Tuesday 14 August 2012

ஆதி மனிதன் ஆசியாவிலேயே தோன்றினான்-புதிய கண்டுபிடிப்பு



ஆதி மனிதன் ஆசியாவிலேயே தோன்றினான்-புதிய கண்டுபிடிப்பு

ஆதி மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றவில்லை .ஆசியாவில்தான் தோன்றினான். என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. லிபியாவின் சகாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதனின் உடல் அமைப்பை போன்ற எலும்பு கூட்டை புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டெடுத்தனர்.


அது சுமார் 3 கோடியே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என கணித்த அவர்கள் ஆதிமனிதன் ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றியதாக அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது மியான்மரில் புதிதாக 4 மனித பற்கள் கண்டெடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அது ஆதிகால மனிதனின் பல் என உறுதி செய்யப்பட்டது. இது குறித்து 6 வருடங்கள் நடத்திய ஆய்வுக்கு பிறகு மனிதன் ஆசியா கண்டத்தில் தான் முதன்முதலில் தோன்றினான் என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


'அப்ராசியா டிஜிடே' என பெயரிடப்பட்ட புதைபடிவம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டத்தின் மனித உடல் உறுப்புகளுடன் தொடர் புடையதாக உள்ளது. எனவே, ஆசியாவில் தோன்றிய மனிதன் இடம் பெயர்ந்து ஆப்பிரிக்காவில் குடியேறி இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.


இந்த தகவல் 'நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ்' நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


No comments: