Saturday 24 May 2014

விஞ்ஞானிகளை வியக்கவைத்த திரு குர்ஆன்.




விஞ்ஞானிகளை வியக்க வைத்த திரு குர்ஆன்.

விஞ்ஞானிகள்  உறுதிபடுத்தியுள்ளனர்...
திரு குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களின் சொந்த வார்த்தைகள் அல்ல, மாறாக உணமையான இறைவன் வார்த்தைகள் தான் என்று.

20 ஆம் நூற்றாண்டில் கூட கண்டு புடிக்க முடியாத பல விஞ்ஞான தகவல்களை  1439 ஆண்டிற்கு முன்பே அகில உலகத்தையும் படைத்த இறைவன் அதனுடைய வடிவத்தை மிக தெளிவாக கூறிவிட்டான் எந்த வேதங்களிலும் இது வரை சொல்லப்படாத பல உண்மைகளை திருமறை குர் ஆனில் மட்டுமே.. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே..

இந்த நூற்றாண்டில், கருவறையில் உள்ள பல நிலைகளை SCAN செய்து சொல்லப்படுவதை எந்த ஒரு கருவியும், இன்னும் electric கூட இல்லாத அந்த இருண்ட காலத்தில் மிக துல்லியமாக குறிப்பிட்ட குர்ஆன்.

படைப்புக்குளை பற்றி ......

ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சரங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது (13:8)

பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை

வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கிறீர்கள். பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள் (23: 14, 15, 16.)

மலைகளை பற்றி திரு குர் ஆன்

பல அடுக்குகள் கொண்ட இந்த பூமி ஒரு மணிக்கு 5500 Km வேகத்தில் சுழன்று கொண்டும் 100900 km வேகத்தில் நகர்ந்து கொண்டும் சூரியனை சுற்றி வருகிறது.
இவ்வாறான வேகத்தில் ஓடும் பூமி குலுங்காமல் இருபதற்கு காரணம் மலைகள் ஆணி போன்று நிறுவப்பட்டுள்ளது. இதை சமீபமாக கண்டு பிடிதத்தை 
திரு மறையில் அன்றே இறைவன் கூறிவிட்டான்.
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான். (32)

உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).(15)

இது போன்று இன்னும் பல உண்மைகளை கண்டறிந்த மக்கள் இன்று அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி 
தழுவிவருகிறார்கள் இறைவனுடைய நாட்டத்தால்.இன்று இதை படித்து கொண்டிருக்கும் முஸ்லிம் அல்லாத நண்பர்களே சற்று சிந்தியுங்கள் இது போன்ற சத்தியத்தை எடுத்து சொல்லி நேர் வழியில் அழகிய முறையில் அழைக்கும் எங்களை ஏன் பலர் நாங்கள் தீவிரவாதி தீவிரவாதி என்று 
சித்தரிக்கிறார்கள் ????

காரணம் நாங்கள் சத்தியத்தை கொண்டு அசத்தியத்தில் வீசுகிறோம் இறைவன் ஒருவன் தான் என்று. இன்னும் நன்மைகளை ஏவுகிறோம் தீமைகளை தடுக்கிறோம் ஆனால் இதை பிடிக்காத சில எதிரிகள் மீடியாக்களின் வழியாக எங்களை தடுக்க தீவிரவாதி என்று உங்கள் முன் விளம்பரம் செய்கிறார்கள்.

எனவே நீங்கள் திருக்குர்ஆனை திறந்த மனதுடன் படிங்கள் பிறகு நீங்கள் உண்மையை அறிந்து கொள்வீர்கள்,
எங்களுடைய நோக்கம் நீங்கள் புனர் ஜென்மத்தில்(மறுமை வாழ்கையில்) வெற்றி பெற்று சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே.
கீழே உள்ள website bookmark செய்து படித்து வாருங்கள்.
www.thelastchance4u.blogspot.com

நாங்கள் தினமும் உங்களுக்காக பிராத்தனை செய்து வருகிறோம். இறைவன் நாடினால் நீங்கள் முழுவதுமாக நேர்வழி பெறுவீர்கள்.. அந்த மிக பெரிய பாக்கியத்தை உங்களுக்கு அவன் விரைவில் வழங்குவானாக ஆமின்.

No comments: