவை ஏற்படுத்திக் கொள்ளாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும்.