Friday 25 May 2018



AR. ரஹ்மானிடம் அமெரிக்காவில் கேட்கப்பட்ட ஓரு கேள்வி !

உங்கள் நாட்டில் யார்ஆட்சி அமைத்தால் நலமாக இருக்கும் என விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டபோது
A.R ரஹ்மான் கூறிய பதில்:-

இந்தியாவில் யார் ஆட்சி சிறப்பானது என்று நான் கூறுவதை விட பண்டைய சவூதி அரேபியாவில் கலிபா உமர்(ரலி)அவர்களின் ஆட்சி போல் இருந்தால் நலமாக இருக்கும் என விரும்புகிறேன் ! !

சுதந்திரத்தை எழுதிக்கொடுத்த பின் ஆங்கி லேய அதிகாரி சுதந்திர இந்தியாவின் ஆட்சி எவ்வாறு இருக்க ஆசைபடுகிறீர்கள் எனக் கேட்ட போது,

காந்தி அவர்கள் உடனே அழித்த பதில் : -

அரேபி தேசத்தில் ஆட்சி செய்த ஜனாதிபதி உமர் (ரலி)என்பவரின் ஆட்சி போல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

கெஜிர்வால் டெல்லியை வெற்றி பெற்ற கையுடன் அவரிடம் நீங்கள் எவ்வாறு ஆட்சி அமைக்க விரும்புகிறீர்கள் என்று கேட்ட போது,

கெஜிர்வால் அழித்த பதில் : -
உமர் அவர்களுடைய ஆட்சியை போல் செயல்பட விரும்புகிறேன்.

இதை படித்தவுடன் உங்களில் எழும் கேள்வி யார் அந்த உமர் (ரலி)

உமர் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஓரு சம்பவத்தை இங்கு சொல்கின்றேன் ,

அதன் பின் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் பாலஸ்தீன்  யூதர்களிடம் இருந்து வெற்றி பெற்று மீண்டும் இஸ்லாமியர் கைவசம் வந்து விட்டது உமர்(ரலி) ஜனாதிபதியாக ஆனார். தான் செல்லாமல் தன் படைவீரர்களை வைத்து மீட்டார், அப்பொழுதைய பாலஸ்தீன வாசிகள் தங்களின் ஆட்சியாளர் உமர் (ரலி)அவர்களின் முகத்தை பார்க்க ஆசைப் பட்டு ஆர்வத்தில் கிளர்ச்சி செய்தனர்.

இதையறிந்த உமர் அவர்கள் தனக்கு துணையாக ஆட்சியின் பணியாளர் ஓருவரை அழைத்து கொண்டு பாலஸ்தீனம் புறப்பட்டு சென்றார்.

சவுதி அரேபியா தேசத்தில் இருந்து தற்போதைய இஸ்ரேலுக்கு ஒரு ஒட்டகத்தில் உமர்(ரலி) அவர்களும் அவரின் வேலையாளில் ஓருவரையும் அழைத்து சென்றார் என்றால் எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் ?

உமர்(ரலி) அவர்கள் செல்லும் வழியில் தன் பணியாளிடம் ஓரு குறிப்பிட்ட அளவை சொல்லி அதாவது இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு ஓட்டகத்தில் நான் அமர்வேன்,
பின் நீ இரண்டு கிலோமீட்டர் நீ அமர்ந்து வா என்று ஓப்பந்தம் செய்து கொண்டார்கள்.

உமர்(ரலி) அவர்களே ஒட்டகத்தில் முழுவதுமாக அமர்ந்து வந்தாலும் யாரும் கேட்கமுடியாது
இருந்தும் சம உரிமையைப் பேணினார்.
அவ்வாறே மாறி மாறி சுழற்சி முறையில் பயணித்து பாலஸ்தீன எல்லையை நெருங்கி விட்டார்கள்.

பாலஸ்தீன எல்லைக்குள் மக்கள் இரு வழி யிலும் பெருங்கூட்டமாக காத்து நின்றார் கள்
அவர்களை முஸ்லிம் தளபதி ஓருவர் கட்டு படுத்தி உமர்(ரலி)அவர்களின் வரவை எதிர் நோக்கியிருந்தார்
உமர்(ரலி) அவர்கள் பாலஸ்தீன எல்லைக் குள் நுழையும் நிலையில் உமர்(ரலி) அவர்களின் ஓட்டகத்தில் அமரும் தூரம் முடிந்து விட்டது,உமர்(ரலி) அவர்கள் ஒட்டகத்தை பணியாளிடம் தந்தார்.

பணியாளோ தற்போது எல்லைக்குள் நுழைய இருக்கிறோம் நீங்கள் தொடர்ந்து அமருங்கள் எனக் கூறினார்.

மேலும் மக்கள் காணும் போது நீங்கள் ஓட்டகத்தில் அமர்வதே சரியென்றார்.

ஆனால் உமர்(ரலி) அவர்களோ நான் இங்கு ஓட்டகத்தில் மன்னனாக அமர்வதை விட
நான் ஓப்பந்தத்தை மீறாத அடியானாக இறைவன் முன் நிற்க ஆசைப்படுகின்றேன்.
அதனால் மிகவும் களைப்பாக இருக்கும் நீ அமர்ந்துகொள் என்று பணியாள் அமர்ந்தி ருக்க ஓட்டகத்தை பிடித்து கொண்டு பாலஸ் தீனத்தில் புகுந்தார்கள்.

மக்கள் அனைவரும் பணி யாளரை மன்னரென நினைத்து ஓட்டகத்தில் இருப்பவரை பார்த்து மகிழ்ச்சி கொணடார்கள்.

மக்கள் பணியாளரே மன்னன் என நினைக்க மற்றொரு காரணம், பணியாளின் சட்டையில் மூன்று கிளிஞ்சல்கள் ஒட்டகத்தை பிடித்து வந்த உமரின் ஆடையிலோ 16 கிளிஞ்சல்கள்,

அங்கே இருந்த மக்கள் யாரும் இதற்கு முன் உமர் அவர்களை பாத்ததில்லை என்பதால் பணியாளை மன்னனாக உறுதியாக்கி பார்த்தார்கள்.

அங்கே முஸ்ஸீம் தளபதி காலித் பின் வாலித் அவர்கள் ஒட்டகத்தில் பணியாள் அமர்ந்து உமர் நடந்து வருவதை கண்டதும் தன் உடைவாளை உருவிக் கொண்டு பணியாளை வெட்டு வதற்காக விரைந்து வந்தார்.

அதை கண்ட உமர் காலித் அவர்களை தடுத்து நீங்கள் வரம்பு மீற வேண்டாம்.

மேலும் ஒப்பந்தபடியே அவர் அமர்ந்து வரு  றார் எனக் கூறினார்.

அப்போது அங்கிருந்த மக்கள் உமர்(ரலி) அவர்களின் நேர்மை, தன்னடக்கம் அனைத்தையும் கண்டு இப்படி ஓருவர் ஆட்சியில் தாங்கள் குடிமக்கள் என்பதை நினைத்து பெருமைப்படுகிறோம் என்றனர்.

தற்போதைய உலகத்தில் காரின் கதவை விரைவாக திறந்து விடவில்லை என்பதற்காக எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.என்பதை நாம் நாளாந்தம் கேள்விப் படுகிறோம்.

தான் ஓரு ஜனாதிபதி என்பதை நினைத்து கர்வம் கொள்ளாதவர் உமர்(ரலி) அவர்கள்.

No comments: