Monday, 26 November 2018

அகீகா (குழந்தை தர்மம் )

                               

                          “அகீகா” இது குழந்தை கிடைத்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தருணம், ஆடறுத்து இறைச்சியை விநியோகித்தோ விருந்து சமைத்துக் கொடுத்தோ கொண்டாட இஸ்லாம் காட்டிய சிறந்த வணக்கம்.

இதை எப்படி கொடுக்க வேண்டும்?
யாருக்கு கொடுக்க வேண்டும்?
எப்போது கொடுக்க வேண்டும்?
எதை கொடுக்க வேண்டும்?
என்பன போன்ற சந்தேங்கள் பலருக்கு உண்டு அதை எனது இப்பதிவு தீர்த்து வைக்கும் என நம்புகின்றேன்.

ஒருவருக்கு ஆண் குழந்தை கிடைத்துவிட்டால் அதற்காக இரண்டு ஆடுகளும் பெண் குழந்தை பிறந்துவிட்டால் ஒரு ஆட்டையும் அறுத்தும் விருந்தாகவோ அல்லது இறைச்சியாகவோ கொடுப்பதே அகீகாவாகும்.

இதை தங்களது சொந்தங்கள்/ அயலவர்கள்/ நண்பர்கள் / ஏழை எளியோர் என்று நாம் விரும்பும் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். கொடுப்பவர்களும் உண்ணலாம் அதில் தடை இல்லை.

ஆட்டுக் கடாய்தான்  கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. பெட்டை ஆடும் கொடுக்கலாம். ஆனால் குட்டி இருந்து பால் கொடுக்கும் நிலையில் உள்ள பெட்டை ஆட்டை தவிர்த்தல் வேண்டும்.

அவ்வாறே எந்த வயதுடைய ஆட்டை கொடுக்க வேண்டும் என்ற வரையறை இல்லை. பொதுவாக சமைத்துண்ண நாம் எவ்வாறான, எந்த வயதுடைய ஆட்டை விரும்புவோமோ அதை அளவு கோலாக கொண்டால் போதுமானது.

எங்களது குடும்பம் பெரிதாக இருக்கிறது ஆடு கொடுத்து போதாது பகரமாக மாடு கொடுக்க முடியாதா? என்ற கேள்வியும் சிலருக்கு உண்டு.

நிச்சயமாக ஆடுதான் கொடுக்க வேண்டும். ஆடு என்பது அனைத்து சூழலிலும் பிரதேசங்களிலும் வாழக்கூடிய, கிடைக்கக் கூடிய ஒரு பிராணி என்பதாலோ என்னவோ இஸ்லாம் அகீகா விடயத்தில் ஆட்டை மட்டும் குறிப்பிட்டுள்ளது.

இது குழந்தை பிறந்து ஏழாம் நாளே கொடுக்க வேண்டும்.  மாறாக ஏழு நாட்களுக்குள் என்றோ அல்லது ஏழு நாட்கள் முடிந்த பின்னர் என்றோ தவறாக புரிந்து கொள்ளக் கூடாது.

ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுக்கு பொறுப்பாக்கப் பட்டுள்ளது.குழந்தையின் சார்பில் ஏழாம் நாளில் ஆட்டை அறுக்க வேண்டும். அன்று முடியை மழித்து பெயர் சூட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,.
அறிவிப்பவர் : சமுரா (ரலி)
நூல்கள் : அபூதாவூத், திர்மிதி, நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்

இதை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் இல்லை வசதி இல்லாதவர்கள் கடன் பட்டு கஸ்ட்டப்பட்டு கொடுப்பது அவசியமில்லை.

இறைவா எனக்கு நீ வசதியைத் தந்திருந்தால் அகீகா கொடுத்து இருப்பேன் என்று உளமாற நினைக்கும் போது அந்த எண்ணத்துக்காக அகீகா கொடுத்த கூலியைக் கொடுக்கும் அளவுக்கு அல்லாஹ் கருணையாளன் என்பதை மனதில் கொள்ளவேண்டும்        நன்றி; ஹாறூன் ஸஹ்வி       ********************************


بسم الله الرحمن الرحيم
ஒரு குழந்தை பிறந்து ஏழாவது நாளில் கொடுக்கப்பட வேண்டிய ஒரு விடயமே அகீகாவாகும். இந்த அகீகா குறித்து பலர் அதிகமான விடயங்களை அறியாதவர்களாக இருக்கின்றார்கள். அகீகாவுடைய விடயத்தில் அதிகமானவர்களுக்கு சந்தேகம் எழக்கூடியது பின்வரும் மூன்று விடயங்களிலேயாகும்.
1.அகீகா கொடுக்காதவர் தனது பெரிய வயதில் அதை நிறைவேற்ற வேண்டுமா?
2.ஏழாவது நாளுக்கு முன் குழந்தை மரணித்தால் அக்குழந்தைக்கு அகீகா  கொடுக்கப்பட வேண்டுமா?
3.ஆடு அல்லாத வேறு கால்நடைகளைக்கொண்டு அகீகாவை நிறைவேற்ற முடியுமா?
ஆகவே, இம்மூன்று வினாக்களுக்குமான தெளிவை இங்கு நாம் உங்களுக்கு சுருக்கமாகக் கூறுகின்றேன்.
முதல் வினா:
அகீகா கொடுக்காதவர் தனது பெரிய வயதில் அதை நிறைவேற்ற வேண்டுமா?
விடை:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது நுபுவ்வத்திற்குப் பின் தனக்காக அகீகா கொடுத்ததாக ஒரு ஹதீஸ் முஸன்னப் அப்திர்ரஸ்ஸாக் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றாலும் இந்த ஹதீஸில் அப்துல்லாஹ் இப்னு முஹர்ரர் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பொறுத்தவரையில் ஹதீஸ் கலை அறிஞர்களால் விடப்பட்டவர் என்ற தரத்தைப் பெற்றவராவார். ஆகவே, இவர் பலவீனமானவர் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
அத்தபரானீ அல்அவ்ஸத் என்ற நூலிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் இப்னுல் முஸன்னா என்பவர் இடம் பெறுகிறார். இவரும் பலவீனமானவர் என்ற காரணத்தால் இந்த ஹதீஸும் பலவீனமானதாகும்.
இமாம்களான அதாஃ, ஹஸன், இப்னு ஸீரீன் ஆகியவர்கள் பெரிய வயதில் அகீகா கொடுக்கலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்கள்.
இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அகீகா கொடுக்க முடியாது என்ற கருத்தைக் கூறியுள்ளார்கள். ஏனென்றால் அகீகா என்பது ஒரு தந்தை தனது மகனுக்கு நிறைவேற்ற வேண்டியதாகும் என்ற காரணத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகமான ஹனபி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் இக்கருத்தை முன்வைத்துள்ளார்கள். மேலும், இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் யார் இவ்வாறு அகீகா கொடுக்கிறாரோ அதனை நான் வெறுக்கமாட்டேன் என்றும் மேலும், மற்றோர் அறிவிப்பில் யார் இவ்வாறு செய்கிறாரோ அது சிறந்ததாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹிஸாம் அவர்கள் இவ்வாறு அகீகா கொடுப்பது விரும்பத்தக்கதல்ல. ஏனென்றால் இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என அவருடைய நூலான பத்ஹுல் அல்லாமில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பார்க்க: அல்முங்னீ 13:397, அத்துஹ்பா பக்கம்: 87, 88, அல்மஜ்மூஃ 8:431
இரண்டாவது வினா:
ஏழாவது நாளுக்கு முன் குழந்தை மரணித்தால் அக்குழந்தைக்கு அகீகா கொடுக்கப்பட வேண்டுமா?
விடை:
ஹன்பலீ மற்றும் ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் அகீகா கொடுக்க வேண்டும் எனக்கூறுகின்றார்கள். ஏனென்றால் ஒரு குழந்தை பிறப்பதன் மூலமே அகீகா நிறைவேற்றப்படுகின்றது என அவர்கள் கூறுகின்றார்கள். அகீகா குறித்து வரக்கூடிய பொதுவான ஹதீஸ்களை இவர்கள் ஆதாரமாக முன்வைக்கின்றார்கள்.
இமாம் மாலிக் மற்றும் ஹஸன் ஆகியோர் மரணித்த குழந்தைக்கு அகீகா கொடுப்பது விரும்பத்தக்கதல்ல எனக்கூறுகின்றனர். அக்குழந்தைக்கு ஏழாவது நாளில் அதை அறுக்கப்பட வேண்டும் என்ற திர்மிதியில் வரக்கூடிய ஸஹீஹான ஹதீஸை முன்வைத்து இவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள். குழந்தை மரணித்தால் அக்குழந்தைக்கு ஏழாவது நாள் உயிர் வாழக்கிடைப்பதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
சரியான கருத்து ஏழாவது நாளுக்கு முன் மரணித்தவர்களுக்கு அகீகா கொடுக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இக்கருத்தை அஷ்ஷெய்ஹ் பின் பாஸ் மற்றும் இப்னு உஸைமீன் ரஹிமஹுமல்லாஹ் அவர்கள் சரிகண்டுள்ளார்கள்.
மூன்றாவது வினா:
ஆடு அல்லாத வேறு கால்நடைகளைக் கொண்டு அகீகாவை நிறைவேற்ற முடியுமா?
விடை:
பெரும்பாலான அறிஞர்கள் ஆடு அல்லாத கால்நடைகள் அகீகாவுக்குச் செல்லுபடியாகும் என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள்.
ஏனென்றால் முஸன்னப் இப்னு அபீ ஷைபாவில் சரியான அறிவிப்பு வரிசையின்படி அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓர் ஒட்டகத்தை அகீகாவுக்காக அறுத்ததாக ஒரு செய்தி பதிவாகியுள்ளது.
இக்கருத்து ஹன்பலீ, ஷாபிஈ மற்றும் மாலிகீ ஆகிய மத்ஹப்களைச் சார்ந்தவர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒட்டகம் மற்றும் மாடு ஆகியன ஆட்டைவிட அதிக கூலியைப் பெற்றுத்தரும் என அவர்கள் கூறுகின்றார்கள். அகீகாப் பிராணியின் இரத்தத்தை ஓட்டுங்கள் என்ற பொதுவான ஹதீஸை முன்வைத்து அவர்கள் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.
இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் ஆட்டை மாத்திரமே அகீகாவாகக் கொடுக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள்.
ஹப்ஸா பின்த் அப்திர்ரஹ்மான் பின் அபீபக்ர் என்பவருக்கு நீங்கள் ஓர் ஒட்டகத்தை அகீகா கொடுக்க வேண்டாமா? எனக்கூறப்பட்டது. அதற்கு அவர்கள் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும், என்னுடைய மாமியான ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஆண் குழந்தைக்கு இரு ஆடுகளும் மற்றும் பெண் குழந்தைக்கு ஓர் ஆடும் என்றே கூறக்கூடியவர்களாக இருந்தர்கள் எனக்கூறினார்கள்.                                        - முஸன்னப் அப்திர்ரஸ்ஸாக் 4:328
இந்த ஆதாரத்தை முன்வைத்து இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அவருடைய கருத்தை முன்வைக்கின்றார்கள். மேலும், அகீகாப் பிராணியின் இரத்தத்தை ஓட்டுங்கள் என்ற ஹதீஸை நாம் ஆதாரமாக் கொண்டால் பறவைகளையும் அகீகாக் கொடுக்க வேண்டி ஏற்படும் என அவர் மாற்றுக் கருத்துடையவர்களுக்கு மறுப்பளிக்கின்றார்.
மேலும், அனைத்து ஹதீஸ்களிலும் ஆட்டையே குறிப்பிடப்பட்டுள்ளது. அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அலீ இப்னு ஹிஸாம் அவர்கள் கூறும்போது: ஹதீஸில் வந்த செய்தியோடு சுருக்கிக்கொள்வதே மிக ஏற்றமாகும். யார் ஓர் ஒட்டகத்தை அகீகா கொடுத்தால் அது செல்லுபடியாகும் என நான் ஆசை வைக்கின்றேன் என்கிறார்கள்.

Thursday, 1 November 2018

ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி செய்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்....

ஆனால், அவரது வீட்டிலோ வறுமை.

ஜகாத் (தர்மம்) பொருட்கள், அரசு கஜானாவில் வந்து குவியும்.
இல்லையென்று வருவோர்க்கு "இதோ இந்த ஒட்டகத்தை ஓட்டிச் செல்", என்று சொல்லுமளவுக்கு அரசின் நிதி நிலை அமோக வளர்ச்சியில் இருந்த காலத்திலும் கூட,

 ஜனாதிபதியின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அடுப்பு பற்ற வைக்க இயலாத அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 2567)

கோதுமை மாவை, சல்லடை செய்து பயன்படுத்த இயலாத அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 5413)

அந்த மாவை கூட தண்ணீர் ஊற்றி பிசைந்து சாப்பிட வேண்டிய அளவிலான கொடிய வறுமை.
(ஆதாரம் புஹாரி 5413)

வயிற்றில் கல்லை நிரப்பிக் கொண்டு பசியாற்றினார்.

பசியின் கொடுமையால் இரவில் இரவில் தூக்கமின்றி அமர்ந்திருந்த வறுமை.

(ஆதாரம் முஸ்லிம் 3799)

உடுத்திய‌ உடைக்கு மாற்று உடை இல்லை என்கிற அளவிற்கு வறுமை.
உடுத்திருக்கும் உடை கூட, வெறும் இரு போர்வைகள்.. (ஆதாரம் புஹாரி 3108)

ஒரு முறை சால்வையொன்றை நபிகள் நாயகத்திற்கு ஒருவர் பரிசளிக்கிறார், நபிகள் நாயகமோ, இதை நான் என் கீழாடையாக பயன்படுத்திக் கொள்கிறேனே என்று அதை அவ்வாறே பயன்படுத்துகிறார்கள்.

போர்வையை வேட்டியாக பயன்படுத்துகின்ற அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 1277)


அவர் ஒரு போதும் தட்டில் வைத்து உணவு உண்டது கிடையாது. துணியை விரித்து அதில் தான் உணவை வைத்து உண்டிருக்கிறார்கள்.
(ஆதாரம் புஹாரி 5386)

இரவில் படுத்துத் தூங்குவதற்கும், பகலில் அதையே முன் வாசல் கதவாய் பயன்படுத்துவதற்கும் தான் பாய் வைத்திருந்தார்கள்.
(ஆதாரம் புஹாரி 730)

தோலினால் ஆன தலையணையை பயன்படுத்தினார்கள்.
(ஆதாரம் புஹாரி 6456)

ஒருவர் படுத்திருந்தால் இன்னொருவரால் நின்று தொழுகை செய்ய இயலாது. அந்த அளவிற்கு சிறிய குடிசையில் தான் நபிகள் நாயகம் வசித்தார்கள். (ஆதாரம் புஹாரி 382)

மேற்கூரை கூட இல்லாத வீட்டில் வசித்தார்கள். அவர்கள் எழுந்து நின்றால் வெளியில் இருப்பவர்களால் அவரது தலையை காண முடியும் (ஆதாரம் புஹாரி 729)


நாமெல்லாம் கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத ஏழ்மை.

நபிகள் நாயகம் அனுபவித்த வறுமையில் 100 ஒரு பங்கினை நாம் இன்றைக்கு அனுபவிக்கிறோமா?

இன்று, பிளாட்ஃபாரத்தில் பிச்சையெடுப்பவனை தான் நாம் பரம ஏழை என்போம்.

நபிகள் நாயகத்தின் வாழ்க்கை, இன்றைக்கு நாம் கருதுகின்ற பரம ஏழையை விடவும் கீழ் நிலையில் தான் இருந்தது என்பதை நம்மால் ஜீரணிக்க இயலுகின்றதா?

இத்தனைக்கும் அப்போது அவர் மன்னர்.
நாட்டுக்கே ஜனாதிபதி.
போர்ப்படை தளபதி..
மார்க்க அறிஞர்.
இறைவனால் நியமிக்கப்பட்ட இறைத் தூதர்,
சமுதாயத்தை நன்னெறிப்படுத்த வந்த புரட்சியாளர்,

என பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட மாமனிதராக அவர் திகழ்ந்தார்.

ஆக‌,
வறுமையிலும் நேர்மை.
வறுமையிலும் ஒழுக்கம்.
வறுமையிலும் வீரம்
வறுமையிலும் நீதி தவறாத நல்லாட்சி
வறுமையிலும் சுய மரியாதை
வறுமையிலும் மிகப்பெரும் புரட்சி..!

நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா??

எண்ணும் போதே உடலெல்லாம் சிலிர்க்கிறது..

மைக்கேல் ஹார்ட் என்கிற கிறித்தவ பாதிரியார், உலகில் மாற்றம் உருவாக்கிய நூறு பேரின் வாழ்வை அலசி, 'The Hundred' என்கிற நூலை வரைந்தார்.
அதில் முதல் இடத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கே வழங்கினார்.

நபிகள் நாயகம்... நாமெல்லாம் கற்பனையிலும் எண்ணிராத ஓர் உத்தம மனிதர்...!

Thursday, 30 August 2018

மனிதன் விந்திலிருந்து படைக்கப்பட்டானா அல்லது

         
மனிதன்_விந்திலிருந்து_படைக்கப்பட்டானா மண்ணிலிருந்து_படைக்கப்பட்டானா?

#பதில்: மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும் படைக்கப்பட்டான்:
அருள்மறை குர்ஆனின் 75வது அத்தியாயம் ஸுரத்துல் கியாமாவின் 37வது வசனம் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

‘(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத் துளிக்குள் அவன் இருக்கவில்லையா?’ (அத்தியாயம் 75 ஸூரத்துல் கியாமா – 37வது வசனம்)

மேலும் அருள்மறை குர்ஆனின் பல இடங்களில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 5வது வசனம் மனிதன் மண்ணிலிருந்தும், இந்திரியத் துளியிலிருந்தும், படைக்கப்பட்டான் என்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

‘..நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும், பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்து படைத்தோம்..‘ (அத்தியாயம் 22 ஸூரத்துல் ஹஜ் – 5வது வசனம்).

மனித உடல் படைக்கப்பட்டிருக்கும் மூலக்கூறுகள் யாவும் (மனித உடலின் ஆக்கக் கூறுகள்) ஒரு சிறிதளவோ அல்லது பெரும் அளவோ பூமியில் இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாம் தெரிந்து கொண்டுள்ள மேற்படி உண்மையானது, மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்கிற அருள்மறை குர்ஆனின் கூற்றுக்கு அறிவியல் தரும் விளக்கமாகும்.

அருள்மறை குர்ஆனின் சில வசனங்கள் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்றும், சில வசனங்கள் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்றும் கூறுகிறது. மேற்படி கூற்று முரண்பாடானது அல்ல. ஒரே நேரத்தில் நடைபெற முடியாத எதிர்மறையான இரண்டு செயல்களுக்கு முரண்பாடு என்று பெயர்.

மனிதன் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான்:
அருள்மறை குர்ஆனின் சில வசனங்கள் மனிதன் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான் என்று கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 25வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபுர்கானின் 54வது வசனம் சொல்லும் பொருளை உதாரணமாகக் கொள்ளலாம்:

‘இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து..‘ ( அத்தியாயம் 25 ஸூரத்துல் ஃபுர்கான் 54வது வசனம்).

மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் படைக்கப்பட்டான் என்று அருள்மறை குர்ஆன் சொன்ன மூன்று கருத்துக்களையும் நவீன அறிவியல், உண்மை என்று நிரூபித்துக் காட்டியுள்ளது.

மேற்படி கருத்துக்கள் எதுவும் முரண்பாடாணது (Contradiction) அல்ல. மாறாக, மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும். (Contradiction).

உதாரணத்திற்கு, ஒரு கோப்பை தேநீர் தயாரிக்கப் பட வேண்டுமெனில் – அதற்கு தேவையான அளவு வெந்நீர் வேண்டும். தேவையான அளவு தேயிலைத் துகளும் வேண்டும். தேநீர் தயாரிக்க வெந்நீர் வேண்டும். அதுபோல தேநீர் தயாரிக்க தேயிலைத் துகளும் வேண்டும் என்று சொல்வதால் – மேற்படி இரண்டு கூற்றுக்களும் வௌ;வேறாக இருந்தாலும், அவைகள் இரண்டும் ஒன்றுக் கொன்று முரண்படவில்லை. அத்துடன் இனிப்பான தேநீர் வேண்டுமெனில், சர்க்கரையும் வேண்டும். இவ்வாறு மேற்சொன்ன மூன்று கருத்துகளில் எந்த கருத்தும் ஒன்றோடு ஒன்று முரண்படவில்லை.

இவ்வாறு அருள்மறை குர்ஆன் மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் படைக்கப் பட்டான் என்று சொன்ன எந்த கருத்தும் ஒன்றொடொன்று முரண்படவில்லை. மேற்படி கருத்துக்கள் எதுவும் முரண்பாடாணது (ஊழவெசயனiஉவழைn) அல்ல. மாறாக, மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும்(ஊழவெசயனளைவinஉவழைn).

உதாரணத்திற்கு ஒரு மனிதன் எப்போதும் உண்மையே பேசக் கூடியவன். அதேசமயம் அவன் ஒரு பொய்யன் என்றும் நான் சொல்கிறேன். மேற்படி எனது கூற்றுக்கள் முரண்பாடானது (Contradiction).

ஆனால் ஒரு மனிதன் நேர்மையானவன். அதே சமயத்தில் கருணை உள்ளம் கொண்டவன். மனிதர்களை நேசிப்பவன் என்று கூறுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும் (Contradiction). முரண்பாடில்லாத, தனிப் பண்புள்ள இரு வேறு கருத்துக்களாகும்.                                            நன்றி ;ABDHUL HAKEEM FB

Sunday, 26 August 2018

நீர் அருந்தும்போது பின் பற்ற படவேண்டிய ஒழுங்கு

                               
                                                 
உட்கார்ந்து கொண்டு நீரை அருந்துங்கள்...
நம் உடலில் 70% நீர் ஆட்கொண்டு உள்ளது...
இந்த நீரை அருந்து வழிமுறைகள் கூட நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறுகிறார்கள்
நீரை நின்று கொண்டு அருந்துவதினால் நம் உடலின் நுரையீரல் முதல் குடல் வரை செங்குத்தாக நீர் பாய்ச்சப்படுகிறது,
மேலும் கடைசியாக இந்த நீர் குடலை கடக்கும் போது நாம் உண்ட உணவுகள் துரிதமாக கலங்கிய நிலையில் வயிற்றுக்கோளாறு களை ஏற்படுத்துகிறது.

இதனால் பித்தப்பைக் கோளாறு,
நுரையீரல் கோளாறு,மற்றும் குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளும் நம் உடலில் ஏற்படுகிறது...

1400 வருடங்களுக்கு முன்னதாகவே அண்ணல் நபி அவர்கள் நீர் அருந்தும் ஒழுங்கு முறை ஒன்றை நபித்தோழர்களுக்கு எடுத்துக்கூறியதை இங்கே நினைவுக்கு கொண்டு வருவது சிறப்பாக அமையும் என எண்ணுகின்றேன்.   

1.பிஸ்மில்லா என்று இறைவனின் பெயரைச் சொல்லி அருந்துங்கள்                              2.தண்ணீரைப் பார்த்து அருந்துங்கள்
3.வலதுகையால் அருந்துங்கள்                              4.உட்கார்ந்து அருந்துங்கள்                                      5.மும்மூன்று மிடர்களாக அருந்துங்கள்.              6.குடித்த பின் அல்ஹம்துலில்லாஹ் என்று
     அல்லாஹுவைப் புகழுங்கள்            

Tuesday, 24 July 2018

கடவுளை விட பார்ப்பணனே சிறந்தவன் என்று இந்துக்களை ஏமாற்றி வருகின்ற கொடுமையே பார்ப்பணீயம் ஆகும் ..

ஆனால்

  இந்து வேதங்களில் சிலைவணக்கம் இல்லை..இந்து மதம் என்பதும் சிலை வணங்குவது கிடையாது..அதன் வாசகங்கள்
சிலை வணக்கம்..பார்ப்பணர் பெருமை..கீழ்சாதி கொடுமை ...ஒழிக்கப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்துக்களை அழைத்து உள்ளது..
அந்த வாசகங்கள் பின் வருகின்றது..
ஆரிய வந்தேறி யூத பார்ப்பணர்கள்
இதனை மறைத்து இந்தியர்களிடம் பார்ப்பணீயம் வளர்க்கவே இந்தியர்களிடம் சூத்திரன் வேதம் படித்தால் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்று என மிரட்டி இந்துக்களிடம் சிலை வணக்கம்,,சாதி கொடுமை வளர்த்தனர்

Concept of God according to Hindu Scriptures:

We can gain a better understanding of the concept of God in Hinduism by analysing Hindu scriptures.

BHAGAVAD GITA:

The most popular amongst all the Hindu scriptures is the Bhagavad Gita.

Consider the following verse from the Gita:

"Those whose intelligence has been stolen by material desires surrender unto demigods and follow the particular rules and regulations of worship according to their own natures."
[Bhagavad Gita 7:20]
 யார் ஒருவர் தன் மனோ இச்சையை (இறைவனை நேசிக்காத அளவிற்கு) பொருள் ஆசையின் பால் பறிகொடுத்து விடுகின்றாரோ அவரே போலியான கடவுள்களையும் இயற்கையையும் வழிபடுவார்கள்.
(பகவத் கீதை 7.20)

The Gita states that people who are materialistic worship demigods i.e. ‘gods’ besides the True God.

UPANISHADS:

The Upanishads are considered sacred scriptures by the Hindus.

The following verses from the Upanishads refer to the Concept of God:

1.  "Ekam evadvitiyam"
"He is One only without a second."

அவன் ஒருவனே..அவனைத்தவிர வேறு யாரும் இல்லை.
[Chandogya Upanishad 6:2:1]1

2.  "Na casya kascij janita na cadhipah."
"Of Him there are neither parents nor lord."
அவனுக்கு பெற்றோர்களும் இல்லை மேலும் அவனுக்கு இறைவனும் இல்லை.
[Svetasvatara Upanishad 6:9]2

3.  "Na tasya pratima asti"
"There is no likeness of Him."
அவனைப்போன்று வேறுயாரும் இல்லை
[Svetasvatara Upanishad 4:19]3

4.  The following verses from the Upanishad allude to the inability of man to imagine God in a particular form:

"Na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam."

"His form is not to be seen; no one sees Him with the eye."
அவனை யாரும் கண்ணால் பார்க்க முடியாது..அவனை யாரும் பார்க்கவும் இல்லை
[Svetasvatara Upanishad 4:20]4

1 [The Principal Upanishad by S. Radhakrishnan page 447 and 448]
[Sacred Books of the East, volume 1 ‘The Upanishads part I’ page 93]

2 [The Principal Upanishad by S. Radhakrishnan page 745]
[Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page 263.]

3 [The Principal Upanishad by S. Radhakrishnan page 736 & 737]
[Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page no 253]

4 [The Principal Upanishad by S. Radhakrishnan page 737]
[Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page no 253]

THE VEDAS
Vedas are considered the most sacred of all the Hindu scriptures. There are four principal Vedas: Rigveda, Yajurveda, Samveda and Atharvaveda.

1. Yajurveda
  The following verses from the Yajurveda echo a similar concept of God:

1. "na tasya pratima asti"
    "There is no image of Him."
அவனுக்கு எங்கும் உருவம் இல்லை
    [Yajurveda 32:3]5

2. "shudhama poapvidham"
"He is bodyless and pure."
அவன் பரிசுத்தமானவன்
[Yajurveda 40:8]6

3. "Andhatama pravishanti ye asambhuti mupaste"
"They enter darkness, those who worship the natural elements" (Air, Water, Fire, etc.). "They sink
deeper in darkness, those who worship sambhuti."   
 இயற்கை மற்றும் சம்பூதி (நாற்காலி,சிலை,மற்றும் உயிரற்ற பொருள்) வணங்குபவர்கள இருளில் மூழ்கிக்கிடப்பவர்களாவர்.
(காற்று,நீர்,நெருப்பு,)

[Yajurveda 40:9]7

4. Sambhuti means created things, for example table, chair, idol, etc.

The Yajurveda contains the following prayer:
"Lead us to the good path and remove the sin that makes us stray and wander."
[Yajurveda 40:16]8

5[Yajurveda by Devi Chand M.A. page 377]

6[Yajurveda Samhita by Ralph T. H. Giffith page 538]

7[Yajurveda Samhita by Ralph T. H. Giffith page 538]

8[Yajurveda Samhita by Ralph T. H. Griffith page 541].

2. Atharvaveda

The Atharvaveda praises God in Book 20, hymn 58 and verse 3:
1. "Dev maha osi"
"God is verily great"
இறைவன் மிகப்பெரியவன்

[Atharvaveda 20:58:3]9

3. Rigveda
1.  The oldest of all the vedas is Rigveda. It is also the one considered most sacred by the Hindus.
The Rigveda states in Book 1, hymn 164 and verse 46:  "Sages (learned Priests) call one God by many
names."
வலிமார்களும்(துறவிகள்) மஹான்களும் ஒரே அல்லாஹ்(இறையோனை) பல பெயரில் அழைப்பார்கள்.
[Rigveda ]




Sunday, 24 June 2018

இஸ்லாமிய அழைப்பாளரான அஹ்மத் தீதாதிடம் ஒரு இறைமறுப்பாளன் கேட்டார்:

நீங்கள் மரணித்து மறுமைநாள் பொய்யென தெரிந்தால் உங்கள் உணர்வு எப்படி இருக்கும்?

தீதாத் சொன்னார்;

நீங்கள் மரணித்து மறுமை நாள் உண்மையென தெரியும் பொழுது உங்களுக்கு ஏற்படும் உணர்வைவிட மோசமாக இருக்காது.

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

நீங்கள் இதுவரை பார்த்திராத அஹமத் தீதாத் வீடியோ
https://m.facebook.com/story.php?story_fbid=1790480224507243&id=1684121598476440

யார் இந்த ஜாகிர் நாயக்
https://m.facebook.com/story.php?story_fbid=1786959881525944&id=1684121598476440

ஜாகிர் நாயக் ,கிறிஸ்தவ போதகருக்கு விட்ட சின்ன சவால்

https://m.facebook.com/story.php?story_fbid=1790108204544445&id=1684121598476440

✘ குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என (தவறான) ஆதாரத்துடன் நிரூபிக்க முயன்ற பாதிரியார்
https://m.facebook.com/story.php?story_fbid=1789010691320863&id=1684121598476440

மனிதன் குளோனிங் மூலம் உயிரினங்களை படைக்க ஆரம்பித்துவிட்டானே; படைக்கும் சக்தியை இறைவனிடமிருந்து மனிதன் பெற்றுக்கொண்டானா...?!
https://m.facebook.com/story.php?story_fbid=1790734021148530&id=1684121598476440

பெண்களின் அரசியல் உரிமைகள்
https://m.facebook.com/story.php?story_fbid=1788560881365844&id=1684121598476440

 அமைதிக்கு மதம் எப்படி தீர்வாக அமைய முடியும்? எத்தியோப்பியாவில் பசியால் சாகும் மக்களுக்கு மதம் எப்படி உதவி செய்யும்?
https://m.facebook.com/story.php?story_fbid=1787806078107991&id=1684121598476440

குர்ஆனில் விஞ்ஞான முறண்பாடு என்ற கற்பனை குற்றச்சாட்டுக்கு மறுப்பு
https://m.facebook.com/story.php?story_fbid=1786580484897217&id=1684121598476440

எல்லா மதங்களும் நல்லதையே போதிக்கும் போது, நான் ஏன் இஸ்லாத்தை ஏற்கவேண்டும்?
https://m.facebook.com/story.php?story_fbid=1785721378316461&id=1684121598476440

மறுபிறவி குறித்து உங்கள் கருத்து
https://m.facebook.com/story.php?story_fbid=1784864705068795&id=1684121598476440

 வேதத்தை கற்றறிந்த ஒரு இந்து சகோதரர் கேட்கும் கேள்வி
https://m.facebook.com/story.php?story_fbid=1780717165483549&id=1684121598476440

✘ பைபிளிலிருந்து குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டதா...?
https://m.facebook.com/story.php?story_fbid=1779353188953280&id=1684121598476440

நபி மொழியை உண்மைப் படுத்தியது விஞ்ஞானம்









சுபஹானல்லாஹ்!! உலகம்
பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது!
நபிமொழியை மெய்ப்பித்தது!
இன்றைய விஞ்ஞானம்!
சொர்க்கம் நரகம் உண்டா..???
மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு கேள்விகள்
கேட்கப்படுவானா...???
1400...ஆண்டுகளுக்கு முன்பு...முகம்மது நபிக்கு யார் சொல்லிக்கொடுத்தது.
எழுத படிக்கத்தெரியாத
முகம்மது நபி இறைவனிடம்
இருந்து... தனக்கு செய்தி
வருவதாக சொன்னார்கள்.
அப்படி வந்த செய்திகள் தான்
திருக்குர்ஆன் அதுமட்டுமின்றி
மக்களுக்கு அவ்வப்போது
சில...ரகசியங்களையும்
சொல்லியுள்ளார்கள்.அப்படி
அவர்கள் சொன்ன.... பல
உண்மையான ரகசியங்களில்
இதுவும் ஒன்று...
மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு [உள்வால்எலும்பு
(# coccyx_bone ) முதுகுத்தண்டின் வேர்ப்பகுதி]
அழியாது....இதை அழிக்கவும்
முடியாது என்று முகம்மது நபியவர்கள் சொன்னார்கள்.
இதை ஆராய்ச்சி செய்ய நினைத்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி
“ஹான்ஸ் ஸ்பீமேன்” இதை தன்னுடைய ஆய்வுக் கூடத்தில் பல ஆயிரம் டிகிரி மூலம் கரிக்கவும் மற்றும்.... பல அமிலங்களைக் கொண்டு கரைக்கவும் முயற்சி
செய்தார் முடிவில் அவருக்கு
கிடைத்தது தோல்வியே...
முடிவில்... முகம்மது
நபிகளின் வாக்கு உண்மையே
என்பதை இந்த உலகுக்கு
தன்னுடைய சோதனையின்
மூலம் நிரூபித்தார்.
இதைத்தான் 1400 வருடங்களுக்கு முன்பே...
அல்லாஹுவின் தூதர்(ஸல்)
அவர்கள் மறுமையில் மனிதனுக்கு அல்லாஹ்
எவ்வாறு உயிர் கொடுப்பான்
என்பதை பின்வரும் நபிமொழி கூறுகிறது..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனின்(மனிதனின் உடலிலுள்ள)
அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும் ;மனிதனின்(முதுகுத்தண்டின்
வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர!....
அதை வைத்தே அவன்
(தன் தாயின் கருவறையில் முதன்முதலாக) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில்)
படைக்கப்படுவான்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5661
பிறகு அல்லாஹ், வானத்திலிருந்து
ஒரு நீரை இறக்குவான்...
உடனே இ(றந்துபோன)வர்கள்
பச்சைப் புற்பூண்டுகள்
முளைப்பதைப் போன்று
எழுவார்கள். மனிதனின்
எல்லா உறுப்புகளும்
(மண்ணுக்குள்) மக்கிப்போய்
விடும்; ஒரே ஒரு எலும்பைத் தவிர! அது (அவனதுமுதுகுத்தண்டின் வேர்ப்
பகுதியிலிருக்கும்)உள்வால்
எலும்பின் (அணுவளவு)
நுனியாகும்.அதை வைத்தே
படைப்பினங்கள் (மீண்டும்
மறுமை நாளில்) படைக்கப்படும்”என்று சொன்னார்கள்.(ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5660