Wednesday 29 August 2012

தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !!!




பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.நான் இவைகளை எடுத்துக்

கொள்ள மாட்டேன் என்று பெருமையாக சொல்வார்கள்.!!!சிலருக்கு தயிர்

இல்லாமல் ஏதுமில்லை.(நானும் இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும்

தயிர் என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு) தயிர் நம் உடலுக்கு ஒரு அரு

மருந்து.குளிர்ச்சியைத் தரும்.நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.பால்

சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து32%பால்தான் ஜீரணமாகியிருக்கும்.


ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்


பட்டிருக்கும்.

பாலில் LACTO இருக்கிறது.தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண

சக்தியை தூண்டிவயிற்றின்   உபாதைகளை சரி செய்கிறது.வயிறு சரியில்லாத

பொழுது வெறும் தயிர் சோறுமட்டுமாவது உணவாக உட்கொள்ளச

சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண

 சக்தியைகுறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர் அப்படி அல்ல.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுதுவெந்தயம் + தயிர் 1 கப்

சாப்பிட்டால் வயிற்றுபொருமல்

அடங்கும்.பாலைதிரித்து உருவாக்க படுவதுதான் பனீர் (பனீரைதனியாக எடுத்த

பிறகு இருக்கும்whey புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை நிறுத்த



உதவுவதாகவும் இருக்கிறது.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது

வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா

சாப்பிடுகிறோம்.மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்குதயிர்

மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர்

வழங்குகிறது.தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச்

சத்துகளும்அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற

வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.தயிரில் உள்ள புரோட்டீன்,

 பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை

 உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில்

செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும்

நன்மைகள் சில

1பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண



சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம்


 நன்றாக வரும்.

3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும்


தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு 


உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் 

பழ‌‌ச்சாறு‌க்குஇணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.



4.மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த

 மருந்து.

5. அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர்,



மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப் படும்.மஞ்சள் 

காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து 

உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.


6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் 


எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

7.சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை பா‌தி‌த்த இட‌த்‌தில் 

க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு 

அருமையான மருந்தாகச் செயல்படுகிறது தயிர் சோறு உண்ண 

 பிடிக்காதவர்களும் தயிரை உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக் 

கொள்ளலாம்.


1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி  உண்ணலாம்.

2. பனீர்கட்டிகள்  உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.(அதிகம் வேண்டாம்,

 கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)

3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை,பெருங்காயம் சேர்த்து 

நீர் மோராக்கி குடிக்கலாம்.



No comments: