Saturday 17 May 2014

15 நாள் பிரச்சாரத்தால் 35 ஆயிரம் ஆப்ரிக்கர்கள் இஸ்லாத்தில் இணைந்த அதிசயம்


எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!!     15 நாள் பிரச்சாரத்தால் 35ஆயிரம் ஆப்ரிக்கர்கள் இஸ்லாத்தில் இணைந்த அதிசயம்.....!! எகிப்தை சேர்ந்த ஒரு மார்க்க அறிஞர்களின் குழு மாற்று மதத்தவரிடையே இஸ்லாத்தை எடுத்துரைக்கும் நோக்கில் ஆப்பிரிக்க நாடுகளின் சில கிராமங்களை இலக்காக கொண்டு 15 நாள் பிரச்சார பயணத்தை மேற்கொண்டனர். எகிப்தை சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் நஷாத் அஹ்மத், அஹ்மத் அப்து ரஹ்மான், உமர் சவுத், உள்ளிட்டோரோக்கு மார்க்க அறிஞர் வஹீத் அப்து ஸலாம் தலைமை வகித்தார். இந்த குழு ஆப்பிரிக்க நாடுகளின் பல கிரமங்களை குறிவைத்து தீவிர இஸ்லாமிய அழைப்பு பணியை மேற்கொண்டது. இவர்களின் அயராத முயற்சிக்கு இறைவன் மிகப்பெரிய பலனை கொடுத்தான். அவர்களின் அந்த 15 நாள் பிரச்சாரத்தின் விளைவாக பல்வேறு கிராமங்களை சேர்ந்த 35 ஆயிரம் ஆப்பிரிக்கர்கள் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தில் தங்களை இணைத்து கொண்டனர். சில கிராமங்கள் ஏதோ அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தது போன்ற உணர்வோடு இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டது உண்மையில் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என மார்க்க அறிஞர் வஹீத் அப்து ஸலாம் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இஸ்லாத்தில் இணைந்த மக்களுக்கு தேவைப்படும் பள்ளிகள் மற்றும் மதரஸாக்களை கட்டுவதற்கு தேவையான நிலங்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் அந்த அறிஞர்கள் குழு செய்து கொடுத்தது. இஸ்லாத்தை ஒட்டு மொத்தமாக அறவணைத்து கொண்ட ஒரு கிரமத்தின் பிள்ளைகளோடு மார்க்க அறிஞர் வஹீத் அப்து ஸலாம் இருப்பதை தான் படத்தில் பார்க்கிறீர்கள். நன்றி : சையது அலி ஃபைஜி

No comments: