Thursday 29 August 2019

அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்து பெண்மணியின் இஸ்லாமிய நேசம்



'நான் சிறு வயதாக இருக்கும்போதே எனக்கு முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் மிக தவறாக எ  கற்பிக்கப்பட்டது.தீவிரவாதிகள், தேச துரோகிகள் என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டேன். பெரியவளாகி வளர்ந்தவுடன் அக்கம் பக்கத்தில் உள்ள முஸ்லிம்கள் நான் கேள்விப்பட்டதற்கு மாற்றமாக மிக சாந்தமாக பழகுவதற்கு மிக இனிமையாக நேர்மையாகவும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அன்று முதல் இஸ்லாத்தை பற்றி தெளிவு கிடைக்க வேண்டும் என்ற தேடல் என் மனதுள் எழுந்தது. இணையத்தின் மூலமாக இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்தேன். நாள் ஆக ஆக இஸ்லாம் என்னை ஈர்த்தது. கடைசியாக குர்ஆனை கையில் எடுத்தபோது எனக்குள் எழுந்த உணர்வை சொல்ல வார்த்தைகள் இல்லை. இன்று நான் ஒரு இஸ்லாமிய பெண்ணாக உங்கள் முன் அமர்ந்துள்ளேன்.'

No comments: