Tuesday 18 March 2014

CAT STEVEN என்ற சகோதரர்,இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.











I did not come into contact with any Muslim before I embraced Islam. I read the Qur'an first and realized no person is perfect, Islam is perfect, and if we imitate the conduct of the Holy Prophet Muhammad saw (Peace Be Upon Him) we will be successful.

Yusuf Islam

யூசுப் இஸ்லாம் (கேட் ஸ்டீவன்ஸ்)

''நான் ஜெரூ­ஸ­லத்­துக்குப் போக வேண்டும். முஸ்லிம் சகோ­த­ரர்­களைச் சந்­திக்க வேண்டும் என்ற உணர்வு என்னுள் வளர்ந்­தது. புனித குர்ஆன் மொழி பெயர்ப்புப் பிர­தியை நான் வாசித்து விளங்­கிய பின்பே இந்த உந்­துதல் எனக்குள் ஏற்­பட்­டது.

நான் ஜெரூ­ஸ­லத்­துக்குப் பய­ண­மானேன். அங்­கே­யுள்ள பள்­ளி­வாசல் என்னைக் கவர்ந்­தது. பாத­ணி­களைக் கழற்றி விட்டு உள்ளே நுழைந்தேன். பள்­ளி­வா­ச­லினுள் ஓர் ஓர­மாக அமர்ந்து கொண்டேன்.

நீங்கள் யார்? ஏன் இங்கு வந்­தீர்கள்? உங்­க­ளுக்கு என்ன வேண்டும்? என்று அங்­கி­ருந்த ஒருவர் கேள்­வி­களை ஒன்றன் பின் ஒன்­றாகத் தொடர்ந்தார்.
நான் அமை­தி­யாகப் பதி­ல­ளித்தேன். பள்­ளி­வா­சலின் அமைதி, புனிதம் என்­பன என்னை முழு­மை­யாக உள்­வாங்­கி­யி­ருந்­தது.

‘நான் ஒரு முஸ்லிம்’ என்று பதி­ல­ளித்தேன். எனது பதிலில் எனக்கு மிகுந்த மன நிறைவும் திருப்­தியும் இருந்­தது. அந்த சகோ­தரர் எனது பதிலில் திருப்­தி­ய­டை­ய­வில்லை.
உங்­க­ளது பெயர் என்ன? என்று வின­வினார்.

எனது பெயர் ‘ஸ்டீவன்ஸ்’ என்றேன். எனது பதி­லினால் அச்­ச­கோ­தரர் அதிர்ச்­சிக்­குள்­ளாகி விட்டார். அப்­பள்­ளி­வா­சலில் நான் தொழு­கையில் ஈடு­பட்டேன். ஆனால் அது ஒழுங்கு முறை­யி­லான தொழு­கை­யாக அமை­ய­வில்லை.

எனது ஜெரூ­ஸ­லத்துப் பய­ணத்தை முடித்துக் கொண்டு புதிய அனு­ப­வங்­க­ளுடன் இலண்­ட­னுக்குத் திரும்­பினேன் லண்­டனில் ஒரு முஸ்லிம் சகோ­த­ரியைச் சந்­தித்தேன் அவ­ரது பெயர் நபீஸா.

புனித குர்­ஆனை வாசித்­ததில் இருந்து எனக்குள் புதுத்­தெம்பு பிறந்­தி­ருந்­தது. குர்ஆன் போதிக்கும் வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடித்­தி­ருந்­தது. நான் இஸ்­லாத்தைத் தழுவ வேண்டும் என்று அந்தச் சகோ­த­ரி­யிடம் தெரி­வித்தேன். அவர் என்னை லண்டன் புதிய ரீஜன்ட் பள்­ளி­வா­ச­லுக்கு அனுப்பி வைத்தார். இச்­சம்­பவம் 1977ஆம் ஆண்டு நடந்­தது. நான் புனித குர்ஆன் மொழி பெயர்ப்புப் பிர­தி­யொன்­றினைப் பெற்று ஒன்­றரை வரு­டங்­களின் பின்பே இச்­சம்­பவம் நிகழ்ந்­தது.''

இந்த அனு­ப­வத்­திற்கு சொந்­தக்­காரர் வேறு யாரு­மல்ல. உலகப் பிர­சித்தி பெற்ற ஐக்­கிய இராச்­சி­யத்தைச் சேர்ந்த பொப் இசை நட்­சத்­திரம் கேட் ஸ்டீவன்ஸே அவர். இவர் கிறிஸ்­துவ மதத்­தி­லி­ருந்து புனித இஸ்­லாத்தைத் தழுவி தனது பெயரை யூசுப் இஸ்லாம் என்று மாற்றிக் கொண்­டவர்.

1948 இல் லண்­டனில் பிறந்த யூசுப் இஸ்லாம் (கேட் ஸ்டீவன்ஸ்) தனது ஆரம்ப கால வாழ்க்கை அனு­ப­வங்­களை இவ்­வாறு பகிர்ந்து கொள்­கிறார்.

''நான் கிறிஸ்­தவ குடும்­பத்தில் பிறந்­தவன். ஒவ்­வொரு குழந்­தையும் தனது பெற்­றோர்­களின் மதத்­துக்கு உரி­ய­வ­ராகி விடு­கி­றார்கள். நான் கிறிஸ்­த­வ­னாக வளர்க்­கப்­பட்டேன். எனது சம­யத்தின் மீது சில சந்­தே­கங்கள் எதிர்க்­க­ருத்­துகள் எழுந்­தன. என்­றாலும் எனது பெற்­றோ­ரிடம் இவை பற்றி தெரி­விப்­ப­தற்குப் பயந்தேன்.

நான் தொழி­லாக இசைத்­து­றையைத் தேர்ந்­தெ­டுத்தேன். ஒரு பிர­பல பாட­க­ரா­வ­தற்கு ஆசைப்­பட்டேன். பணம் உழைப்­பதே எனது குறிக்­கோ­ளாக இருந்­தது. இதுவே உல­கமாய் இதுவே வாழ்க்­கை­யாக இருக்க வேண்­டு­மென எண்­ணினேன்.

அது எனது இள­வ­யது. பொப் பாடலில் மிகவும் பிர­பல்­ய­மானேன். எனது பெயரும் போட்­டோக்­களும் ஊட­கங்­களில் வெளிவந்­தன. சுக­போக வாழ்க்கை வாழ விரும்­பினேன். மதுவும், போதைப் பொருட்­களும் எனது சுக­போக வாழ்க்­கையில் புகுந்து விளை­யா­டின.

ஒரு வருட காலம் நான் ஆடம்­பர டாம்­பீக வாழ்க்­கையில் மூழ்­கி­யி­ருந்தேன். இந்தக் கால கட்­டத்தில் தான் நான் சோத­னை­க­ளுக்­குள்­ளானேன். காச நோய் என்னைத் தொற்றிக் கொண்­டது. வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டேன். வைத்­தி­ய­சா­லையில் எனது நிலைமை­கள் நிறைய என்னைச் சிந்­திக்கத் தூண்­டின. நோயும், துக்­கமும், துய­ரங்­களும் எனது தவ­றான வாழ்க்­கைக்கு கடவுள் தந்த தண்­ட­னை­க­ளாகக் கரு­தி­னேன்.

ஏன் நான் வைத்­தி­ய­சாலை கட்­டிலில் இருக்க வேண்டும்? என்ற கேள்­விக்கு விடை காண முயன்றேன். அப்­போது கீழைத்­தேய நாடு­களின் சம­யங்கள் பற்றி சிந்­தித்தேன். தியா­னத்­தினால் உண்­மை­யையும், கட­வு­ளையும் காணலாம் என்­பதில் எனக்கு நாட்டம் ஏற்­பட்­டது. இது தொடர்­பான புத்­த­கங்­களை வாசிக்க ஆரம்­பித்தேன். அதன்­படி நான் சைவ உணவு உண்­ப­வ­னாக மாறிக் கொண்டேன். இந்த மாற்­றங்கள் நான் வைத்­தி­ய­சா­லையில் இருந்த காலத்­தினுள் நிகழ்ந்­தன.

எனது மாற்­றங்­க­ளுக்­குள்­ளான கருத்­துக்கள் அடங்­கிய பாடல்­களை இயற்ற ஆரம்­பித்தேன். ‘கட­வுளை கண்­ட­றியும் வழி’ எனும் பாட­லொன்றை எழு­தினேன். இதனால் நான் இசைத்­து­றையில் மேலும் பிர­பல்­ய­மானேன். நான் செல்­வந்­த­னா­கவும் பிர­பல்­ய­மா­ன­வ­னா­கவும் மாறிய போது பல சவால்­க­ளையும் கஷ்­டங்­க­ளையும் எதிர்­நோக்க நேர்ந்­தது. இந்த கஷ்­டங்­க­ளுக்கும் சவால்­க­ளுக்கும் காரணம் என்ன என்று தேடிக்­கண்டுபிடிக்க முயற்­சித்தேன்.

இச்­சந்­தர்ப்­பத்தில் நான் ஒரு நிலைக்கு வந்தேன். பெளத்த மதமே சரி­யா­னது. சமா­தா­னத்­தையும், நிம்­ம­தி­யான வாழ்க்­கை­யையும் தரக் கூடி­யது என்ற தீர்­மா­னத்­திற்கு வந்தேன். ஆனால் நான் வாழ்ந்து கொண்­டி­ருக்கும் உல­கத்தை விட்டும் விலக விரும்­ப­வில்லை. எனது சமூ­கத்­தி­லி­ருந்தும் விடு­பட்டு ஒரு துற­வி­யாக விரும்­ப­வில்லை.

இந்தச் சந்­தர்ப்­பத்தில் எனக்கு இஸ்­லாத்தைப் பற்றி எதுவும் தெரிந்­தி­ருக்­க­வில்லை. அப்­போது தான் அந்த அதி­சய சம்­பவம் நிகழ்ந்­தது. ஜெரூ­ஸ­லத்­தி­லி­ருந்த பள்­ளி­வாசல் ஒன்­றுக்கு விஜயம் செய்த எனது சகோ­தரர் அங்­கி­ருந்து குர்ஆன் மொழி பெயர்ப்பு பிர­தி­யொன்­றினைக் கொண்டு வந்து என்­னிடம் கைய­ளித்தார்.

ஜெரூ­சலம் பள்­ளி­வாசல் தேவா­ல­யங்­களைப் போல் வெறிச்­சோ­டி­யில்­லாது சுறு­சு­றுப்­பாக இருந்­த­தாக என்­னிடம் கூறினார். அவர் இஸ்­லாத்­துக்கு மதம் மாற­வில்லை. ஆனால் இஸ்லாமிய சம­யத்­தினால் கவ­ரப்­பட்­டி­ருந்தார்.

குர்­ஆனை வாசித்தபோதுதான் எனக்கு சரி­யான வழி­காட்டல் கிடைத்­தது. நான் யார்? நான் எந்த நோக்­கத்­திற்­காக வாழ வேண்டும்? நான் எங்­கி­ருந்து வந்­துள்ளேன்? இவை பற்­றி­யெல்லாம் நான் தெளி­வாக விளங்கிக் கொண்டேன். அனைத்தும் இறை­வனின் செயல் அனைத்­தையும் உரு­வாக்­கி­யவன் அவனே என்­பதை நான் உணர்ந்தேன். நான் நல்ல மனி­த­னாக மாற்றம் பெறு­வ­தற்­கான அனைத்தும் இஸ்­லாத்தில் அடங்­கி­யி­ருந்­தது. இந்­நி­லையில் நான் இஸ்­லாத்தில் நம்­பிக்கை கொண்டேன். முஸ்­லி­மாக மாறினேன்.

புனித குர்­ஆனை முழு­மை­யாக வாசித்து இஸ்­லாத்தைப் புரிந்து கொண்­ட­துடன் 1977இல் ஜெரூ­சலம் பள்­ளி­வா­ச­லுக்குள் சென்று பெற்ற அனு­ப­வங்­களும் என்னை இஸ்­லா­மி­ய­னாக்­கின. ஒரு வெள்­ளிக்­கி­ழமை தொழு­கையின் பின்பு இமா­மிடம் சென்று இஸ்லாத்தின் மீதான எனது நம்பிக்கையை அவரது கரங்களுடன் எனது கரங்களை இணைத்து வெளியிட்டேன். ஏனைய மதங்களில் போலன்றி இஸ்லாத்தின் சமய வணக்கங்கள் மூலம் நேரடியாக அல்லாஹ்வை தொடர்பு கொள்ள முடிகிறது. எனது தேவைகளை முன்னெடுக்க முடிகிறது.


இறுதியாக நான் சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன். நான் அல்லாஹ்வை மகிழ்விப்பதற்காகவே அனைத்தையும் செய்கிறேன். இஸ்லாம் மார்க்கத்துக்கு நிகரானது எதுவும் இல்லை. நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பின்பற்றினால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம். அல்லாஹ் நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பின்பற்ற எமக்கு அருள் புரிவனாக ஆமீன்.



No comments: