Saturday 17 May 2014

இஸ்லாத்திற்குச் சதி செய்ய வந்தவர் அழகு விதி கண்டார்; இகழ வந்தவர் அல்லாஹ்வைப் புகழ்ந்து மகிழ்ந்தார்;




அமெரிக்காவைச் சேர்ந்த்த முன்னாள் கிறிஸ்தவரான சரிபா கார்லோ அவர்கள் அமெரிக்காவில் இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்ற சதித்திட்டத்துடன் இயங்கும் ஒரு குழுவில் சேர்ந்து அவ்வென்னத்துடன் முஸ்லிம்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். ஆனால் அல்லாஹ்வோ அதை விட மிக சிறந்த திட்டம் வைத்திருந்தான். என்கிறார்

கார்லோ.

இஸ்லாத்தை சதி செய்ய வந்த அவர் அழகு விதி கண்டார். இகழ வந்ததவர் அல்லாஹ்வை புகழ்ந்தது மகிழ்ந்தார். 

இஸ்லாத்தை சதி செய்ய வந்தது தன்னை சரி செய்து கொண்டார். நெஞ்சுருகினார். இஸ்லாத்துடன் நெருக்கமாகினார். இன்னும் இருக்கமாகினார்.

சாந்தி பெற்று புதிய பாதையில் இப்போது புறப்பட்டு செல்கிறார். இச்சுவையான கதையை அவரே சொல்கிறார்.

நான் எப்படி இஸ்லாத்தில் நுழைந்தேன் என்பது பல கபட திட்டத்தின் ஒரு கதை.நான் திட்டம் தீட்டினேன். என்னுடன் இருந்த குழுவும் திட்டம் தீட்டியது. திட்டம் தீட்டுவதில் அல்லா மிக சிறந்த்தவனாக இருக்கிறான். 

எனது பதின் பருவ காலத்தில் ஒரு நாள் நயவஞ்சக திட்டங்களை தீட்டும் ஒரு குழுவின் பார்வை என் மீது விழுந்த்தது.அவர்கள் அமெரிக்க அரச பதவிகளில் உள்ளவர்கள்.இக்குளுவோ தளர்வான தனிநபர்கள் கொண்ட ஒரு கூட்டனையாகத்தான் இருந்த்தது. அவர்களிடம் இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்ற ஒரு திட்டம் இருக்கிறது. 
நான் அறிந்த்த மட்டும் இது ஒரு அரசாங்க சார்பான ஒரு குழுவாக தெரிய வில்லை.தமது நிலைப்பாட்டை முன்னிறுத்தி தமது காரியங்களை முன்னெடுக்கவே அமெரிக்க அரசாங்கதிதில் வேலையில் சேர்ந்திருக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது. 
எனது பேச்சில் உள்ள தெளிவையும் எனது இயல்பில் உள்ள உந்துதல் உணர்வையும் பெண்கள் உரிமைகள் பரிந்த்துரைப்பதில் நான் காட்டும் அக்கறையையும் கண்ட இக்குழுவில் உள்ள ஒருவர் என்னை அணுகி மத்திய கிழக்கை மையமாகக்கொண்ட சர்வதேச கல்வியை நான் கற்று தேர்ந்ததால் எனக்கு எகிப்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வேலை பெற்றுத்தருவதாக திடமானதொரு வாக்குறுதியை வழங்கினார்.

அவர் நான் எகிப்துக்கு புக வேண்டும் என் நிலையை பயன்படுத்தி அங்குள்ள முஸ்லிம் பெண்கலுடன் பேசி பழகவும் மற்றும் அனுபவமற்ற பெண்கள் உரிமைகள் இயக்கங்களை ஊக்குவித்து அதனூடாக இக்குழுவின் திட்டங்களை அமுல் படுத்திடவும் நினைத்தார் 
இது ஒரு நல்ல யோசனையாக எனக்கு தோன்றியது. முஸ்லிம் பெண்களுடன் இருபதாம நூற்றாண்டின் சுதந்த்திற ஒளியைக்கான வேண்டும் என்ற அவா எனக்குள் இருந்தது. காரணம் முஸ்லிம் பெண்களை ஒரு நலிவுற்ற ஒடுக்கப்பட்ட ஒரு குழுவாகவே நான் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். 

இதன் நோக்கத்தை அடைவதற்கான முதல் மைல் கற்களாக கல்லூரிக்கு சென்று குரான் ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய வராலாறு என்பன கற்றேன். வார்த்தைகளை தெளிவு படுத்திக்கூறி வசியப்படுத்தும் உத்தியையும் கற்றுக்கொண்டேன். திரிவு படுத்தும் என் பணிக்கு என் புலனும் சொன்னது. என் மனதை ஒரு பீதியும் ஆட்கொண்டிருந்தது.இஸ்லாத்திற்கெதிராக செயற்படவேண்டும் என்ற குறிக்கோளுடன் நான் கிறித்துவத்தை பற்றி நன்றாக தெரிந்தது கொள்ள வகுப்புகள்யெடுக்க பட்டேன் . ஹாவேட் பல்கலைக்கழகத்தில் இறையியல் முனைவர் பட்டம் பெற்றவரும் புகழ் பெற்றவருமான ஒரு பேராசிரியரிடமே இதைக்கற்க வேண்டும் என முடிவு செய்தேன்
.
நான் விரும்பியதைபோல் நல்ல ஒரு ஆசிரியர்அமைந்தார். வகுப்புகள் நடந்தேறின. நான் படிக்கும் பாடங்களுக்கும் எனது திட்டத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தததை ஒரு கட்டத்தில் என்னால் உணர முடிந்ததது. கடைசியில் இந்த பேராசிரியர் ஒரு யுனிடீரியன் கிறிஸ்தவர் என்பதை அறிந்தது கொண்டேன். அவர் ட்ரினிடி கொள்கையை அடியோடு மறுப்பவர். அவர் பைபிளில் மனிதர்கள் சிரழிக்க பட்டவைகளையும் நீர்த்தவைகளையும் நீக்கப்பட்டவைகளையும் கலப்படம் செய்தவற்றையும் அவை எவாறு வரலாற்று நிகழ்வுகளால் வடிவம் கொடுத்து மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் சான்றுகளுடன் எடுத்து விளக்கினார். 

இந்த கல்வி முடிவடைந்த போது இத்தனை கால எனது நம்பிக்கை நலிவடைய ஆரம்பித்தது. நூற்றுக்கு நூறு உண்மையானது என நம்பிய எனது மதம் மனிதக்கரங்களால் மாசுபடுத்தப்பட்டிருப்பதை எனது கல்வி சந்தேக மின்றி நிரூபித்து காட்டியது. 

சதித்திட்டங்கள் சந்தேகத்திற்குள்ளாயின. மணம் மார்க்கமின்றி வெருமையாகியது. ஏமாற்றப்பட்ட உணர்வுடன் ஊமையாகியது.நான் சோர்ந்து போனேன். இந்நிலை என்னை சிறுமை ஆக்கியது. வெறுமை போக்க உள்ளம் உண்மையைதேடியது. 

ஆனால் இஸ்லாம் உண்மை என்பதை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் எனக்குள் இருக்கவே இல்லை. காலம் கடந்துகொண்டே இருந்தது. எனது ஆய்வும் தொடந்து கொண்டே இருந்தது. கற்றலில் மூன்று ஆண்டுகள் கடந்தன. அத்துடன் முஸ்லிம்களிடம் அவர்களும் நம்பிக்கை பற்றி அடிகடி கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்படி கேட்ட ஒருவர் முஸ்லிம் மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான அப்துலாஹ் ஆவார். 

மார்க்கம் பற்றிய தேடலில் எனக்குள்ள ஆர்வத்தை கண்ட அவர் அவரின் சொந்தத அலுவலை போன்று உற்சாகத்துடன் இஸ்லாம் பற்றிய ஒரு நல்ல அறிமுக அறிவை எனக்கு ஊட்டினார். நானும் அவரும் சந்ததிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த பணியை அவர் செய்தார். இது நான் செல்ல இருந்த சதி வழியை துவக்கத்திலேயே துவம்சம் செய்தது. 

அல்லா அவனின் அருட்கொடைகளை அந்த சகோதரனுக்கு அதிகரிக்கச் செய்வானாக.

ஒருநாள் இவர் என்னை தொடர்பு கொண்டு முஸ்லிம் குழு ஒன்று நமது நகரத்திற்கு வரவுள்ளதாகவும் அவர்களை நான் சந்ததிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எனது மார்க்கத்தின் மீதுள்ள என் நம்பிக்கை சிதறுண்டு போய் நான் வழி தடுமாறி நின்றதாலும் சகோதரரின் தக்வாவில் உண்மை நிறைந்திருப்பதாலும் அவரின் அழைப்பை விருப்போடு ஏற்றுக்கொண்டேன். எனது சந்திப்புக்கு இஷா தொழுகையின் பின் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. 

என்னை அழைத்துச்சென்றார்கள் அங்கே சில ஆண்கள் அமர்ந்த்திருந்தனர். நான் உட்கார ஓர் இடமும் அமைத்திருந்தனர். நான் அங்கே முதிர்ச்சியான பண்புள்ள ஓர் பாகிஸ்தான் சகோதரர் முன் நேருக்கு நேராக அமர்ந்திருந்தேன். அவரிடம் கிறிஸ்தவம் பற்றிய ஆழமான அறிவும் தெளிவும் இருப்பதை அறிந்தது கொண்டேன் .நானும் அவரும் பைபிளிலும் மற்றும் குரானிலும் உள்ள பகுதிகளைப் பற்றி கலந்துரையடினோம். வாதிட்டோம். எமது கருத்துப்பதிவுகள் சுபுஹு தொழுகை வரைக்கும் இழுத்துச்சென்றது.

என்னை இந்த மகான் இஸ்லாத்துக்குள் அழைத்ததும் எனக்குள் ஒரு வித விசை அலுத்தப்பட்டதுபோல் உடல் முழுவதும் வெளிச்சம் பரவியது. அவரின் அழைப்பு உண்மை என்றது. இரும்புத்துகல்களை இழுக்கும் காந்த்தம் போல் சிந்தனைகள் எல்லாம் உள்ளத்தில் சங்கமமாகி தெளிவாகின. உண்மை தெளிவாயின இறுதியில் இறைவனின் இஷ்டம் முடிவானது.

எல்லாம் வல்ல அல்லா என் உள்ள கதவை திறந்தான்.ஆங்கிலத்திலும் அராபியிலும் சஹாதாவை சொல்லிதந்தார். ஓர் அழகிய விசித்திர உணர்வு என்னுள் ஊர்ந்துகொண்டிருந்தது. வாழ்க்கையில் முதன் முறையில் இன்றுதான் மூச்சு விடுவதைப்போல மூச்சு முட்டி திணறியது.

அல்ஹம்துலில்லாஹ் அல்லா எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை தந்த்திருக்கிறான்.

எனது பிரார்த்தனை நாம் எல்லோரும் மரணிக்கும் வரைக்கும் முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லிமாக மரணிக்க வேண்டும் என்பதே...

ஆமீன்

No comments: