Thursday 25 December 2014

தேவி என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!! 

மதுரையில் சகோதரி தேவி இஸ்லாத்தை தழுவினார்....!! 

இறைவனின் மாபெரும் கிருபையினால் மதுரை மாவட்டம் அண்ணா நகரில் தேவி என்ற சகோதரி உலகம் போற்றும் ஒரே சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

சத்தியத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக..

80 வயது மூதாட்டி ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்





எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

ராமநாதபுரத்தில் 80 வயது மூதாட்டி இஸ்லாத்தை தழுவினார்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சத்திரகுடி அருகிலுள்ள கோரைக்குளம் என்ற ஊரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் உலகம் போற்றும் சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.

சத்தியத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் தாய் மதம் திரும்பினர்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் கோயம்பேட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் ஆதம் ஹவ்வா வாழ்ந்த தாய் மதமான இஸ்லாமிய மார்க்கத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். 

சத்தியத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

மணிகண்டன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!
கும்பகோணத்தில் சகோதரர் மணிகண்டன் இஸ்லாத்தை தழுவினார்....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்.
சத்தியத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

Saturday 29 November 2014

அட்டாளைச்சேனை 15 ஆம் பிரிவைச் சேர்ந்த சரிபுதீன் ஷஹீர் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்



அட்டாளைச்சேனை 15 ஆம் பிரிவைச் சேர்ந்த சரிபுதீன் ஷஹீர்
 கல்முனை மாவட்ட நீதி நிருவாக வலயத்திற்கான சமாதான நீதவானாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி A.J.அலக்ஸ் ராஜா முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 

இவர்,அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை  பழைய மாணவரும், இலங்கை
திறந்த பல்கலைக்கழக சட்ட பீட மாணவரும்,விஸ்டம் இளைஞர்  கழகத்தின்  தலைவரும் ஆவார்.

தற்போது அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூட  தாதி உத்தியோகத்தராக    கடமையாற்றும் இவர் அல்ஹாஜ்  எஸ்.எல். சரிபுதீன், ஈ .எல். சல்மா தம்பதியினரின் மூன்றாவது புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது

உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் 



Tuesday 25 November 2014

"
பிரசாத்" என்ற சகோதரர்
21:11:2014 வெள்ளி அன்று
குடும்பத்தோடு
"தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்!! அல்ஹம்துலில்லாஹ்.
இடம் ::குரோம்பேட்டை TNTJ கிளை

Friday 5 September 2014

தங்க ராஜ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாகஏற்றுக் கொண்டார்


தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 18-08-2014 அன்று தங்க ராஜ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாகஏற்றுக் கொண்டார்கள்…

சுமித்ரா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டா


தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் கடந்த 07-08-2014 அன்று சுமித்ரா என்ற சகோதரி  இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சுமையா என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்…

நானும் ஹிஜாப் அணிய தொடங்கியதில்இருந்து என்னில் நிறைய மாற்றங்களை உணர்கின்றேன்



எனது பெயர் ரேபெகா நான் அமெரிக்காவை சேர்ந்தவள், நானும் எனது குழந்தைகளும் சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்தை எங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டோம். என்னுடைய மகளுக்கு வயது 12 ஆகிறது, முதன்முறையாக அவள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்லும்போது எடுத்து படம்தான் இது 
நான் அவளை பள்ளியில் காரில் இறக்கிவிடும் முன் "நீ ஹிஜாபோடு இருக்கும் நேரத்தில் அல்லாஹ்வின் உதவி உனக்கு எப்பொழுதும் இருக்கும்" என்று கூறினேன் அவளும் சிறிது புன்னகையோடு பள்ளியில் நுழைந்தாள்.

நானும் ஹிஜாப் அணிய தொடங்கியதிலிருந்து என்னில் நிறைய மாற்றங்களை  உணர்கின்றேன். இதற்க்கு முன் இல்லாத ஒரு மாற்றம், எனக்குள் ஒரு அமைதி, ஒரு பாதுகாப்பு. இன்னொரு ஆச்சரியாமான விசயம் என்னவென்றால் என் மகள் படிக்கும் பள்ளியில் அதிகமான முஸ்லிம் பெண்கள் படிக்கிறார்கள் ஆனால் அவர்கள் யாரும் ஹிஜாப் அணிவதில்லை என்னுடைய மகள்தான் முதன் முதலில் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து செல்கிறாள் இன்ஷா அல்லாஹ் எனது மகளை பார்த்து மற்ற முஸ்லிம் பெண்களும் ஜிஹாப் அணிவார்கள் என்று நம்புகின்றேன்.

யூதரான பொலிஸ் உயர் அதிகாரி இஸ்லாத்தை ஏற்றார்..!



யூதரான பொலிஸ் உயர்அதிகாரி இஸ்லாத்தை ஏற்றார்..!

'ஒரு சராசரி அமெரிக்கன் எவ்வாறு தனது வாழ்வை நகர்த்துவானோ அது போலவே எனது

வாழ்வும் நகர்ந்தது. தொடக்க காலத்திலிருந்தே நேர்மையாக வாழப்பழக்கப்பட்டவன். ஒரு முக்கிய காவல் துறை அதிகாரியாக இருந்தாலும் எனது தேவைகளுக்கான பணத்தை கொடுத்து விட்டே எனது பணிகளை முடிப்பேன். நேர்மையாக வாழ்வை நடத்திட முடிந்தவரை முயற்சிப்பேன்.எனது நண்பன் நஜீர் மூலமாகத்தான் எனக்கு இஸ்லாம்    அறிமுகமானது.1980 களில் அவனோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவனது நடவடிக்கைகள் அவன் என்னோடு பழகிய விதம் அனைத்தும் எனக்கு சில நேரம்
ஆச்சரியத்தை வரவழைத்தது.நஜீரைப் போல மேலும் சில இஸ்லாமிய நண்பர்கள் எனக்கு கிடைத்தனர்.அவர்களோடு எனது நேரம் செல்வது எனக்கு சற்று சிரமமாகவே இருந்தது. அவர்களின்  கலாசாரத்தைப் புரிந்து கொள்வதும் சிரமமாக இருந்தது. யூத குடும்பத்தை சேர்ந்த ஒருவித  அதிகார மமதையில் வாழ்ந்து பழக்கப்பட்ட எனக்கு நஜீரின் எளிமையும் அவன் என்னோடு நடந்து கொண்ட விதமும் எனக்குள் சிறிது சிறிதாக  மாற்றங்களை ஏற்படுத்தியது.இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை இது எனக்குள் தூண்டியது.ஒரு வருடத்திற்கும் மேலாக நான் நஜீரைத் தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தேன்.ரவுடிகள், படித்த மக்கள் போன்ற

சகலரிடத்திலும் அவன் பேசும் போது அவன் பயன்  படுத்தும் வார்த்தைகள்.அந்த வார்த்தைகளில் 
உள்ள நளினங்கள் எல்லாமே என்னை மிகவும்  
கவர்ந்தது.ஏன் நீ மாத்திரம் இவ்வாறு பல  சிரமங்களை ஏற்படுத்திக்  கொள்கிறாய். இவ்வாறு வாழ உன்னால் எப்படி முடிகிறது?'  என்று கேட்டேன். அமெரிக்க வாழ்வு முறை எந்த

அளவு ஆடம்பரமானது என்பதை தெரிந்ததனால் இதனைக் கேட்டேன். இஸ்லாம் விதித்த  சில  கட்டுப்பாடுகள் என்னை இத்தகைய வாழ்வு முறைக்கு மாற்றியது.

ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும் போகப் போக இந்த வாழ்வு முறையே என்னுள் 
அமைதியைக் கொண்டு வந்தது. இந்த வாழ்வு முறையினால் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் 
இருக்கிறேன்' என்றான். அதன் பிறகு, தான் தற்போது வாழும் வாழ்வு முறை குர்ஆனிலிருந்து எவ்வாறு பெறப்பட்டது என்பதை ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் என்னிடம் பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தான். ஒரு புத்தகம் ஒருவனை இந்த அளவு மாற்றி விட 
முடியுமா? என்று எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. இந்த நிகழ்வுகள் குர்ஆன் என்ற அந்த வேதத்தின் மீது ஒரு இனம் புரியாத மதிப்பை என்னுள் உண்டாக்கியது. ஒரு வாழ்வு முறையை ஆய்வு செய்வும் மாணவனாக எனது இஸ்லாமிய தேடல் தொடங்கியது. இந்த நிலையிலும் அரை மனத்தோடுதான் இஸ்லாத்தை அணுகினேன். இந்த நேரத்தில்தான் செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்றது. இதற்கு காரணம்  முஸ்லிம்கள் என்ற செய்தி பரப்பப் பட்டதால் எனது தேடல் திடீரென்று நின்று போனது. இதன் பிறகு தவறான வழியில் செல்கிறோமோ என்று எனது உள் மனது கவலையில் ஆழ்ந்தது. ஒரு மேலதிகாரியான எனக்கு இந்த நேரத்தில் அரசிடமிருந்து பல எச்சரிக்கைகள் வந்தன.
இஸ்லாமியர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டேன். இந்த சம்பவங்களால் இஸ்லாம் பற்றிய எனது தேடல் சில காலத்துக்கு நின்று போனது.2004 ஆம் ஆண்டு இந்த களேபரங்களெல்லாம் மறந்தவுடன் திரும்பவும் இஸ்லாமிய எண்ணங்கள் எனக்குள் தோன்ற ஆரம்பித்தது.திரும்பவும்  நண்பன்  நஜீரைத் தொடர்பு கொண்டேன். அவனும்  சளிக்காமல் எனது கேள்விகளுக்கு தொடர்ந்து விடைகளைக்   கொடுத்துக்  கொண்டிருந்தான். இந்த முறை குர்ஆனைப் பின்  
பின் பற்றினால்ப வாழ்வு முறை எப்படி எல்லாம் 
மாறும் என்பதனையும் எடுத்துக் கூறினான். இஸ்லாத்தை ஏற்றவுடன் எனது வாழ்வு முறை எவ்வாறு இருக்கும் என்பதனையும்  விளக்கினான். நஜீரின் சகோதரன் ரியாஸூம் இந்த விஷயத்தில் எனக்கு மிகவும் உதவினான். இஸ்லாம் சம்பந்தப்பட்ட மிகப் பெரும் புத்தகக் 
கடலையே இரு சகோதரர்களும் என் முன் கொட்டினர். அனைத்தையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதம் குர்ஆனின் விளக்கங்கள்  
என்னுள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின.எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது என்ற ஒரு மனிதரால் இது போன்ற வார்த்தைகளை சொல்லவே முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். அறிவியல், விஞ்ஞானம், பூகோள அறிவு இப்படி ஒட்டு மொத்த அறிவையும் குத்தகை எடுத்த ஒருவரால் தான் இப்படி ஒரு ஆக்கத்தை தர முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.
இத்தனை ஆய்வுகளுக்குப் பிறகு முஹம்மது ஒரு இறைத் தூதர்தான் என்ற முடிவுக்கு வந்தேன். நாளாக நாளாக இந்த நம்பிக்கை அதிகரித்ததேயொழிய குறைந்த பாடில்லை. இதன் பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு இரவில் படுக்கைக்கு செல்லும்போது 'எனக்கு ஒரு தெளிவைத் தருவாய் இறைவா' என்று கூறிக் கொண்டே தூங்கிப் போனேன். தூக்கத்திலிருந்து விழித்தவுடன் இனம் புரியாத ஒரு உணர்வு என்னுள் ஏற்பட்டது. இறை மார்க்கமான இஸ்லாம்  என்னை ஆட்கொண்டு விட்டதை உணர்ந்தேன்.நண்பன் நஜீரிடம் கூறி என்னை மசூதிக்கு அழைத்துச் செல்ல கோரினேன். ஒரு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு எனது நண்பன் என்னை மசூதிக்கு அழைத்துச்
சென்றான். அந்த பள்ளியின் இமாம் (தலைவர்) எனக்கு இஸ்லாத்தின் அடிப்படை  நம்பிக்கையான கலிமாவை அரபியிலும்  ஆங்கிலத்திலும் சொல்லச் சொன்னார். அந்த உறுதி மொழியைச் சொன்னவுடன் இனம் புரியாத ஆனந்தம் என்னுள் ஏற்பட்டது.
நான் முஸ்லிமாக மாறினேன். உடன் குழுமியிருந்த இஸ்லாமியர் அனைவரும் என்னை ஆரத் தழுவி தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். அதே மிடுக்கு: அதே வேலை: அதே கௌரவம்: ஆனால் தற்போது ஒரு அமெரிக்க முஸ்லிமாக எனது பயணம் தொடர்கிறது. நஜீர் மற்றும் ரியாஸ் போன்ற சிறந்த நண்பர்கள் உங்களுக்கும் கிடைக்க
நான் பிரார்த்திக்கிறேன்.-வில்லியம்
தகவல் உதவி
தீன் ஷோ, சவுதி கெஜட்,

ரெஜின் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.


தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளையில் கடந்த 31-07-2014 அன்று ரெஜின் என்ற சகோதரர் #இஸ்லாத்தை_தன்_வாழ்கை_நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் ரஹீம் என்று மாற்றி கொண்டார்கள். மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…

பிஸிதா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.


தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 10-08-2014 அன்று பிஸிதா என்ற சகோதரி ,இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சுல்தானா என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்…

பிரபு என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்…


தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளையில் கடந்த 15-08-2014 அன்று பிரபு என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை முஹம்மத் ஆசிப் என்று மாற்றிக் கொண்டார்……

Thursday 4 September 2014

Russian sister Alena Reverts to Islam



Russian sister Alena Reverts to Islam
Alena Katkova, 29 year old from Siberia, Russia who works as a call center operator in New Zealand converts to Islam
I was born in Russia, actually the USSR where there was no religion and I came to NZ in 2008, a country with many cultures, nationalities and religion.
When I started studying at AUT (New Zealand) I met several students who were Muslims, and I got curious and started asking questions and that's how I got to Islam. It changed my life a lot, to be honest, especially personality wise.
Before I converted, I used to go out with friends partying and clubbing, but all that has stopped. Since I started wearing the hijab, how people treat me has changed and I think I now get more respect. In Islam we are not supposed to shake hands with men, or hug and kiss anyone who is not your relative, so I don't do it. If I greet men I will just say "nice to meet you, but I'm sorry my religion does not allow me to shake hands with you" but with a smile they understand, and New Zealand is a very accepting country. However, there are challenges with my family, and even my younger sister still cannot understand or accept the fact that I am now a Muslim.
"In Russia, people still think of Muslims as terrorists because of what they see and hear in the media. I feel comfortable wearing the hijab, but when I'm thinking about changing jobs, because my qualification is in teaching, I am always thinking if they will actually accept me as a teacher here."

Friday 29 August 2014

துபாயில் கண் மருத்துவரின் சந்தேகம் தீர்ந்து இஸ்லாத்தை




துபாயில் கண் மருத்துவரின் சந்தேகம் தீர்ந்து இஸ்லாத்தை ஏற்ற காட்சி.
சோப்ரா : எனது பெயர் சோப்ரா. நான் ஒரு கண் மருத்துவர். 1984 லிருந்து துபாயில் வேலை செய்து வருகிறேன். ஜாகிர் நாயக்கான உங்களின் சொற்பொழிவுகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். மிகவும் தர்க்க ரீதியான கேள்விகளுக்கும் அழகிய முறையில் பதில் அளிக்கும் உங்களின் சொற்பொழிவு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. எனது கேள்விக்கு வருகிறேன். கடவுள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்றால் மக்காவில் உள்ள கஃபா என்ற இடத்தில் மட்டும் இறைவன் இருப்பதாக நம்புவது முரண்பாடாக தெரிகிறதே? இதற்கான விளக்கம்?
ஜாகிர்நாயக்: தோழரே! நான் சொன்னதை நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள். இறைவன் இந்த பூமியின் மையத்தில் இருப்பதாக நான் சொல்லவில்லை. கஃபா என்ற கட்டிடம் உலகின் மையப் பகுதியில் இருப்பதாகத்தான் சொன்னேன். உலக முஸ்லிம்கள் ஒரே சீரான வணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக கஃபாவின் திசையை நோக்கி தொழுகிறோம். இது பற்றி குர்ஆனிலேயே இறைவன் மிகத் தெளிவாக சொல்லி விடுகிறான்.
‘உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக இறைவன், இறுதி நாள், வானவர்கள், வேதம் மற்றும் நபிமார்களை நம்புவோரும், உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு மன விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே இறைவனை அஞ்சுபவர்கள்.
-குர்ஆன் 2:177
இந்த வசனத்தின் மூலம் ஒரு திசையை நோக்கி தொழுது விடுவதால் மட்டுமே ஒருவனுக்கு நன்மையாகி விடாது. அவனது செயலில் மேலே குறிப்பிட்ட அனைத்தும் இருக்க வேண்டும். அவரே உண்மையாளர் என்கிறான் இறைவன். எனவே உலக ஒற்றுமைக்காக இந்த ஏற்பாட்டை செய்யப்பட்டதேயொழிய கடவுள் மெக்காவில் உள்ள கஃபாவில் இருக்கிறார் என்பது அதன் அர்த்தமல்ல. நான் சொன்னதை தவறாக விளங்கியுள்ளீர்கள்.
சோப்ரா: சீக்கியர்களின் புனித ஸ்தலமான அமிர்தஸரஸில் அனைவரும் அனுமதிக்கப்படும் போது மெக்காவில் முஸ்லிம்களைத் தவிர மற்ற யாரையும் அனுமதிப்பதில்லையே ஏன்?
ஜாகிர் நாயக்: அமிர்தசரஸ் பாதுகாப்பட்ட தூய்மைபடுத்தப்பட்ட பகுதியில் வரவில்லை. ஆனால் கஃபா வருகிறது. அங்குள்ள புல் பூண்டுகளைக் கூட முஸ்லிம்களே பிடுங்கக் கூடாது. வேட்டையாடுதலும் தடுக்கப்பட்டது. இது முஸ்லிம்களுக்கு நன்கு தெரியும். ஆனால் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லையாதலால் தவறுகள் நேர்ந்து விடும் என்பதற்காக அனுமதிப்பதில்லை. நீங்கள் உலகின் மற்ற எந்த பள்ளிகளுக்கும் வர பிரியப்பட்டால் நான் அழைத்துச் செல்கிறேன். துபாயில் உள்ள எந்த பள்ளிக்கும் நீங்கள் வர பிரியப்பட்டால் நான் அழைத்துச் செல்கிறேன். மெக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல வேண்டும் என்றால் அதற்குரிய விசாவைப் பெற வேண்டும். ‘லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் அதாவது இறைவன் ஒருவனைத் தவிர வேறில்லை: முகம்மது நபி அந்த இறைவனின் தூதராக உள்ளார்கள்’ என்ற வாக்கியத்தை நீங்கள் நாவால் மொழிந்தால் அந்த விசா உங்களுக்கு கிடைத்து விடும்.
சோப்ரா: இவ்வாறு நான் சொல்லி விட்டால் என்னால் மெக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல முடியுமா?
ஜாகிர் நாயக்: ஆம்…… கண்டிப்பாக….. நான் முன்பு சொன்ன வார்த்தைகளை சொல்கிறீர்களா?
சோப்ரா: மற்றவர்கள் சொன்னதையும் பார்த்தேன். அந்த வார்த்தைகளை சொல்வதில் எந்த ஆட்சேபணையும் எனக்கு இல்லை.
ஜாகிர் நாயக்: வாயால் சொல்வது மாத்திரம் அல்ல. அந்த நம்பிக்கை உங்கள் மனதில் வர வேண்டும். அத்தகைய நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
சோப்ரா: ஒரு உண்மையை நம்புவதில் தயக்கமில்லை. நான் நம்புகிறேன்.
(பலத்த கரகோஷம்)
ஜாகிர் நாயக்: இறைவன் ஒருவன் என்பதை நம்புகிறீர்களா?
சோப்ரா: ஆம். கண்டிப்பாக….
ஜாகிர் நாயக்: முகமது நபி அந்த இறைவனின் தூதுவர் என்பதையும் ஒத்துக் கொள்கிறீர்களா?
சோப்ரா: ஆம்…. அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஜாகிர் நாயக்: இதை உளப்பூர்வமாக ஒத்துக் கொண்டு விட்டீர்கள் என்றால் நீங்கள் ஒரு முஸ்லிம். மெக்காவுக்கும் மதினாவுக்கும் செல்வதற்கு உங்களை யாரும் இனி தடுக்க முடியாது.
சோப்ரா: நான் உளப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன்.
(பலத்த கரகோஷம்)
ஜாகிர் நாயக்: வாழ்த்துக்கள் நண்பரே! அந்த உறுதி மொழியை அரபியிலும் ஆங்கிலத்திலும் சொல்கிறேன். அதனை திருப்பி சொல்லுங்கள்.
(அந்த உறுதி மொழியை ஜாகிர்நாயக் சொல்ல சகோதரர் சோப்ராவும் அதனை திரும்ப சொல்லி இஸ்லாமிய வட்டத்துக்குள் நுழைகிறார். எல்லா புகழும் இறைவனுக்கே!)
ஜாகிர் நாயக்: சகோதரர் சோப்ரா! நீங்கள் மெக்கவுக்கு சென்று வர நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன்.
சோப்ரா: நன்றி, உங்களின் இந்த செய்தியானது என்னைப் போன்று அறியாமையில் சிக்கியிருக்கும் பல கோடி மக்களையும் சென்றடைய வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரரே!

Jennifer, 31, converted to Islam from Christianity last year, in the middle of Ramadan. Highlights from her story:



Jennifer, 31, converted to Islam from Christianity last year, in the middle of Ramadan.
Highlights from her story:
"I see a lady with a truthful good heart. I learnt so much from her," she says. "The respect and treatment of the family I was blessed to live among has touched me deeply.

Jennifer says listening to the words of the Quran "mesmerized me. I felt a light enter my heart and soul and staying there. I couldn't resist, tears came to my eyes every time I heard it."
Read full story

அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது,


அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது,

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே !அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது, மேலும் அவர்கள் கூறுகையில் நாங்கள் யாராலும் மூளை சலவை செய்யப்படவில்லை முழுமையான மனதோடு இஸ்லாத்தை ஏற்றுள்ளோம் என்று கூறி உள்ளனர்..
அல்லாஹ் இவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை கொடுப்பானாக..
நேர்வழி காட்டுபவன் இறைவனே:

Thursday 28 August 2014

சற்குணம்' என்பவர் தனது முஸ்லீம் நண்பர்களின் நடவடிக்கையில் கவரப்பட்டு தூய இஸ்லாத்தை தழுவினார்...!



TNTJ சுல்தான் பேட்டை கிளையில்....

புதுச்சேரி மூலகுளம் பகுதியை
சேர்ந்த சகோதரர் 'சற்குணம்'
என்பவர் தனது முஸ்லீம் நண்பர்களின் நடவடிக்கையில்
கவரப்பட்டு தூய இஸ்லாத்தை
தழுவினார்...!

அல்லாஹு அக்பர்

அவரது குடும்பத்தினரும்
இஸ்லாத்தை ஏற்றிக்கொண்டு
இம்மை மறுமை வாழ்வு
வெற்றி பெற து ஆ செய்வோம்

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday 27 August 2014

உமா மகேஸ்வரி என்ற சகோதரி ‪இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக‬ ஏற்றுக்கொண்டார்.




TNTJ மாநிலத் தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற உமா மகேஸ்வரி
‪தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‬ மாநிலத் தலைமையகத்தில் கடந்த 07-08-2014 அன்று உமா மகேஸ்வரி என்ற சகோதரி ‪இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக‬ ஏற்றுக் கொண்டு தனது பெயரை சமீமா என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்

மேற்கிந்திய தீவுகள் அணியின் (Trinidad) கிரிக்கட் வீரர் வில்லியம் பெர்கிங்க்ஸ் ( William Perkins ) புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்!



அல்லாஹு அக்பர்!
மேற்கிந்திய தீவுகள் அணியின் (Trinidad) கிரிக்கட் வீரர் வில்லியம் பெர்கிங்க்ஸ் ( William Perkins ) புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்!

William Perkins (born 8 October 1986 in Barbados) is a West Indian cricketer. He is a right-handed batsman who occasionally plays as wicketkeeper.

Perkins first came to prominence playing for the West Indies in the 2006 Under-19 Cricket World Cup, where he scored 133 from 150 balls in a victory against the United States, an innings that won him the man of the match award.[1] His performances in the tournament earned him a Twenty20 debut for Trinidad and Tobago in the Stanford 20/20 tournament. In his first match, he scored 53 from 28 balls in an eight-wicket win.[2] He subsequently made his first-class debut in January 2007.[3]

Continued domestic success in Twenty20 cricket – in his first nine games, he averaged more than 40 at an strike rate of over 125[4] – earned him a place in the West Indies team for a Twenty20 International against Australia. Opening the innings in a match shortened to eleven overs per side, he scored 9 in a seven-wicket victory.[5]

Having helped Trinidad and Tobago to victory in the Stanford 20/20, scoring an unbeaten half-century in the final,[6] Perkins was included in the initial squad for the team to face England in the Stanford Super Series for a collective prize of $20 million and attended a training camp, but did not make the final squad.[7][8]


Sunday 24 August 2014

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி





உடலில் அதிகமான அசதி. எந்தச் செயலை செய்ய வேண்டுமானாலும்,பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை.உற்சாகமின்மை,
எதிலும் ஆர்வமின்மை,உண்பதற்கு கூட எழுந்து போய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே,என்று எண்ணத் தோன்றும்!எப்பொழுது பார்த்தாலும் களைப்பு,
தூங்கவேண்டும் போல் இருக்கும்,ஆனால் படுத்தால் தூக்கம் வராது. இந்த அனேமியா நோயை குணப்படுத்த தினமும் 5 பேரிச்சம் பழம் உண்டால் மிக விரைவில் குணமாகும்.

Friday 22 August 2014

முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்று நினைத்தவர் இன்று இஸ்லாத்தில்!



முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் ஒரே  வெறியில் பிரிட்டிஷ் ஆர்மியில் சேருவதற்கு 3 தடவைக்கு மேல் முயற்ச்சி செய்து தோல்வி அடைந்தேன்.
பின்பு இஸ்லாத்தை பற்றி அதிகமான ஆராய்ச்சியில் ஈடுபட்ட பின்பு அதன் உண்மையை அறிந்து கொண்டேன்.  இப்போது நானும் ஒரு முஸ்லிம்.    சத்திய மார்கத்தை எனக்கு வழிகாட்டிய  அல்லாஹ்விற்கே   எல்லா புகழும்.
கீல்லிங்க்டொன் என்ற எனது பெயரை இப்ராகிம் கில்லிங்க்டோம் என்று மாற்றி கொண்டேன்
 அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday 30 July 2014

செல்வநாயகி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்




எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

தேவக்கோட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி செல்வநாயகி....!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் செல்வநாயகி என்ற சகோதரி உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அஸ்மா என்று மாற்றிக்கொண்டார்.
சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக........!

Tuesday 29 July 2014

சுமித்ரா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகத்தில்
18.07.2014 அன்று சுமித்ரா என்ற
சகோதரி இஸ்லாத்தை தன்
வாழ்கை நெறியாக ஏற்றுக்
கொண்டு தனது பெயரை
#சுமையா என்று மாற்றி
கொண்டார்கள்……

கார்த்திக் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகத்தில்
இஸ்லாத்தை_ஏற்ற_கார்த்திக்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகத்தில்
கடந்த 18-07-2014 அன்று கார்த்திக்
என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்
வாழ்கை நெறியாக ஏற்றுக்
கொண்டு தனது பெயரை
#அப்துல்_அஜீஸ்
என்று மாற்றி கொண்டார்கள்.

Friday 11 July 2014

கோவையில் அட்வகேட் ராஜவேல் இஸ்லாத்தை தழுவினார்....!!



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

கோவையில் அட்வகேட் ராஜவேல் இஸ்லாத்தை தழுவினார்....!! 

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தில் அட்வகேட் ராஜவேல் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

மலேசியாவில் பிரபல மாடல் அழகி இஸ்லாத்தை தழுவினார்....!!




எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

மலேசியாவில் பிரபல மாடல் அழகி இஸ்லாத்தை தழுவினார்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் மலேசியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி பெலக்சியா இலேப் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

இஸ்லாத்தை தழுவுவதற்கு முன் 6 மாத காலமாக இஸ்லாத்தை பற்றி ஆய்வு செய்து இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே மனித வாழ்க்கைக்கான வழிமுறை என்பதை முழுமையாக விளங்கி இஸ்லாத்தை தழுவியுள்ளதாக நெஞ்சார சிலாகித்து கூறியுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக.....

பிரேசில் நாட்டில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் ஜான் போண்டன்....!!



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

பிரேசில் நாட்டில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் ஜான் போண்டன்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் இணை வைப்பு கோட்டையாக திகழும் பிரேசில் நாட்டின் ஜீசஸ் சிலைக்கும் கீழே மிஷன் தாவா என்ற அமைப்பு இஸ்லாமிய பிரச்சாரத்தை செய்து வருகிறது.

அப்பொழுது ஜான் போண்டன் என்ற கிறித்தவ சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சுபூர் அஹமது என்று மாற்றிக் கொண்டுள்ளார். 

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

செங்குன்றத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் கோபி....!!



செங்குன்றத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் கோபி....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கிளையில் கோபி என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்வியில் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்வியில் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சசிகலா என்பதை ஃபாத்திமா என்றும்,
மலர்க்கொடி என்பதை கத்திஜா என்றும்,
மணிக்குமார் என்பதை அப்துல் ரஹ்மான் என்றும்,
சிபிராஜ் என்பதை அப்துல்லாஹ் என்றும்,
தீபன் ராஜ் என்பதை அலாவுதீன் என்றும் தங்களது பெயர்களை மாற்றிக் கொண்டாரகள்.

சத்தியத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த குடும்பத்தினருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக..

கருப்பூரில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் வெற்றிசெல்வன்....!!



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

கருப்பூரில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் வெற்றிசெல்வன்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளையில் வெற்றிசெல்வன் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக..

கோட்டக்குப்பத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி அருணா....!!

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

கோட்டக்குப்பத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி அருணா....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் கிளையில் அருணா என்ற சகோதரி உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

Sunday 6 July 2014

மறைக்கப்பட்டிருக்கிருக்கும் பைபில் பர்ணாபா




மறைக்கப்பட்டிருக்கிருக்கும் பைபில் பர்ணாபா
===========================================
இங்கு கிறிஸ்தவ திருச்சபை அறிந்திராத ஒரு பைபிலும் உண்டு. அதுதான் ஐந்தாவது பைபிலாகிய பைபில் பர்ணாபா.

இந்த பைபிளைத் தொகுத்த பர்ணாபா என்பவர் கிறிஸ்தவ பெரியார்களில் ஒருவராவார். மேலும் ஆரம்ப கட்டங்களில் கிறிஸ்தவ மதத்தை பிரச்சாரம் செய்தவர்களில் இவரும் ஒருவர் என்பதற்கான உடன்படான ஆதாரங்களும் கிறிஸ்தவ அறிஞர்களிடமுண்டு. இவருடன் இணைக்கப்படும் இத்தொகுப்பில் இவர் மஸீஹின் 12 சீடர்களில் ஒருவரென்றும், திருச்சபையின் கருத்துப்படி இவர் ஒரு தூதர் என்றும் அறியப்படுகின்றது.


பர்ணாபாவின் தொகுப்பு


இத்தொகுப்பு எப்போது எழுதப்பட்டது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் இத்தொகுப்பு சம்மந்தப்பட்ட உண்மைக் கதை அறியப்பட்ட வகையில் கி.பி 492ல் இருந்து ஆரம்பிக்கின்றது. கி.பி.492 இல் முதலாவது 'ஜலாஸியூஸ்' என்ற போப்பான்டவரின் ஆட்சிக்காலத்தில் (இஸ்லாம் தோன்ற 110 ஆண்டுகளுக்கு முன்) வாசிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டிய புத்தகங்கள் பற்றிய தகவல் ஒன்றை இந்த போப் வெளியிட்டார். அந்த வகையில் அவ்வாறு தடை செய்யப்பட்டு மறைக்கப்பட்ட ஒன்றுதான் இந்த பைபிள் பர்ணாபாகும். இது கி.பி.1709 வரை இரகசியமாகவே இருந்தது. என்றாலும் கி.பி.1709 இல் இத்தாலி மொழியில் எழுதப்பட்ட இதன் பிரதியொன்றை ரஷ்ய மன்னரின் ஆலோசகர்களில் ஒருவரான 'கிரைமர்' என்பவர் கண்டு கொண்டார். பின் அவர் அதனை 'அம்ஸ்திர்தாம்' எனும் ஒரு முக்கியஸ்தருக்கு இரவலாக வழங்கினார். பின்னர் அந்த முக்கியஸ்தர் அப்பிரதியை 1713 இல் 'பிர்னஸ் அயூஜின் ஸாபவி' என்பவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். பின்னர் இத்தொகுப்பானது கி.பி. 1738 இல் அயூஜிடமிருந்து வியன்னாவில் இருந்த அரச அரன்மனையின் நூலகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அதன் பின் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பைபிள் பிரதியானது 'பராமியுனோ' என்ற இலத்தீன் இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ  துறவி ஒருவரால் வெளிக் கொண்டு  வரப்பட்டது.


இதனை இவர் வெளிக் கொண்டு வரக் காரணம் என்னவென்றால்:


01.' லாயிர் யானூஸ்' என்பவரின் சில ஏடுகள் இவருக்கு கிடைத்திருந்தன.  அதிலே லாயிர் யானூஸ் என்பவர் பவுலின் கருத்துக்களை இன்ஜீல் பர்ணாவை மேற்கோல்காட்டி விமர்சித்திருந்தார். எனவே தான் பைபிள் பர்ணாவைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது.


02. அந்த பைபிளைக் கொண்டு அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த 'ஐந்தாம் சக்தஸ்' என்ற பாப்பரசரின் நெருக்கத்தைப் பெருவது.


இவ்விரண்டு காரணங்களும் அவரை இத்தொகுப்பைப் பற்றி அறிந்து கொள்ளத் தூண்டி இருந்தன. அந்தவகையில் பைபிள் பர்ணாபாவின் பிரதியைப் பாப்பரசரின் நூலகத்தில் கண்டுபிடித்தார். அதனை  அவர் பார்த்ததும் அதை யாருக்கும் தெரியாமல் தனது சட்டைப்பைக்குள் மறைத்துக் கொண்டார். பின் அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.


இந்த இன்ஜீல் பிரதியானது கலாநிதி 'ஹலீல் சஆதாவால்' அரபுக்கு மொழி பெயர்க்கப்பட்டது.


இன்ஜீல் பர்ணாபாவின் கருத்துக்கள் பற்றிய ஒரு பார்வை


இத்தொகுப்பானது ஏனைய எல்லா இன்ஜீல்களினதும் கருத்துக்களோடு முரண்படுவதுடன், மஸீஹின் வாழ்க்கை வரலாற்றை நுணுக்கமாகவும், அழகிய முறையிலும், தெளிவாகவும் குறிப்பிடுகின்றது.


அந்த வகையில் இதன் சில முக்கிய கருத்துக்களை நோக்குவோம்:


01. மஸீஹ் கர்த்தரின் அடிமையும், அவனது தூதரும் என்று குறிப்பிடுவதுடன்  அவர் சம்பதமாக  கூறப்படுகின்ற  இறைப் பண்புகளையும், மஸீஹ் கர்த்தரின் மகன் என்பதையும் மறுக்கின்றது.


02. அல்குர்ஆனில் வந்துள்ளதை உறுதிப்படுத்துவது போன்று முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வருகையைகத் தெளிவான பெயருடன் முன்னறிவிப்பு செய்கின்றது.


03. மஸீஹ் சிலுவையில் அரையப்படவில்லை மாறாக வானுக்கு உயர்த்தப்பட்டதாகவும், உண்மையில் சிலுவையில் அறையப்பட்டது மஸீஹூக்குச் சதி செய்த மோசடிக்கார யூதனான 'அல் ஹர்யூதி' என்பவனே என்றும் குறிப்பிடப்டுகிறது.


04 கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான இப்றாஹீம்(அலை) அவர்களால் அறுப்பதற்காக ஏவப்பட்டது. இஸ்ஹாக்(அலை) அவர்களைத்தான் என்ற கூற்றை மறுத்து, இப்றாஹீம்(அலை) அவர்கள் அறுக்க முனைந்தது உண்மையிலேயே தன் மகனான இஸ்மாயில்(அலை) அவர்களையே என்று உறுதியாகக் குறிப்பிடுகின்றது.


இவ்வாறு யாராலும் திரிபுபடுத்தலுக்கு உட்படாத வகையில் இறைசட்டங்களின் அடிப்படை நம்பிக்கைக் கோட்பாடுகளுடன் உடன்படுகின்ற அதிகமானவற்றை பைபிள் பர்ணாபா உள்ளடக்கி இருக்கின்றது.


முன்னுள்ள வேதங்களை ஆய்வு செய்து பிழைகளைச் சுட்டிக்காட்டிய ஆய்வாளர்கள் உண்மையில் இத்தொகுப்பு மஸீஹின்(ஈஸா (அலை)சீடர்களில் ஒருவரான பர்ணாபாவுடையது தான் என்பதனை ஏற்றுக் கொள்கின்றனர். என்றாலும் பவுல் சுட்டிக்காட்டிய, கிறிஸ்தவ திருச்சபைகளால் பற்றிப்பிடிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு எதிராக இவரின் கருத்துக்கள் காணப்படுவதால் இத்தொகுப்பைக் கிறிஸ்தவத் திருச்சபை வெறுப்பதுடன், அதனை அங்கீகரிக்காத, அறியப்படாத ஒன்றாகக் கருதுகின்றது.


தமிழில்  :  M.S.M. Naseem (BA .Hones)

மூலம்  :  Habank Al-Maidhani,  العقيدة الإسلامية " ”
Posted by naseem msm

பிற சமய சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்,

இஸ்லாத்தை நோக்கி...

TNTJ மாநிலத் தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற பிற சமய சகோதரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் கடந்த 23-06-2014 அன்று பிற சமய சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்,

Saturday 5 July 2014

பெங்களூரில் இசுலாத்தை தழுவிய இந்துமுன்னணி பிரமுகர் . மாஷா அல்லாஹ்

பெங்களூரில் இசுலாத்தை தழுவிய இந்துமுன்னணி பிரமுகர் .

மாஷா அல்லாஹ்
 

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

Sunday 29 June 2014

இஸ்லாத்தை தழுவிய சகோதரர் மணிகண்டன்....!!

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

இஸ்லாத்தை தழுவிய சகோதரர் மணிகண்டன்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் மணிகண்டன் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மது சிராஜுதீன் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

புதுக்கோட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் ஜெயப்பிரகாஷ்....!!

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

புதுக்கோட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் ஜெயப்பிரகாஷ்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை நகரத்தில் ஜெயப்பிரகாஷ் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அபுபக்கர் சித்திக் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக..

திருத்துறைபூண்டியில் மகேந்திரன் என்ற சகோதரர் தன் குடும்பத்தோடு இஸ்லாத்தை தழுவினார்....!!

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

திருத்துறைபூண்டியில் மகேந்திரன் என்ற சகோதரர் தன் குடும்பத்தோடு இஸ்லாத்தை தழுவினார்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி கிளையில் மகேந்திரன் என்ற சகோதரர் தனது குடும்பத்தோடு உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு...

மகேந்திரன் என்பதை முஹம்மது இப்ராஹீம் என்றும், அவருடைய மனைவி மணிமேகலை என்பதை ஆயிஷா என்றும்,

பிள்ளைகள் தேவேந்திரன் என்பதை இஸ்மாயில் என்றும், கஜேந்திரன் என்பதை இஸாக் என்றும் பெயர் மாற்றம் செய்து கொண்டார்கள்.

சத்தியத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

கடலூரில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் வீரமணி....!!

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

கடலூரில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் வீரமணி....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் கடலூர் OT கிளையில் வீரமணி என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை இப்ராஹீம் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக

திருவள்ளூர் மாவட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் சுந்தர்....!!

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் சுந்தர்....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் தாங்கல் கிளையில் சுந்தர் என்ற சகோதரர் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஷுஹைப் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...

Thursday 12 June 2014

பரங்கிப்பேட்டையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் சுதாகர்....!!

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளையில் சுதாகர் என்ற சகோதரர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டுள்ளார். 

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக



Saturday 7 June 2014

சொத்துப் பங்கீடு பற்றி இஸ்லாம்





சொத்துப் பங்கீடு பற்றி இஸ்லாம்

சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு குறைவாக கொடுக்கப்பட்டது ஏன்?

சொத்துப் பங்கீடு பற்றி பலரும் இஸ்லாத்தின்மீது விமர்சனங்களை வைக்கின்றார்கள். எனவே இது பற்றிய விபரத்தை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.

நபி முஹம்மத்(ஸல்)அவர்கள் வாழ்ந்த அன்றைய சமூக சூழலில் ஆண்கள் சகல விதங்களிலும் பெண்களை அடக்கியாண்டு உரிமைகளைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். “பலமுள்ளவன் தான் சரியானவன்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் தகப்பனோ சகோதரனோ விட்டுச் செல்லும் சொத்துக்களில் பெண்களுக்குரிய பங்கினை வழங்காது பலாத்காரமாகச் சூறையாடிக் கொண்டுமிருந்தார்கள்.

தந்தையைப் பறிகொடுத்து விட்டு தவிக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும், கணவனை இழந்துவிட்டு கண்ணீரோடு வாழும் விதவைப் பெண்களுக்கும் அச்சொத்திலிருந்து எதுவும் கிடைக்க மாட்டாது. இவர்கள் அடுத்தவர்களிடத்தில் கையேந்தி மற்றவர்களின் தயவில் வாழக்கூடிய பரிதாபகரமான நிலை காணப்பட்டது. இந்நிலையில் இக்கொடுமைக்கு ஆரம்ப கட்டத் தீர்வாக அல்லாஹ் பின்வரும் வசனத்தை அருளினான்.

“உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது அவர் ஏதேனும் செல்வத்தை விட்டுச் செல்வாராயின் அவர் பெற்றோருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் நல்ல முறையில் (மரண சாசனம்) வஸீய்யத் செய்வது உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது. பயபக்தியாளர்களுக்கு இது கடமையாகும்.

எவர் அ(ம்மரணசாசனத்)தை செவியேற்ற பின்பும் அதை மாற்றி விடுகின்றாரோ அதன் குற்றம் அதை மாற்றியவர்களையே சாரும். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன் நன்கறிந்தவன்.

ஆனால் வஸீய்யத் செய்பவரிடம் அநீதத்தையோ பாவத்தையோ எவரேனும் அஞ்சி (சம்பந்தப்பட்ட) அவர்களுக்கிடையே (வஸீய்யத்தை சீர்செய்து) சமாதானம் செய்தால் அவர் மீது குற்றமில்லை. நிச்சமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையவன். (அல்குர்ஆன் 2:180-182)

இதனடிப்படையில் சொத்துக்களை விட்டுச் செல்பவர் தன்னுடைய பெற்றோர் மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு அச்சொத்திலிருந்து பங்குகிடைக்கக்கூடியதாக மரண சாசனம் செய்யவேண்டும். அதன் பத்திரமும் எழுதப்பட வேண்டும் என்ற சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. மரண சாசனத்தில் அநீதி காணப்படுமானால் அதனை சீர்படுத்துவதற்கும் உரிமை வழங்கப்பட்டது.

மரணசாசனம் தெரிவிக்க ஏதேனும் பொருளைப் பெற்றுள்ள எந்த முஸ்லிமுக்கும் அவர் தமது மரண சாசனத்தை எழுதி வைக்காமல் இரண்டு இரவுகளைக் கழிப்பதற்குக் கூட அனுமதியில்லை என நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரழி) (நூல்:புகாரி)

இதன் மூலம் பெண்களுக்கும் நியாயமாக பங்கீடு கிடைக்க வழி காட்டப்பட்டது.

இச்சட்டம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் ஸஅத் இப்னு ரபீஃஆ(ரழி) என்பவரின் மனைவி தனது இரு பெண் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு நபி முஹம்மது (ஸல்) அவர் களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இதோ இவ்விருவரும் ஸஃத் இப்னு ரபீஆவின் புதல்வியர்கள். இவர்களுடைய தந்தை உங்களுடன் உஹது யுத்தத்திலே பங்குகொண்டு கொல்லப்பட்டு விட்டார்.

இவர்களுடைய தந்தையின் சகோதரர் இவர்களுடைய முழுச் சொத்தையும் எடுத்துக் கொண்டார். இவர்களுக்காக எதையும் விட்டுச் செல்லவில்லை. இவர்களுக்கென சொத்து எதுவும் இல்லையென்றால் அவர்களைத் மணம் முடித்துக் கொடுக்கவும் முடியாது என்று முறையிட்டார்.

இந்த முறைப்பாட்டை செவியேற்ற நபி முஹம்மது(ஸல்) அவர்கள், நிச்சயமாக அல்லாஹ் இதற்கோர் தீர்வை வழங்குவான் எனக் கூறினார்கள். இச்சந்தர்ப்பத்தில் இப்பெண்மணியின் முறையீட்டிற்குப் பதில் கூறுமுகமாக பின்வரும் சட்டம் அருளப்பட்டது.

1) இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்குண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்கு (சொத்துப் பங்கிடும் முறைப்பற்றி) கட்டளையிடுகின்றான்.

- (இறந்தவர் விட்டுச்செல்லும் சொத்துக்கு ஆண்பிள்ளை இல்லாமல்) இரண்டு பெண்கள் அதற்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர் விட்டுச்சென்றதில் மூன்றில் இருபங்கு (2/3) அப் பெண்களுக்குண்டு.

- ஒரே ஒருபெண் மட்டும் இருந்தால் அவளுக்கு அதில் அரைவாசிப் (பங்கு) உரியது.

2) இறந்தவருக்குப் பிள்ளை இருப்பின் அவர் விட்டுச் சென்றதில் (அவருடைய) தாய், தந்தைக்கு ஆறில் ஒரு (1/6) பங்குண்டு.

- அவருக்கு பிள்ளை இல்லாமல் அவரது பெற்றோரே அவருக்கு வாரிசாக இருப்பின் அவரது தாய்க்கு மூன்றில் ஒரு (1/3)பங்குண்டு. (மீதி தந்தைக்குரியது)

- இறந்தவருக்கு (பிள்ளைகள் இல்லாமல்) சகோதரர்கள் இருப்பின் அவரது தாய்க்கு ஆறில் ஒரு (1/6)பங்குண்டு.

- (இவ்வாறு பங்கீடு செய்வது) அவர் செய்த மரணசாசனம் அல்லது அவரது கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும்.

- (சொத்துப் பங்கீடு பெறுவதில்) உங்கள் பெற்றோர், மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாக பயனளிப்பதில் மிக நெருக்கமானவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.

“இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டவையாகும். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:11)

3). (இறந்துபோன) உங்கள் மனைவியருக்கு பிள்ளை இல்லையெனில் அம்மனைவியர் விட்டுச் சென்றதில் (கணவராகிய) உங்களுக்கு அரைவாசி (1/2) உண்டு.

- அவர்களுக்கு பிள்ளை இருப்பின் அவர்கள் விட்டுச் சென்றதில் (கணவராகிய) உங்களுக்கு நாலில் ஒரு (1/4) பங்குண்டு. (இது) அவர்கள் செய்த மரணசாசனம் அல்லது கடன் என்பவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும.

- உங்களுக்கு (கணவனாகிய நீங்கள் இறந்த பின்) பிள்ளை இல்லையெனில் நீங்கள் விட்டுச் சென்றதில் (மனைவியர்களான) அவர்களுக்கு நாலில் ஒரு (1/4)பங்குண்டு.

- உங்களுக்கு பிள்ளை இருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதில் (மனைவியர்களான) அவர்களுக்கு எட்டில் ஒரு (1/8) பங்குண்டு. (இது) நீங்கள் செய்த மரண சாசனம் அல்லது கடன் என்பவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும்.


4. (பெற்றோர் பிள்ளைகள் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ மரணித்து அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு (1/6) பங்குண்டு. அவர்கள் இதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு (1/3) பங்கில் அவர்கள் பங்குதாரர்களாவார்கள். (இது) பாதிப்பு அற்றவிதத்தில் செய்யப்பட்ட மரணசாசனத்தையும் அல்லது கடனையும் நிறை வேற்றிய பின்னரேயாகும். இது அல்லாஹ்விடமிருந்துள்ள கட்டளையாகும். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனும் சகிப்புத்தன்மையுடையவனு மாவான். (அல்குர்ஆன் 4:12)

இவ்வசனம் அருளப்பட்டதும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஸஃத்
இப்னு ரபீஃஆவின் சகோதரரை வரவழைத்து அவர் எடுத்துச் சென்ற சொத்தை பின்வருமாறு பங்கீடு செய்தார்கள்.

இரு பெண் பிள்ளைகளுக்கும் (தலா ஒருவருக்கு 1/3 என்ற பங்கு வீதத்தில்) 2/3 பங்குகளும், இவர்களின் தாய்க்கு எட்டில் ஒருபங்கும் (1/8) பங்கும் மீதியை ஸஃத் (ரழி) அவர்களின் சகோதரர்களுக்கும் கொடுத்தார்கள்.
(நூல்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)

தனக்கும் தனது பெண் பிள்ளைகளுக்கும் சொத்துரிமை விவகாரத்தில் உரியபங்கு கிடைக்கவில்லையென்று ஒரு பெண் மணி நீதி கேட்டு வந்தபோது அப்பெண் மணிக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவே வாரிசுரிமைச் சட்டம் அருளப்பட்டது.

மகன், மகள், சகோதர சகோதரி, மனைவி, தாய் தந்தை ஆகியோருக்கு இச்சட்டத்தின் மூலம் சொத்துக்களில் பங்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

இதைவிட பெண்ணுக்குரிய அந்தஸ்த்தும் உரிமையும் வேறு எங்கும் எந்த மதத்திலும் கோட்பாட்டிலும் காண முடியாது.

இவ்வாரிசுரிமைச் சட்டம் அருளப்பட்டபின் மரண சாசனத்தின் மூலம் சொத்துக்கள் பங்கீடு செய்யும் சட்டம் ரத்துச் செய்யப்பட்டதோடு வாரிசுகளுக்கு சொத்துக்கள் சம்பந்தமாக மரணசாசனம் செய்யவோ எழுதவோ அல்லது சிபாரிசு செய்யவோ தடுக்கப்பட்டது. வாரிசுகளுக்கு எத்தனை வீதம்பங்கு கொடுக்க வேண்டும்; என்று அல்லாஹ் விபரித்துக் கூறியுள்ளானோ அதே அடிப்படையிலும் இத்திருமறைக் குர்ஆனுக்கு விளக்கவுரையாக நபி முஹம்மது (ஸல்) அவர்கள் எப்படிச் செயல்படுத்தி பங்குவைத்துக் காட்டினார்களோ அதே அடிப்படையிலும் தான் உலகம் அழியும் வரை பங்கீடு செய்யப்பட வேண்டும். இதில் எவரும் மாற்றம் செய்ய முடியாது.

வாரிசுகள் அல்லாத வேறு எவருக்கேனும் அல்லது நற்பணிகளுக்கேதும் சொத்தில் குறிப்பிட்ட ஓர்அளவு கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் அது சம்பந்தமாக வஸீய்யத் செய்வது தடுக்கப்படவில்லை.

உதாரணமாக, சமுதாயத்தின் கல்வி அறிவு வளர்ச்சிக்காக மறுமலர்ச்சித் திட்டங்களுக்காக அல்லது ஏழை எளியவர்கள் அநாதைகள் விதவைகள் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரின் நலன்களைக் கவனத்திற் கொண்டு அவர்களது மேம்பாட்டிற்காக ஒருவர் தனது சொத்தில் குறிப்பிட்ட ஒருபங்கை மரணசாசனம் செய்ய விரும்பினால் அவர் தாராளமாக செய்யலாம். ஆனால் மொத்த சொத்தையும் தர்மஸ்தாபனங்களுக்கோ பொது நிறுவனங்களுக்கோ எழுதிவைத்து விட முடியாது. அவரது மரணசாசனம் மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் (1/3) அதிகமில்லாமல் இருப்பதையே இஸ்லாம் விரும்புகின்றது.

ஸஃத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நான் (நபியவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது மக்காவில்) நோயுற்று விட்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது நான்அல்லாஹ்வின் தூதரே! என் செல்வம் அனைத்தையும் மரணசாசனம் செய்ய விரும்புகின்றேன். எனக்கு இருப்பதெல்லாம் ஒரு மகள்தான். (எனவே என்சொத்தில்) பாதிப் பாகத்தை மரணசாசனம் செய்யட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பாதி அதிகம்தான் என்றார்கள். அப்படி என்றால் மூன்றில் ஒரு பங்கு (1/3) என்று கேட்டேன். மூன்றில் ஒரு பங்கா? அதுவும் அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வது அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாக விட்டுச் செல்வதை விட நல்லதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:புகாரி)

பெண் பிள்ளைகளுக்குரிய சொத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் தன்னிறைவுள்ளவர்களாக அவர்களை ஆக்குவதற்கும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் உரிய கவனம் செலுத்தினார்கள்.

வாரிசுகளை நிர்ணயிப்பதில் ஒவ்வொரு சமுதாயத்திலும் வெவ்வேறான அளவுகோல்கள் இருப்பதைப் பார்க்கின்றோம். வாரிசுகள் என்போர் யார்? அவர்கள் எந்த அடிப்படையில் வாரிசுகளாகிறார்கள்? அவர்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியவர்கள் யார்? அவர்களில் யாருக்கு எந்தளவு பங்கு கொடுக்கப் படவேண்டும் என்ற விபரங்களெல்லாம் இஸ்லாம் தெளிவுப் படுத்துகிறது.

சொத்துக்களுக்கு மனிதன் சொந்தக்காரனாக இருந்தாலும் அவனாக முடிவுசெய்து விரும்பிய விதத்தில் வாரிசுக்ளுக் கிடையில் பங்கிட முடியாது. இஸ்லாம் தயாரித்துத் தந்திருக்கின்ற பட்டியல் முறையில் தான் பங்கீடு செய்யவேண்டும். சொத்துக்கள் தலைமுறை தலைமுறையாக குடும்பத்திற்குள் மாறி வருவதல்ல முக்கியம். அச்சொத்துக்களால் பலபேருடைய வாழ்வும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதே முக்கியம்.

எனவே, ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் மொத்த சொத்து களையும் வழங்கிடாமல் பெண்களுக்கும், பெற்றோருக்கும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் பங்குவைத்து பங்குதாரர்களாக ஆக்குவதன் மூலமே குடும்பம் சீர்குலையாமல் சீரழிவுக்குள்ளாகாமல் பாதுகாக்க முடியும். ஒருவரை ஒருவர் தாங்கி நிற்கக்கூடிய வகையில் சொத்தைப் பங்கிடுவதன் மூலமே பொருளாதார சுபீட்சத்தினையும் சந்தோசமான கட்டுக்கோப்பான குடும்ப வாழ்வையும் உருவாக்கிட முடியும். அதன் காரணமாகவே வாரிசுகள் என்போர் யார்? என்ற பட்டியலை இஸ்லாம் தயாரித்துத் தந்துள்ளது.

தந்தை மரணித்துவிட்டால் அக்குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு ஆண் பிள்ளையைச்சாரும். ஆண்பிள்ளை இல்லையென்றால் தந்தையின் சகோதரனைச் சாரும். அவர் அக்குடும்பத்திற்கு- பராமரிப்பாளராக- வாரிசுதாரராக ஆக்கப்படுகின்றார். அதனால் தான் தந்தை விட்டுச் செல்லும் சொத்துக்களை பங்கு வைக்கும் போது அச்சொத்தின் மீதிப் பங்கிற்கு இவர் பங்காளியாக ஆக்கப்படுகின்றார். இதன் மூலம் ஆண் துணையில்லாத குடும்பத்திற்கு இவர் மூலம் பாதுகாப்பு அரண் போடப்படுகின்றது.

இச்சிறப்பான சட்டத்தின் வாயிலாகவே பெண் சமுதாயம் பாதுகாக்கப்படுகின்றது. தங்களுடைய ஜீவனோபாயத்தை தாங்களே தேடிக்கொள்வதற்காக தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்வதற்காக தொழில் தேடிச்செல்லும் முஸ்லிம் அல்லாத பெண்களுக்குள்ள நிலை இஸ்லாமியப் பெண்ணுக்குவராது. வாரிசுரிமைச் சட்டத்தின் மூலம் அவள் பாதுகாக்கப்படுகின்றாள்.

முஸ்லிமான ஒருபெண்ணும் முஸ்லிம் அல்லாத ஒரு பெண்ணும் தொழிலுக்குச் செல்வதில் அடிப்படையில் வேற்றுமை உண்டு. முஸ்லிமல்லாத பெண்ணைப் பொறுத்தவரை அவள் அவளது வாழ்வை அமைத்துக் கொள்ள சம்பாதித்தேயாக வேண்டும். அவளைப் பொறுப்பேற்று வளர்ப்பதற்கு வாழ்வை அமைத்துக் கொடுப்பதற்கு எவரும் இல்லை. சொத்தில் ஒரு பங்குமில்லை. ஆகவே அவள் சார்ந்திருக்கும் மதவாதச் சிந்தனையும் சமூகக்கோட்பாடும் அவளுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளதால் அவள் பருவ வயதை அடைந்த பின் வீட்டை விட்டு வெளியேறியாக வேண்டும். இஸ்லாமிய பெண்ணுடைய நிலை இதை விட முற்றிலும் மாறுபட்டுள்ளது.

அவளை பொறுத்தவரை அவள் வீட்டிலிருந்து கொண்டே சகல உரிமைகளையும் அனுபவிப்பதற்கு வழிகாட்டப்பட்டிருக்கிறாள். வறுமை மற்றும் தேவை அல்லது மேலதிக வருமானம் கருதி அவள் தொழிலைத் தேடிக்கொள்ள விரும்பினால் அதற்கு தடையேதும் இல்லை. தங்களது மார்க்க கொள்கை ஒழுக்கவியல் மற்றும் கற்பையும் பேணிக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ள முடியுமான சூழல் இருக்குமானால் தொழிலுக்குச் செல்லலாம் என்ற அனுமதி அவளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

வாரிசுரிமைச் சட்டத்தின் இறுதிவசனத்தில் அல்லாஹ் கூறும் போது “உங்கள் சொத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பயன் தரக்கூடியவர்கள் யார்? என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறுவதன் விளக்கம் எவ்வளவு அற்புதமானது என்பதனை இங்கே சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

நாம் மேலே இலக்கமிட்டு வரிசைப்படுத்திக் காட்டிய வாரிசுரிமைச் சட்டத்தின் நான்காவது சட்டத்தினை மேலும் தெளிவுபடுத்தி இன்னுமொரு வசனமும் அருளப்பட்டது. இச் சட்டத்தில் ஒருவர் விட்டுச் செல்லும் சொத்துக்கு அதற்கு வாரிசுகளான தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் ஆகியோர் இல்லாமல் சகோதர சகோதரிகள் மட்டும் இருந்தால் அவர்களிடையே எப்படி பங்கீடு செய்வது என்று பின்வருமாறு விளக்கப் பட்டது. (இச்சட்டத்திற்கு கலாலா எனப்படும்).

“நபியே! உம்மிடம் அவர்கள் “கலாலா”பற்றி மார்க்கத் தீர்ப்புக்கோருகின்றனர். கலாலா குறித்து அல்லாஹ் உங்க ளுக்குத் தீர்ப்பளிப்பான் எனக் கூறுவீராக.

பிள்ளை இல்லாத ஒருவன் தனக்கு ஒரு சகோதரி இருக்கும் நிலையில் மரணித்தால் அவன் விட்டுச் சென்றவற்றில் அரைவாசி அவளுக்குண்டு. (ஒரு பெண் மரணித்து) அவளுக்குப் பிள்ளை இல்லாமல் இருந்தால் (சகோதரனான) அவன் அவளுக்கு வாரிசாவான்.

அவர்கள் இரு பெண்களாக இருந்தால் அவன் விட்டுச் சென்றதில்
மூன்றில் இருபங்கு (2ஷ3)அவ்விருவருக்குமுண்டு. அவர்கள் ஆண்கள் பெண்கள் என் சகோதரர்களாக இருப்பின் அவர்களில் இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக் குண்டு;. நீங்கள் வழிதவறாது இருப்பதற்காக அல்லாஹ் இவ்வாறுஉங்களுக்குத் தெளிவுப்படுத்துகின்றான். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாவான். (அல்குர்ஆன் 4:176)

வாரிசுரிமை தொடர்பாக இறுதியாக இறங்கிய வசனம் இது என பராஉ(ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.(நூல்: புகாரி 4605)

வாரிசுரிமைச் சட்டத்தின் அனைத்து விளக்கங்களையும் அல்லாஹ் விளக்கிக் கூறி விட்டு இச் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். நிரந்தரமான நரகில் இருப்பார்கள் என எச்சரிக்கின்றான்.

“இவை அல்லாஹ் விதித்த வரம்புகள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் வழிப்பட்டு நடக்கிறாரோ அவரை சுவர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.

யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுகின்றானோ அவனை நரகத்தில் அவன் நுழைவிப்பான். அவன் அதில் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனையுண்டு (அல்குர்ஆன் 4:13-14)

சொத்துக்களை ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் அல்லது பெண்பிள்ளைகளுக்கு மட்டும் கொடுக்கமுடியாது. சகல பிள்ளைகளுக்கும் வாரிசுதாரர்களுக்கும் உரிய முறையில் பங்குவைத்தாக வேண்டும். மாறு செய்பவர்கள் குற்றத்திற்குரியவர்களாகிவிடுவர்.

இறந்தவர் விட்டுச் செல்லும் சொத்தை பங்கு வைக்கமுன் அவருடைய கடனையும் மரணசாசனத்தையும் முதலில் நிறை வேற்றவேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனையாகும். பெற்றோர் தங்களது பிள்ளைகள் மீது அன்புகாட்டுவதை விட அல்லாஹ் தன்படைப்புக்கள் மீது அதிக அன்புள்ளவனாக உள்ளான் என்ப தை இச்சட்டங்கள் காட்டவில்லையா?

பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்த இஸ்லாம் ஆண்களை விடக் குறைவாக கொடுத்தது ஏன்? என்ற சந்தேகம் எழுவது இயற்கையே அதனைநிவர்த்தி செய்வது நல்லது என நிகைக்கிறேன்.

பொருளீட்டுவதானது ஆண்கள் மீது இஸ்லாம் சுமத்தியுள்ள கடமையாகும். பெண்கள் மீது அக்கடமை சுமத்தப்படவில்லை.

ஆண் சம்பாதித்து தன்னுடைய தாய் தந்தை சகோதர சகோதரிகள் மற்றும் மனைவி என்ற வட்டத்திற்குள் உள்ள அக்குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ளவனாக இருக்கிறான். அவனுடைய உழைப்பின் கீழேயே பெண் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறாள். அப்பெண்ணை மணம்முடித்து வைக்க வேண்டிய பொறுப்பும் செலவினங்களும் அவனையே சாரும். கணவனால் தலாக் சொல்லப்பட்டால் மீண்டும் அவளை பராமரிக்கும் பொறுப்பும் மணமுடித்;து வைக்கும் கடமையும் அவனை வந்தடைகிறது.

இவன் ஒரு பெண்ணை மணக்கும் போது அவளுக்குரிய மஹரை கொடுத்து வாழ்வதற்கான வசதிகளையும் செய்து கொடுத்து தன்னுடைய பிள்ளைகள் மற்றும் குடும்பத்தையும் பராமரிக்கக் கூடியவனாக இருக்கிறான்.மனைவி விவாகரத்தச் செய்யப்பட்டால் அப்போதும் அவளுக்கு ஏதேனும் வசதிகள் அல்லது உதவிகள் செய்திடவேண்டும்.

சொத்துப் பங்கீட்டின் போது தந்தை, சகோதரர்கள், பிள்ளைகள் போன்றோரிடமிருந்து இவளுக்குரிய பங்குகளை பெற்றுக் கொள்ளும் அதே வேளை மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக இருக்கும் நிலைகளிலும் அவளுக்குரிய பங்குகள் வந்து சேர்கின்றன. சொத்தில் தனக்குரிய பங்குகளை பெறும் அதே வேளை கணவராக வருபவரிடத்திலிருந்தும் மஹராகவும் ஒரு பகுதியை பெற்றுக் கொள்ளும் உரிமை படைத்தவளாக திகழ்கிறாள்.

வெளிப்படையாக பாரக்கும் போது பெண் குறைவாகவும் ஆண் அதிகமாகவும் பெறுவதாகவே தோன்றும். இஸ்லாம் கூறும் காரணங்களை கவனித்தால் பெண் அனைத்து உரிமைகளையும் அதிகமாக அனுபவிப்பதை காணலாம்.

பொருளீட்டுவதற்கான உரிமை ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டடுள்ளது போல் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மனைவியுடைய சம்பாத்தியத்தை அவளுடைய அனுமதியில்லாமல் கணவன் தொடமுடியாது. அவளாக கணவனுக்குக் கொடுத்தால் அது தர்மம் செய்த நன்மை சாரும் என இஸ்லாம் கூறுகிறது.

பெண்களே! நீங்கள் தர்மம் செய்யுங்கள். உங்களின் நகைகளாக இருப்பினும் சரியே! தர்மம் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதைக் கேட்ட நான் (என் கணவரான) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களிடம் வந்தேன். நீங்கள் வறுமையில் உள்ளீர்கள். நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி எங்களுக்கு ஏவினார்கள். எனவே, அவர்களிடம் நீங்கள் சென்று (என் தர்மத்தை நீங்கள்) பெறலாமா? எனக் கேட்டு வாருங்கள். அது சரியாக இருந்தால் என்னிடமிருந்து அதைக் கொடுப்பது போதுமாகும். இல்லையெனில் மற்றவருக்கு நான் அதைக் கொடுப்பேன் என்று கூறினேன். அப்போது அவர் நீ போய் கேட்டுவா என்று கூறினார்.

நான் நபி (ஸல்) அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். வீட்டு வாசலில் அன்ஸாரிப் பெண் ஒருவர் நினறு கொண்டிருந்தார். என் தேவையை போலவே அவர் தேவையும் இருந்தது. அப்போது எங்களிடம் பிலால் (ரழி) வந்தார்கள். நாங்கள் அவரிடம் நீங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இரு பெண்கள் வந்து தங்களிடம் உள்ள தர்மப் பொருளை தங்களின் கணவர்களுக்கோ, தங்கள் மடியில் வளரும் அனாதைகளுக்கோ கொடுக்க விரும்புவது கூடுமா? என்று உங்களிடம் கேட்பதற்காக வாசலில் நிற்கின்றோம் என்ற செய்தியை கூறுங்கள். நாங்கள் யார் என்ற விபரத்தை அவர்களிடம் கூறாதீர்கள் என்று கூறினோம்.

பிலால் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டார்கள். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரும் யார்? என்று கேட்டார்கள். “ஒருவர் அன்ஸாரிப் பெண் மற்றவர் ஸைனப் என்று பிலால் (ரழி) கூறினார்கள். எந்த ஸைனப் என்று நபி (ஸல்) கேட்க, அப்துல்லாஹ்வின் மனைவி என பிலால் (ரழி) கூறினார்கள். அப்போது நபியவர்கள், “உறவினரை ஆதரித்தல்,தர்மம் செய்தல் என இரண்டு வகைக் கூலிகள் அந்த இரண்டு பெண்களுக்கும் உண்டு” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைனப் அத்தகபீ (ரழி), (நூல்:புகாரி-1466, முஸ்லிம்-1000)

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் உருவாக்கி வளர்த்து விட்ட பெண் சமூகத்தின் சுதந்திரத்தை பாருங்கள். சட்டரீயாக சொத்துப் பங்கீட்டின் ஒழுங்குகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்ட பிறகும் அவள் சம்பாதிக்கும் உழைப்பில் இருந்து கணவனுக்கு கொடுக்க வேணடிய கட்டாயம் இல்லை. அவளாக விரும்பி கொடுத்தால் தர்மத்துடைய நன்மை கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

பெண்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களை வாழ வைத்த மார்க்கம் எது என்பதை இப்போதாவது உங்கள் மனசாட்சி பிரகாரம் கூறுங்கள்.