Tuesday 1 May 2018

ரமளான் முதல் பிறை

ரமளான் முதல் பிறை

ரமளானின் முதல் பிறையை கணக்கிடு வதற்கு, அதற்கு முந்தைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் ஆரம்ப, கடைசி நாட்களை கணக்கிடுவதிலும், ரமளானை அடுத்த ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை கணக்கிடுவதிலும் ஒவ்வொரு முஸ்லிமும் அக்கரை காட்டுவது அவசியமாகும்.
ஷஹ்பான் மாதத்தின் நாட்களை கணக்கி டும் முறை

‘ரமளானுக்காக ஷஃபான் பிறையைக் கண க்கிட்டு வாருங்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (திர்மிதி 682)

‘பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்! பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி 1909, திர்மிதி 624)

‘ரமளானுக்கு முன் நோன்பு நோற்காதீர்கர்" நபிமொழி. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள்: அஹ்மத் நஸயீ, திர்மிதி 624)

ஷஃபான் மாதம் சந்திர ஆண்டின் 8 வது மாதமாகும். இது ரமளானுக்கு முந்திய மாதம்.

ரமளான் மாதம் சந்திர ஆண்டின் 9 வது மாதமாகும். நோன்பு வைப்பதற்காக இறைவன் தேர்வு செய்த மாதம்.

ஷவ்வால் மாதம் சந்திர ஆண்டின் 10 வது மாதமாகும். இது ரமளானுக்கு அடுத்த மாதம்.

ரமளான் மாதத்தின் முதல் பிறையை முடிவு செய்வதற்கு, ஷஃபான் மாதத்தின் பிறையை கணக்கிட்டு வர வேண்டும். அதாவது அம்மாதத்தின் முதல் பிறையையும் கடைசி பிறையையும் பார்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முதல் ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.

ரமளான் மாதத்தின் முதல் பிறையைப் பார்த்து நோன்பு வைக்க வேண்டும். ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையைப் பார்த்து நோன்பை விட வேண்டும்.

ரமளான் மாதத்தின் முதல் பிறை மேக மூட்டத்தின் காரணமாக தென்பட வில்லையானால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்த வேண்டும். அடுத்த நாள் ரமளானின் முதல் நோன்பை வைக்க வேண்டும் என்பதை இரண்டாம் ஹதீஸிலிருந்தும், ஷஃபானின் இறுதி நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது என்பதை மூன்றாவது ஹதீஸிருந்தும் விளங்க முடிகிறது. (ஒருவரின் வழமை யான நோன்பு அந்நாட்களில் அமைந்து அவர் நோன்பு நோற்றால் தவறில்லை என்பதை மற்றொரு நபிமொழி கூறுகிறது)

‘ரமளானுக்கு முதல் நாளும், அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது. அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாட்களில் நோன்பு நோற்கலாம்!" (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள்: புகாரி 1914, திர்மிதி 621)

  ரமளான்  மாதத்தின் நாட்களை கணக்கிடும் முறை

ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்" என்பது நபிமொழி. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1907)

ரமளான் மாதத்தின் முதல் பிறை மேகமூட்டத்தால் தென்படவில்லையானால் எவ்வாறு ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமோ அதே போன்று ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை அதே காரணத்திற்காக தென்படவில்லை யானால் ரமளான் மாதத்தையும் முப்பது நாட்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஆனாலும் மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும் என்பதையும் கவனத்தில் கொண்டு பிறையை பார்க்க முயற்சிக்க வேண்டும்.மற்றொரு ஹதீஸில் 30 நாட்கள் என்றும் வந்துள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நான் 29 நாட்கள் நோன்பு நோற்றது, முப்பது நாட்கள் நோற்றதை விட அதிகமாகும்" என்று இப்னு மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூற்கள்: அபூதாவூது 2315, திர்மிதி 625)

நோன்பு என்றால் முப்பது நாட்கள் தான் என்றும் அவ்வாறு முப்பது நாட்கள் அமைய வில்லையென்றால் மனவருத்தம் கொள்வதும் திருப்தி அடையாதிருப்பதும், சிலவேளை ரமளான் மாதத்தின் முதல் பிறையை பார்த்த தகவல்களை அறிந்து மக்களுக்குச் சொல்லும் ஆலிம் அல்லது   நகர ஹாஜியை திட்டுவதும் அறியாமை யால் நடைமுறையில் இருந்து வரும் நிகழ்வுகளாகும்.ஆனால் நபித்தோழர் இப்னு மஸ்வூது அவர்களின் கூற்று அப்படிப்பட்ட வர்களுக்கு நல்ல அறிவுரையாக அமைந்து ள்ளது. 30 நாட்கள் நோன்பு வைக்க வேண்டும் என்பதற்காக ரமளானுக்கு முந்திய மாதமான ஷஃபான் மாதத்தின் இறுதியில் நோன்பு வைப்பதற்கு தடை உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிறையைப் பார்ப்பதும் அதன்படி நோன்பு வைப்பதும் முஸ்லிம்கள் ஒவ்வொருவர் மீதும் பொறுப்பும் கடமையுமாகும் என்பதை உணர்ந்து செயல்படுவோமாக!
 நன்றி Abdhul Hakeem

No comments: