Friday 16 May 2014

இஸ்லாத்தை ஏற்ற 'நாவிதர்' நரசிங்க ராவ் : 'தாடி'க்கு'நோ ஷேவ்'


ஆந்திர மாநிலம் 'குரும்குடா'வை சேர்ந்த நாவிதர் நரசிங்கராவ், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதோடு 'தாடி'யை மழிக்கும் வேலையை,
இனி முஸ்லிம்களுக்கு செய்வதில்லை என 'அறிவிப்பு' செய்து விட்டார்.

தனது பெயரை 'முஹம்மத் நசீர்' என மாற்றிக் கொண்ட அவர்,

இஸ்லாத்தில் வலியுறுத்தி சொல்லப்படும் தாடியை, தனது கையால் 'சிரைப்பது' இஸ்லாத்தின் கட்டளையை 'சிதைப்பது' போன்ற 'குற்ற உணர்வு' ஏற்படுவதாக கூறுகிறார்,முஹம்மத் நசீர்.

முன்னதாக, இஸ்லாத்தை ஏற்க முடிவு செய்த அவர், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி வகுப்புக்கு (ஒரு மாதம்) சென்று வந்தார்.

இதையடுத்து,நாவிதர் தொழிலுக்குத் திரும்பிய அவர், ஒரு வாரமாக ஆலோசித்து, (30/10/13) முதல் முஸ்லிம்களின் தாடியை மழிக்கும் வேலை செய்வதில்லை என அறிவிப்புப் பலகையை மாட்டி விட்டார்.

முஸ்லிம் இளைஞர்களை அதிகளவு வாடிக்கையாளர்களாக கொண்ட முஹம்மத் நசீர்,

தாடி மழிப்பு குறித்த முடிவால் ஏற்படும் இழப்பு குறித்துக் குறிப்பிடும் போது:

பல தெய்வ வழிப்பாட்டிலிருந்த தனது வாழ்க்கை இழப்பை, இஸ்லாத்தை வழங்கி 'ஈடு' செய்த அல்லாஹ்வே வருமான இழப்பை ஈடு செய்யவும் போதுமானவன் என்றார், முஹம்மத் நசீர். அல்ஹம்துலில்லாஹ் !

No comments: