Friday 30 May 2014

யார் இந்த மல்கம் எக்ஸ் ?


இஸ்லாமிய கொள்கையை ஏற்று அதை முன் வைத்து அமெரிக்காவில,கறுப்பு நிறத்தவர்களின் உரிமைகளுக்காக போராடியஇஸ்லாமிய சாத்வீ க போராளி.

கறுப்பு நிறத்தவர்களை தீண்டத் தகாதவர்களாக கருதும் வெள்ளை மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்த்து போராடிய போராளி மால்கம்X. 

Malcolm X- கொலை செய்யபலமுறை FBI முயற்சிச் செய்தது.இறுதியாக 1965 ஆம்

ஆண்டு தனது புரட்சி கரமான இஸ்லாமிய உரை ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருக்கும் பொழுது மால்கம் Xஒருவனால் சுட்டு கொல்லபட்டார்.சுட்டு கொன்றவன் தோமஸ் ஹாகன்.இவன் அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானான்.ஆனாலும் மால்கம் Xஸின் கொலைக்கு பின்னால் யார் என்றகேள்விக்கு விடை இன்னும் கிடைக்கவில்லை .அமெரிக்காவில் மோசமான குடும்பத்தில் பிறந்தார் மால்கம் X .இவரின் ஆரம்ப வாலிபம் வன்முறைகள் நிறைந்ததாக இருந்தது.தந்தை கொல்லப்பட்டார். தாய் மனநிலை பாதிக்கப்பட்டார்.கல்வி நின்று போனது. போதைப்போதை பொருட்களுக்கு அடிமையானார் சிறை சென்றார் சிறையில் இஸ்லாத்தை விளங்கும் வாய்ப்பு கிட்டியது மிக தீவிரமாக கற்றார் இஸ்லாமிய கொள்கையை ஏற்றுகொண்டார் விரிவாக பார்க்க அதன் அடிப்டையில் தனது வாழ்கையை அமைத்து கொண்ட இவர் நிறவெறியையும் , கருப்பு இனம் மீதான அடக்கு முறைகளையும் ,உரிமை மறுப்புகளையும் இஸ்லாத்தை அடிப்டையாக கொண்டு எதிர்த்தார் அமெரிக்காவின் கருப்பு இனம் முழுவதும் இவரின் பின்னால் சென்று விடுமோ என்றஅச்சம் ஏற்படும் அளவுக்கு மக்கள் இவர் பின்னால் திரண்டனர் FBIகுறிவைத்து கொலை செய்யதுவிட  துடித்து இறுதியில் கொலை செய்யப்பட்டார் அமெரிக்க இஸ்லாமிய எழுச்சியின் அத்திவாரம் தகர்க்கப்பட்டதாக கருதியது

No comments: