Wednesday 12 March 2014

சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் .




நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய மகள் பாத்திமா (ரலி) அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சமையத்தில்...

அன்னை பாத்திமா (ரலி) மிகவும் ஆவலோடு சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் என்று கேட்கிறார். 

பாத்திமா (ரலி) அவர்கள் கேட்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்து விட்டு... 

எனது அருமை மகளே... 

சொர்க்கத்தின் தலைவி நீ தான். ஆனால் உனக்கு முன்னால் விறகு வெட்டியின் மனைவி ஒருவர் சொர்க்கத்தின் உள்ளே முதல் ஆளாக நுழைவார் என்று கூறுகிறார்கள்.

சொர்க்கத்தின் உள்ளே முதல் ஆளாக நுழைவது விறகு வெட்டியின் மனைவியா ? யார் அவர் என்று மிகுந்த ஆவலோடு கேட்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்....

உனது வீட்டுக்கும் அருகாமையில் தான் அவருடைய வீடு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

அன்னை பாத்திமா நாயகிக்கு ஆவல் அதிகரித்து அப்படி அவரிடம் என்ன கூடுதல் தகுதி இருக்கிறது என்பதை அறிய அவரை சந்திப்பதற்காக தன்னுடைய கணவர் அலி (ரலி) அவர்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டு...

விறகு வெட்டியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டுகிறார்.

யார் அது என்று ஒரு பெண்ணின் குரல் கேட்கிறது. 

நான் தான் நபியின் மகள் பாத்திமா வந்துள்ளேன், தங்களிடம் பேசுவதற்காக வந்துள்ளேன் என்று பாத்திமா (ரலி) கூறுகிறார்.

உலகமே திரும்பி பார்க்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியத்தின் தலைவரான நபிகள் நாயகத்தின் மகள் ஒரு ஏழையின் வீட்டு வாசலில் நின்று கொண்டு நான் தான் பாத்திமா என்று கூறிய அந்த நேரத்திலும்.....

அந்த வீட்டின் கதவு திறக்கவில்லை, என்னுடைய கணவர் இல்லாத நேரத்தில் கதவு திறக்க அனுமதி இல்லை என்று விறகு வெட்டியின் மனைவி கூறுகிறார்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் மகளை காண்பதற்கு எனக்கும் ஆசை தான், ஆனால் என்னுடைய கணவரின் அனுமதி இல்லாமல் கதவு திறப்பதற்கு எனக்கு அனுமதி இல்லை என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

மேலும் அந்த பெண்மணி கூறுகையில்.... 

நாளை தாங்கள் வருவதாக இருந்தால் என்னுடைய கணவரிடம் அனுமதி பெற்று வைக்கிறேன் என்று அந்த பெண்மணி கூறுகிறார்.

அதனடிப்படையில்....

அன்னை பாத்திமா (ரலி) இரண்டாவது நாளாக தன்னுடைய புதல்வர்கள் ஹசன், ஹுசைன் ஆகியோரை அழைத்து செல்கிறார்.

முதல்நாளை போன்று கதவை தட்டுகிறார், முதல் நாளை போல யாரது என்று பெண்ணின் குரல் கேட்கிறது.

நான் தான் நபியின் மகள் பாத்திமா வந்துள்ளேன், என்னுடன் என்னுடைய புதல்வர்கள் இருவரும் வந்துள்ளனர் என்று பாத்திமா (ரலி) கூறுகிறார். 

இரண்டாவது நாளும் கதவு திறக்கப்படவில்லை, நாயகி என்னை மன்னிக்க வேண்டும், தாங்கள் வருவதற்கு தான் அனுமதி பெற்றேன்.

தங்களுடைய புதல்வர்கள் உள்ளே வர அனுமதி இல்லை. நாயகியை மறுத்தமைக்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நான் சொல்லும் வார்த்தைகளை தாங்கள் தயவுசெய்து சிந்திக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கூறுகிறார்.

மூன்றாவது நாளாக புதல்வர்களை விட்டு விட்டு மீண்டும் அதே வீட்டிற்கு அன்னை பாத்திமா (ரலி) செல்கிறார்.

மூன்றாவது நாளும் கதவை தட்டுகிறார், யார் என்று அதேபோல குரல் கேட்கிறது....

நான் தான் நபியின் மகள் பாத்திமா வந்துள்ளேன் என்று அன்னை கூறியவுடன் கதவு திறக்கிறது. 

என்னுடைய கணவரிடம் தங்களுடைய வருகை குறித்து அனுமதி கேட்டேன். பெருமானாரின் குடும்பத்தினர் யார் வந்தாலும் எவ்வித தடையும் இல்லை என்று கணவர் கூறியதாக அந்த பெண்மணி கூறினார்.

அதன்பிறகு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் அஸர் தொழுகை வருகிறது.

இருவரும் தொழுகிறார்கள், தொழுகை முடித்து அன்னை பாத்திமா (ரலி) ஓரமாக அமர்ந்து கொள்கிறார்.

ஆனால் அந்த பெண்மணியோ யா அல்லாஹ் தன்னுடைய சேவை தன்னுடைய கணவனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும், அவருக்கு ஆயுள் பலம், தேக நலம் அளித்திட வேண்டும் என்று கணவருக்காக கண்ணீர் மல்க துஆ செய்கிறார்.

அங்கிருந்து சலாம் சொல்லிவிட்டு அன்னை பாத்திமா அங்கிருந்து விடைபெற்று மறுநாள் தன்னுடைய தந்தையிடம் நடந்தவிகளை சொல்லிவிட்டு அல்லாஹ்வை வணங்காமல் வேறு எதுவும் வணங்க கட்டளை இருந்தால் இனிதான கணவரையே வணங்குவதற்கு அனுமதி பெறுவேன் என்று கூறுகிறார்.

கணவனின் உடமைகளை கவனமாக காத்து கொள்பவள், கணவனின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் நடந்து கொள்பவள், கணவனின் குணமறிந்து கனிவு கொண்டு கடமை செய்பவள், கணவனின் கால் அடியில் காலமெல்லாம் சேவை செய்பவள், கணவனின் ஆணையின்றி வீட்டில் பிறரை சேர்த்திடாதவள், கணவனின் எதிரில் கையை தரக்குறைவாய் நீட்டிடாததவள்...

நாளை சொர்க்கத்தில் நல் இடத்தை பெற்றுக் கொள்வாள் என்றும் நரகத்திலிருந்து தப்பி கொள்வாள்.

எனது அருமை மகள் பாத்திமாவே....
ஒட்டகத்தில் நீ வரும் போது விறகு வெட்டியின் மனைவி ஒட்டகத்தின் கயிறை கையிலே பிடித்தவாறு முதல் ஆளாய் சொர்க்கத்தின் உள்ளே நுழைவார், கண்ணான என் மகளே அடுத்தபடி நீ நுழைவாய்.
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். 

No comments: